search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வில் தகவல்"

    • 1,226 பேரிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
    • ஆய்வின் போது பல கேள்விகள் கேட்கப்பட்டது.

    இன்றைய காலகட்டத்தில் செல்போன் ஒருவருடைய வாழ்க்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. செல்போன் பயன்பாட்டால் சில சமயங்களில் நன்மையும், சில சமயங்களில் விபரீதங்களும் ஏற்படுகின்றன.

    இந்நிலையில், வீடியோ கேம்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையான குழந்தைகள் எதிர்காலத்தில் மனநோய்க்கு ஆளாக நேரிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இளமைப் பருவத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டால் ஒரு நபர் 23 வயதை அடையும் போது சித்தப்பிரமை, பிரமைகள், மாயத்தோற்றங்கள் மற்றும் 'வினோதமான யோசனைகள்' கொண்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.


    ஆராய்ச்சியின் போது, பங்கேற்பாளர்கள் துன்புறுத்தும் எண்ணங்கள், வினோதமான அனுபவங்கள் மற்றும் புலனுணர்வு அசாதாரணங்களை அனுபவித்திருக்கிறீர்களா என்பதை தீர்மானிக்க கேள்விகள் கேட்கப்பட்டன. பதில்களை ஆராய்ந்து, இளமைப் பருவத்தில் வீடியோ கேம்களை அதிகம் விளையாடுவது 3-7 சதவீதம் அதிகமான மனநோய் அனுபவங்களுடன் தொடர்புடையது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

    1997 மற்றும் 1998 க்கு இடையில் பிறந்த 1,226 பேர்களிடம் நடத்திய தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த ஆய்வு, ஜமா மனநல மருத்துவம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    • தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.
    • 2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஆராய்ச்சியாளர்களான செல்வி வர்ஷினி நீதிமோகன், டாக்டர் சிரிஜா மற்றும் டாக்டர் கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் முரளிதான் ஆகியோரை உள்ளடக்கிய ஐ.ஐ.டி. மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வு முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களில் (சி பிரிவு) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது.

    அறுவை சிகிச்சை (சி பிரிவு) மகப்பேறு என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதற்காக தாயின் வயிற்றில் கீறலை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை நுட்பமாகும்.


    மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை உயிரை காக்க கூடியது. அதே நேரத்தில் நிச்சயமாக தேவையற்ற வகையில் மேற்கொள்ளும் போது பாதகமான பல்வேறு சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.

    தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட்டது. சத்தீஸ்கரை பொறுத்தவரை கர்ப்பகால சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள கருவூருதல் ஆகியவை அதிகமாக காணப்பட்டன. தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிக அளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையை பொறுத்தவரை 2016-ல் இந்த எண்ணிக்கை 43.1 சதவீதமாக இருந்த நிலையில் 2021-ல் 49.7 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

    நகர்ப்புறங்களில் வசிக்கும் நன்கு படித்த பெண்கள் அறுவை சிகிச்சை பிரசவம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    குறைந்த எடையுள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடக்கின்றன. அதிக எடை கொண்ட பெண்கள் குழந்தை பெற்று கொள்ளும் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் 35-49 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பெறுவது 11.1 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்திருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தனியார் ஆஸ்பத்திரிகளில் நடைபெற்ற மகப்பேறுகளில் 4 மடங்கு அளவிற்கு அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்று உள்ளது. சத்தீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் ஆஸ்பத்திரிகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும், தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்து உள்ளது.

    • பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது
    • பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம்

    பெட்ரோல், டீசல், மின்சார கார்களின் காற்று மாசு குறித்து 'எமிஷன் அனலைடிக்ஸ்' (Emission Analytics)என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் மின்சார கார்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல், கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக காற்று மாசு துகள்களை வெளியிடுகிறது. அதன் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது. அரை டன் பேட்டரி மின்சார வாகனத்தில் இருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.

    மின்சார வாகனங்கள் காற்றுமாசை குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து தான் அதிக காற்று மாசு வெளியேறுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

    எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன.

    பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றுவதாக கூறி மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவால் வாகன ஓட்டிகள், நுகர்வோர்கள் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    • 5 வயது முதல் 17 வயது வரை உள்ள 1,124 மாணவ-மாணவிகளிடம் உடல் எடை மற்றும் உயரம் கணக்கிடும் பி.எம்.ஐ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • துரித உணவு பழக்கமே (பாஸ்ட்புட்) உடல் குண்டாவதற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை நகரில் உள்ள பள்ளி மாணவர்களில் 5 பேரில் ஒருவர் உடல் பருமனாகவும், அதிக எடை கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தனியார் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவமனை ஆகியவை பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் எடை குறித்து ஆய்வு நடத்தியது. 5 வயது முதல் 17 வயது வரை உள்ள 1,124 மாணவ-மாணவிகளிடம் உடல் எடை மற்றும் உயரம் கணக்கிடும் பி.எம்.ஐ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 584 பேர் மாணவிகள் ஆவார்கள்.

    இந்த ஆய்வில் 40 சதவீத மாணவ-மாணவிகள் வயதுக்கு மிஞ்சிய கூடுதல் எடையுடன் உடல் பருமனாக இருப்பது தெரியவந்துள்ளது. 667 பேருக்கு (59.43 சதவீதம்) உடல் எடை இயல்பாக இருக்கிறது. 237 பேர் (21.08 சதவீதம்) அதிக எடையிலும், 220 பேர் (19.5 சதவீதம்) உடல் பருமனாகவும் உள்ளனர்.

    அதிக எடை அல்லது உடல் பருமன் பாதிப்பு இந்தியாவில் உள்ள பல பள்ளி ஆய்வுகளில் காணப்பட்டதைவிட இது அதிகமாக உள்ளது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.


    துரித உணவு பழக்கமே (பாஸ்ட்புட்) உடல் குண்டாவதற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, "உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, துரித உணவுகளை அதிகப்படியாக பயன்படுத்துவது, செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது, வீடுகளில் இருந்து வாகனங்களிலேயே பள்ளிக்கு செல்வது உள்ளிட்ட காரணங்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்தது" என்றார்.

    • பல்வேறு வகையான ஆய்வுகள் மூலம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் மழை பாதிப்புக்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
    • 97 சதவீத பகுதிகள் மிச்சாங் புயல் மழையால் பாதிப்பை சந்தித்து உள்ளன.

    சென்னை:

    சென்னை கடலோர பகுதியில் கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் சுமார் 17 மணி நேரம் மிச்சாங் புயல் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரம் வரலாறு காணாத மழையை எதிர்கொள்ள நேரிட்டது.

    இடைவிடாத மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்தநிலையில் சென்னையில் எந்தெந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன? எந்தெந்த பகுதிகளில் குறைவான பாதிப்பு ஏற்பட்டது? என்பது பற்றி அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.

    அந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 சதவீத பகுதிகள் மிச்சாங் புயல் மழையால் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, கோடம்பாக்கம், மாம்பலம் பகுதிகளில் அதிகபட்ச பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அம்பத்தூர் பகுதிகளில் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மிக மிக குறைவான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு வகையான ஆய்வுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் மழை பாதிப்புக்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    மழைநீர் கால்வாய்கள் மற்றும் தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாகவே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 சதவீதம் மட்டுமே மழை பாதிப்பில் இருந்து தப்பி உள்ளன.

    97 சதவீத பகுதிகள் மிச்சாங் புயல் மழையால் பாதிப்பை சந்தித்து உள்ளன.

    • வீட்டில் கற்றல் சூழல் குறித்த கேள்விகளில் 40 சதவீத பெற்றோர்கள் பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வாசிப்பு பொருட்கள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர்.
    • பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களில் 84 சதவீத பெற்றோர் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.

    புதுடெல்லி:

    கொரோனா காலத்தில் உலகமே பொதுமுடக்கத்தை சந்தித்தது. அந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில், சிறிது காலத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.

