search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வில் தகவல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் இரவு சாப்பிட்ட பிறகு மெதுவாக 2 நிமிட நேரம் நடந்தால் போதும் சர்க்கரையின் அளவு குறையும் என்று சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
    • இரவில் சாப்பிட்டு விட்டு உடனே தூங்க செல்வது ரத்தத்தில் குளுகோஸ் அளவை அதிகரிக்கும். எனவே தான் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்குள் 2 நிமிடம் மெதுவாக நடக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    சென்னை:

    இந்தியாவில் 7 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை 2045-ம் ஆண்டு 13 கோடியாக உயரலாம் என்று கணித்துள்ளார்கள்.

    வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரையுடன் தான் சர்க்கரை நோயாளிகள் அலைகிறார்கள். ஆனாலும் சர்க்கரை அளவு கட்டுப்படாமல் அவ்வப்போது உயர்ந்து விடுவதும் உண்டு. எப்படித்தான் கட்டுக்குள் வைத்திருப்பது என்று புரியாமல் சர்க்கரை நோயாளிகள் தவிப்பதும் உண்டு.

    தினமும் இரவு சாப்பிட்ட பிறகு மெதுவாக 2 நிமிட நேரம் நடந்தால் போதும் சர்க்கரையின் அளவு குறையும் என்று சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    இரவில் சாப்பிட்டு விட்டு உடனே தூங்க செல்வது ரத்தத்தில் குளுகோஸ் அளவை அதிகரிக்கும். எனவே தான் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்குள் 2 நிமிடம் மெதுவாக நடக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    டைப்-2 சர்க்கரை நோயாளிகள் 5 நிமிடம் வரை நடப்பது நல்லது. சாப்பிடும் போது சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பது தெரிந்ததே. இதை குறைக்க 3 வழிகள் உண்டு என்கிறார் டாக்டர் மோகன்.

    ஒன்று, கார்போ ஹைட்ரேட் அளவு குறைவான உணவை எடுத்துக் கொள்வது.

    இரண்டாவது, மருந்துகளை முன் கூட்டியே சாப்பிடுவது.

    3-வது, நடைபயிற்சியில் ஈடுபடுவது.

    அவ்வாறு சாப்பிட்ட பிறகு நடப்பதால் தசை, செல்கள் செயல்படும். அதற்கு குளுகோஸ் தேவைப்படும். உணவில் இருந்து வரும் குளுகோஸ் அதற்கு பயன்படும்.

    இரவில் நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதும் உடனே தூங்க செல்வதும் கொழுப்பை அதிகரிக்க வைக்கும். கல்லீரலில் கொழுப்பு தங்கும். இதுதான் பேட்டி லிவரை உருவாக்கும்.

    அதே நேரம் இதய நோய் இருப்பவர்கள் சாப்பிட்டவுடன் நடக்க கூடாது. இந்த தகவல்கள் வெளிநாட்டு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.

    வெளிநாடுகளில் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் நம் நாட்டை பொறுத்தவரை உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் வேறுபட்டவை, அரிசி உணவை நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். எனவே வெளிநாடுகளில் கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டிருப்பது நம் நாட்டில் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பதை நம் நாட்டு சூழலில் ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் டாக்டர் சவுந்தரராஜன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பீர் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு மற்றும் உடல் எடை அதிகரிக்காமல் குடல் நுண்ணுயிரிகளின் பன்முக தன்மைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • சிவப்பு ஒயினில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவை போல பீரிலும் நன்மை பயக்கும் பாலிபினாக்கள் உள்ளதாக ஆய்வு நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

    குடி குடியை கெடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் பீர் குடித்தால் நீரிழிவு, இருதய நோய்களை தடுக்கும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வடக்கு போர்ச்சுக்கல்லில் உள்ள போர்ட்டோ நகரில் சுகாதார தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகளுக்கான ஆராய்ச்சி மையம் உள்ளது.

    இந்த மையம் 23 வயதில் இருந்து 58 வயதுக்குட்பட்டவர்கள் சிலரை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதாவது தொடர்ந்து 4 வாரங்கள் அவர்களை ஆல்கஹால் இல்லாத 330 மில்லி கிராம் பீரை குடிக்க வைத்தனர். இதில் அவர்களுக்கு நுண்ணுயிரிகளின் செயல்பாடு மேம்பட்டது தெரிய வந்தது.

