search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுங்காட்சி"

    ஆளுங்கட்சியின் குரலாகத் தான் ரஜினி இருக்கிறார் என்று திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது :-

    மக்கள் விரோத மத்திய பா.ஜனதா அரசு மற்றும் அ.தி.மு.க. அரசை அகற்றும் நோக்கத்துடன் மாற்றுக் கொள்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்குகிறது.

    இதன் நிறைவு நாள் கூட்டம் திருச்சியில் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார். மத்திய அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு முதல் கூட்டம் கூட நடக்கவில்லை.

    ஜூன்.12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது. நீட் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ரத்து செய்ய போராட வேண்டும். இதற்கு தற்கொலைகள் தீர்வு ஆகாது.

    தமிழக அரசின் தொழிற்துறை மானியக் கோரிக்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்பதை தெளிவாக்கியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. ஆகியவை தான் இதற்கு காரணம்.

    தூத்துக்குடி துப்பாக்கி சுடும் சம்பவத்தில் ரஜினியின் கருத்து மக்களுக்கு எதிராக உள்ளது. மக்களை இழிவுப்படுத்திய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆளுங்கட்சியின் குரலாகத் தான் ரஜினி இருக்கிறார்.

    கமல் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றது மூலம் அந்த அமைப்பிற்கு சமூக அந்தஸ்தை கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தில் சகிப்பின்மையை பற்றி பேசுவது மதுக்கடையில் இருந்து கொண்டு மதுபானத்திற்கு எதிராக பிரசாரம் செய்வது போன்றது.

    இதில் அவர் பங்கேற்றிருக்க கூடாது. பா.ஜ.க.வை வீழ்த்த மதசார்ப்பற்ற கட்சிகளோடு தேர்தல் நேரத்தில் கைகோர்ப்பது என்கிற முடிவை எடுத்துள்ளோம். தேர்தல் நேரத்தில் அதற்கான யுக்தியை கையாள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth
    ×