    இதனால் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை அதிகளவு பயன்படுத்த தொடங்கினர். ஆரம்பத்தில் மாணவர்களின் கல்விக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை தற்போது மாணவர்கள் படிப்பை விட பொழுது போக்கிற்காக அதிகளவில் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த 8-ந்தேதி புதுடெல்லியில் ரூரல் இந்தியாவில் தொடக்க கல்வி குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கிராமப்புறங்களில் மாணவர்கள் படிப்பிற்காக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது தொடர்பான இந்த ஆய்வில் மாணவர்களின் பெற்றோர்களிடமும் பதில்கள் கேட்டு பெற்றுள்ளனர்.

    21 மாநிலங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் உள்ள 6 முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களின் பெற்றோர் 6,229 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளது. இவர்களில் 6,135 பேர் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை கொண்டிருந்தனர். 56 பேர் பள்ளியை விட்டு வெளியேறிய குழந்தைகள் மற்றும் 36 பேர் பள்ளியை சேராத குழந்தைகளின் பெற்றோர் ஆவர்.

    இந்த ஆய்வில் இந்தியாவில் கிராமப்புறங்களில் 49.3 சதவீத மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் அதில் 34 சதவீதம் பேர் மட்டுமே அவற்றை படிப்பிற்காக பயன்படுத்துகின்றனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சுமார் 76 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் வீடியோ கேம்கள் விளையாட மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதாக கூறி உள்ளனர். 56.6 சதவீதம் பேர் மாணவர்கள் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கும், 47.3 சதவீதம் பேர் அவற்றை பதிவிறக்கம் செய்து இசையை கேட்க பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    34 சதவீதம் பேர் மட்டுமே ஆய்வு பதிவிறக்கங்களுக்காக மொபைல் போன்களை பயன்படுத்துவதாகவும், 18 சதவீதம் பேர் மட்டும் டூட்டோரியல்கள் மூலம் ஆன்லைன் கற்றலை அணுகி இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பெண் குழந்தைகளின் பெற்றோர்களில் குறைந்தது 78 சதவீதம் பேரும், ஆண் குழந்தைகளின் பெற்றோர்களில் 82 சதவீதம் பேரும் தங்கள் குழந்தைகளை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படிக்க வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்கள் ஸ்மார்ட் போன்களுக்கான பயன்பாட்டை அதிகமாக பெற்றுள்ளனர்.

    வீட்டில் கற்றல் சூழல் குறித்த கேள்விகளில் 40 சதவீத பெற்றோர்கள் பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வாசிப்பு பொருட்கள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர். ஒவ்வொரு நாளும் 40 சதவீத பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுடன் பள்ளியில் கற்றல் பற்றி தாங்கள் குழந்தைகளுடன் உரையாடுவதும், 32 சதவீதம் பேர் வாரத்தில் சில நாட்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுடன் கல்வி குறித்து உரையாடுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    மேலும் பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களில் 84 சதவீத பெற்றோர் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
    • இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர்.

    வாஷிங்டன்:

    இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே நேரம் நாளும், பொழுதும் செல்போன்களில் மூழ்கி விடுவதால் பேராபத்துகளும் எதிர்கால சந்ததியினருக்கு சூழ்ந்துள்ளன.

    அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் லாப நோக்கம் இல்லாத சாப்பியன் எனும் தனியார் ஆய்வகம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது. உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர்.

    இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர்கள் கூறும் போது, தற்போது குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை கொடுப்பது நாகரீகமாகவும், கவுரவமாகவும் ஆகிவிட்டது. இதன் மூலம் தமது குழந்தைகள் டிஜிட்டல் அறிவை பெறுவார்கள் என பெற்றோர்கள் நம்புகின்றனர்.