    இந்த நுண்ணுயிரிகள் நீரிழிவு, இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆல்கஹால் இல்லாத பீர் குடித்தால் தான் இதுபோன்ற செயல்பாடுகள் உடலில் நிகழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பீர் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு மற்றும் உடல் எடை அதிகரிக்காமல் குடல் நுண்ணுயிரிகளின் பன்முக தன்மைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சிவப்பு ஒயினில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவை போல பீரிலும் நன்மை பயக்கும் பாலிபினாக்கள் உள்ளதாக ஆய்வு நடத்தியவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஆல்கஹால் கலந்த பீரை சாப்பிடுவதால் இந்த நன்மை எதுவும் கிடைக்காது என அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

    • உபேர் நிறுவனம் நடத்திய ஆய்வில் கார்களில் மறந்துவிட்டு செல்லும் பொருட்களில் செல்போன் முதலிடத்தில் உள்ளது.
    • 2-வதாக கேமராவும், 3-வதாக லேப்-டாப்பும் உள்ளது. பேக், பணப்பை (பர்ஸ்), ஸ்பீக்கர், துணி, மளிகை பொருட்கள், பணம், தண்ணீர் பாட்டில், ஹெட்போன் ஆகியவை முறையே 4 முதல் 10 இடத்தில் உள்ளன.

    நாடு முழுவதும் வாடகை கார்களை ஆப் மூலம் புக் செய்து பலர் பயன்படுத்தி வருகிறார்கள். பயணம் செய்த பிறகு கார்களில் ஏதாவது பொருளை மறந்து தவறவிட்டு வரும் அனுபவம் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கார்களில் அதிகம் பேர் தவறவிட்ட பொருள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. உபேர் நிறுவனம் நடத்திய ஆய்வில் கார்களில் மறந்துவிட்டு செல்லும் பொருட்களில் செல்போன் முதலிடத்தில் உள்ளது.

    2-வதாக கேமராவும், 3-வதாக லேப்-டாப்பும் உள்ளது. பேக், பணப்பை (பர்ஸ்), ஸ்பீக்கர், துணி, மளிகை பொருட்கள், பணம், தண்ணீர் பாட்டில், ஹெட்போன் ஆகியவை முறையே 4 முதல் 10 இடத்தில் உள்ளன.

    அதேபோல் செல்போன் சார்ஜர், கிரிக்கெட் பேட், பிறந்தநாள் கேக், கல்லூரி சான்றிதழ், இனிப்பு அடங்கிய பெட்டி உள்ளிட்டவற்றையும் கார்களில் மறந்து விட்டு சென்றுள்ளனர்.

    அதிகம் பேர் கார்களில் பொருட்களை மறந்து தவறவிடும் நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது.

    2-வது இடத்தில் டெல்லி, 3-வது இடத்தில் லக்னோ, 4-வது இடத்தில் கொல்கத்தா ஆகிய நகரங்கள் உள்ளன. மதியம் 1 மணி முதல் 3 மணிவரை பயணிப்பவர்களே அதிகளவில் பொருட்களை மறந்துவிட்டு செல்கிறார்கள்.

    சனிக்கிழமைகளில் துணிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் தண்ணீர் பாட்டில், திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஹெட்போன் அல்லது ஸ்பீக்கர்களை அதிகம் பேர் மறந்துவிட்டு சென்று உள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரவு தூங்காமல் கண்விழித்து வேலைப்பார்ப்பவர்கள் ஆரோக்கியம் அதிக அளவு பாதிக்கப்பட்டு நோய்கள் ஏற்படும் என புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஏற்பட்டுள்ளது. #research
    வாஷிங்டன்:

    உலகில் உள்ள மக்கள் பரப்பரப்பான் சூழ்நிலையில் வேலைப்பார்த்து வரும் நிலையில் அவர்களுக்கு இரவு, பகல் என்பது தெரியாமல் போனது. அதனால் அவர்கள் இரவு கண்விழித்து பணிபுரிகின்றனர். இரவு தூங்காமல் கண்விழித்து பணிபுரிவதால் பல் நோய்கள் ஏற்படும் என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஆய்வின் படி, இரவில் வேலைப்பார்க்கும் போது ரத்தத்தில் உள்ள புரோட்டின் அதிகரிக்கிறது. அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. இதனால் எளிதாக நோய்கள் ஏற்படுகின்றன. இது மற்றவர்களை விட இரவு பணியில் ஈடுபடுவர்களை விட அதிகமாக ஏற்படுகிறது.

    இந்த ஆய்வில் மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரோட்டின் சோதனை செய்யப்பட்டது. 24 மணி நேரத்தில் தூக்கம், உணவு நேரங்களில் புரோட்டினின் அளவு எவ்வாறு இருக்கிறது என்பதன் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. இது இரவில் வேலைப்பார்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #research
    ×