    ஆனால் அவர்களின் எதிர்காலத்தை நீங்கள் சூனியம் ஆக்கிக் கொள்கிறீர்கள் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தைக்கு எவ்வளவு முன்னதாக ஸ்மார்ட்போன் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இளம் வயதிலேயே மனநல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    சிறுவயதிலேயே ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்த இளைஞர்கள் அதிக தற்கொலை எண்ணங்களுடனும், யதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பது போன்ற உணர்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து அவர்கள் ஒதுங்கி இருக்க நினைக்கிறார்கள். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடும் எண்ணங்கள் அவர்களுக்கு குறைந்திருந்தது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    6 வயது முதல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் இளம்பெண்களில் 74 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருப்பதும், கடுமையான மனநல சவால்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக நரம்பியல் நிபுணர் தியாகராஜன் கூறும்போது, குழந்தைகள் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆன்லைனில் செலவிடுகிறார்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    இது வருடத்திற்கு 2,950 மணி நேரம் ஆகும். ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு இந்த நேரத்தில் நிறைய நேரம் குடும்பத்தினருடன் நண்பர்களுடனும் ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.

    இவ்வாறு இருக்கும் போது குழந்தைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இயல்பாகவே கற்றுக்கொள்ள முடிகிறது. ஆகவே குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துவிட்டு பெற்றோர்கள் தங்கள் வேலையில் ஈடுபடாமல், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றார்.

    • 2 இளம்பெண்களும் கர்ப்பமாக இருந்த போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    • ஒரு நபருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்துள்ளது. மற்றொரு பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்துள்ளது.

    வாஷிங்டன்:

    2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது.

    இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டு பிடித்து பொதுமக்களுக்கு செலுத்தியதன் பயனாக தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்து உலகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    ஆனாலும் அவ்வப்போது தொற்று உருமாற்றம் அடைந்து பல திரிபுகளாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்காக அச்சப்பட தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

    இதற்கிடையே கொரோனா ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா காரணமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையில் பாதிக்கப்படுவது அமெரிக்க ஆய்வாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து மியாமி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய விரிவான ஆய்வு குறித்து அமெரிக்காவில் பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பு, டெல்டா வகை தொற்று பரவல் உச்சத்தில் இருந்த போது கர்ப்பமாக இருந்த 2 இளம்பெண்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் 3-6 மாதங்கள் கர்ப்பமாக இருந்த போது அவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    அந்த பெண்களுக்கு பிறந்த இரு குழந்தைகளுக்கும் பிறந்த அன்றே வலிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முறையான வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. அதில் ஒரு குழந்தை 13 மாதங்களில் உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை மருத்துவர்கள் பராமரிப்பில் வைக்கப்பட்டது.

    ஆனால் பரிசோதனையில் 2 குழந்தைகளுக்கும் கொரோனா உறுதியாகவில்லை. இருந்த போதும் அவர்களது ரத்தத்தில் அதிகமான ஆன்டிபாடிகள் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக மியாமி பல்கலைக்கழகத்தில் குழந்தை மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியரான டாக்டர் மெர்லைன் பென்னி கூறினார். அதாவது கொரோனா முதலில் தாயிடம் இருந்து நஞ்சுக்கொடிக்கு வந்துள்ளது. அதன் பிறகு அது குழந்தைக்கு பரவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த இரு குழந்தைகளின் தாய்களின் நஞ்சுக்கொடிகளிலும் வைரஸ் இருப்பதற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 13 மாதங்களில் உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனையிலும் அக்குழந்தையின் மூளையில் வைரசின் தடயங்களையும், நேரடி தொற்று காயங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

    2 இளம்பெண்களுக்கும் கர்ப்பமாக இருந்த போது தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு நபருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்துள்ளது. மற்றொரு பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்துள்ளது.

    இதனால் 32 வாரங்களில் குழந்தையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அரியான வழக்காக இருக்கும் என்று கூறிய ஆய்வாளர்கள், கர்ப்பமாக இருக்கும் போது கொரோனா பாதிப்பு இருந்தால் வளர்ச்சி தாமதங்கள் குறித்து ஆய்வு செய்யும்படி மருத்துவர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

    குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வரை அதாவது 7 அல்லது 8 வயது வரை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

    குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் முன்கூட்டியே தடுப்பூசி எடுத்து கொள்ளும் படியும் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் பச்சிளம் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் பாதிப்பு டெல்டா தொற்றால் மட்டுமே ஏற்படுகிறதா? அல்லது அனைத்து வகையான கொரோனாவாலும் ஏற்படுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

    முன்னதாகவே இதுபோல நடக்க வாய்ப்புள்ளதாக ஆய் ளர்கள் எச்சரித்து இருந்தனர். இப்போது 2 குழந்தைகளின் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது ஆய்வாளர்களின் எச்சரிக்கையை உறுதி செய்துள்ளது.

    இதுகுறித்து மியாமி பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் மைக்கேல் பைடாஸ் கூறுகையில், இடமாற்றம் செய்யப்பட்ட கருவின் உறுப்புகளின் வைரசை நிரூபிக்க முடிந்தது இதுவே முதல் முறை. அதனால் தான் இது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறோம் என தெரிவித்தார்.

    • ஸ்வான்சீ பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் 20 முதல் 25 வயதுடைய 50 பேரிடம் ஆய்வு நடத்தினர்.
    • 3 குழுக்களாக பிரித்து 3 மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது.

    இன்றைய நவீன உலகில் செல்போனில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்வோர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    அதிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் சமூக வலைதளங்களில் பல மணிநேரம் மூழ்கி கிடப்பதாகவும் இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தினமும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை 15 நிமிடங்கள் குறைத்தால் ஆரோக்கியம் மேம்படும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக ஸ்வான்சீ பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் 20 முதல் 25 வயதுடைய 50 பேரிடம் ஆய்வு நடத்தினர். 3 குழுக்களாக பிரித்து 3 மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் மக்கள் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் சமூக ஊடக பயன்பாட்டை குறைக்கும்போது உடல் ஆரோக்கியம் மற்றும் உளவியல் செயல்பாடுகளில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வு குறித்து பல்கலைக்கழக பேராசிரியர் பில் ரீட் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்கள் சமூக ஊடக பயன்பாட்டை குறைக்கும் போது அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வுக்கான நன்மைகள் உள்பட பல வழிகளில் அவர்களின் வாழ்க்கை மேம்படும் என்பதை இந்த ஆய்வு தகவல்கள் நிருபிக்கின்றன என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 500 ஆரோக்கியமான பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் கூடிய இசை ஒரு நபரை பலவீனமாக மாற்றும் என கண்டறியப்பட்டுள்ளது.
    • மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் 34 சதவீதம் அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமர்கி மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி நடந்த ஒரு திருமணத்தின் போது அதிக சத்தத்துடன் கூடிய இசை காரணமாக மணமேடையில் மணமகன் சுரேந்திர குமார் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதே போல தெலுங்கானாவில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் நடனமாடி கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும் நடனமாடி கொண்டிருந்த போதே சுருண்டு விழுந்து இறந்தார்.

    கடந்த ஆண்டு நவம்பர் 25-ந்தேதி வாரணாசியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டிருந்த ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

    இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் திருமண விழாக்களில் அதிக சத்தத்துடன் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் திருமண விழாக்களில் அதிக சத்தத்துடன் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளால் மாரடைப்பு ஏற்படலாம் என சில ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

    இதுதொடர்பாக, ஐரோப்பிய மருத்துவ இதழ் ஆய்வு ஒன்றை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. 500 ஆரோக்கியமான பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிக சத்தத்துடன் கூடிய இசை ஒரு நபரை பலவீனமாக மாற்றும் என கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 24 மணி நேர இரைச்சல் அளவில் ஒவ்வொரு 5 டெசிபல் அதிகரிப்பது இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

    இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் 34 சதவீதம் அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர்.

    இதுபோன்ற ஆய்வு ஜெர்மனியில் உள்ள மைன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்திலும் நடத்தப்பட்டது. 35 முதல் 74 வயதிற்குட்பட்ட 15 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிக சத்தத்துடன் இசையை கேட்கும் போது இதயத்துடிப்பு வேகமாக அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

    மேலும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு காரணமாக மாரடைப்பு, மூளை பக்கவாதம் மற்றும் ரத்த உறைவு போன்றவை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    • நீர்மட்ட உயர்வில் பிராந்திய அளவில் காணப்படும் வேறுபாடுகளால் நீர் மட்ட அளவும் மாறுபடும்.
    • சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் மிக அதிகமான நீர் இடப்பெயர்வாகும்.

    சென்னை:

    காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை சார்ந்த காலநிலை மாறுபாடு ஆகிய இரண்டின் கூட்டுவிளைவு பூமிக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பாக ஆய்வுகள் செய்துவரும் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்தியாவில் உள்ள பெருநகரங்களான சென்னை, கொல்கத்தாவுக்கு மிகப்பெரிய ஆபத்து வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    வெப்பநிலை அதிகரிப்பால் நீர் விரிவடைந்து கடல் நீர்மட்டம் உயர்கிறது. இதுதவிர துருவ பாறைகளால் அதிக அளவு கடலில் சேரும் தண்ணீரால் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்த நீர்மட்ட உயர்வில் பிராந்திய அளவில் காணப்படும் வேறுபாடுகளால் நீர் மட்ட அளவும் மாறுபடும். சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் மிக அதிகமான நீர் இடப்பெயர்வாகும்.

    இதன் காரணமாக கடற்கரையை ஒட்டியிருக்கும் நகரங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

    அதில் ஆசிய பகுதியில் உள்ள 6 நகரங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கலாம். கடல் நீரில் மூழ்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. அதில் இந்தியாவில் சென்னை, கொல்கத்தா ஆகிய இரு நகரங்களும் ஆபத்தில் உள்ளன.

    இதேபோல் தாய்லாந்தில் பாங்காக், இந்தோனேசியாவில் மணிலா, மியான்மரில் யாங்கோன், வியட்நாமில் ஹோசி மின்சிட்டி ஆகிய நகரங்கள் அடங்கி உள்ளன. 2100-ம் ஆண்டுக்குள் இந்த நகரங்கள் அனைத்தும் கடல் நீரால் மூழ்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    • பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மோசம் என்று 5 சதவீதம் பேரும், மோசம் என்று 15 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • 5 சதவீதம் பேர் குடிநீர் இணைப்பு இல்லை என்று கூறியுள்ளளனர்.

    இந்திய தண்ணீர் வாரத்தையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில் கூறி இருப்பதாவது:-

    2 சதவீதம் இந்திய குடும்பங்கள் மட்டுமே தங்கள் நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளில் இருந்து தரமான குடிநீரை பெறுகின்றன. மேலும் 65 சதவீதம் பேர் நவீன வடிகட்டுதல் செயல்முறையை பயன்படுத்துகின்றனர்.

    பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மோசம் என்று 5 சதவீதம் பேரும், மோசம் என்று 15 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 5 சதவீதம் பேர் குடிநீர் இணைப்பு இல்லை என்று கூறியுள்ளளனர்.

    குடிப்பதற்கும், சமைப்பதற்கும் சுத்தமான குடிநீரை பெற 34 சதவீதம் பேர் நீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பயன்படுத்துகின்றனர். 31 சதவீதம் பேர் ஆர்.ஓ. அமைப்பை பயன்படுத்துகிறார்கள். 14 சதவீதம் பேர் கொதிக்க வைத்து பயன்படுத்துகிறார்கள். 5 சதவீதம் பேர் மண்பானைகளை பயன்படுத்துகிறார்கள். 1 சதவீதம் பேர் குளோரினேஷன், படிகாரம் மற்றும் பிற கனிமங்களை பயன்படுத்துகின்றனர். 7 சதவீதம் குடும்பங்கள் சுத்திகரித்து பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்குவதில்லை.

    இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    ×