search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆமை குஞ்சு"

    • கரைக்கு முட்டையிடும் ஆமைகள் படகு மற்றும் வலையில் சிக்கி இறப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்தது.
    • ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலில் விடும் பணியில் வனத்துறையினர் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு கடற்கரை பகுதியில் டிசம்பர் மாதம் முதல் ஆமைகள் முட்டையிட கரைக்கு வருகின்றன. இவை ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும்.

    கரைக்கு முட்டையிடும் ஆமைகள் படகு மற்றும் வலையில் சிக்கி இறப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்தது. மேலும் ஆமையின் முட்டைகளை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க வனத்து றையினருடன் இணைந்து ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினரும் களத்தில் இறங்கினர்.

    அவர்கள் பழவேற்காடு கடற்கரையோரத்தில் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்தனர்.

    கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 9,700 முட்டை சேகரிக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் இந்த முட்டைகள் தற்போது குஞ்சு பொரிக்கத்தொடங்கி உள்ளன. இந்த ஆமை குஞ்சுகளை மீண்டும் கட லில் விடும் பணியில் வனத்துறையினர் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் புதிதாக பிறந்த 1,121 ஆமைக்குஞ்சு களை வனச்சரகர் அலுவலர் ரூஸப் லெஸ்லி தலைமையில் அதிகாரிகள் பழவேற்காடு கடலில் விட்டனர்.

    • ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது.
    • உண்மையில், ஆமைக் குஞ்சு பொரிப்பில் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை கடலோரப் பகுதியில் அதிகாலை நேரங்களில் ஆமைகள் முட்டையிடும். இம்முட்டைகளை நீண்ட காலமாக நாய்களும், பறவைகளும் சிதைப்பதால், கடல் ஆமைகள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் மீன் வளத்தை அதிகரிக்கும் நோக்கில், அழிந்து வரும் கடல் ஆமைகளை பாதுகாக்கும் விதமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, வனத்துறை சார்பில் பெசன்ட் நகர் உள்ளிட்ட 3 இடங்களில் ஆமைக் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து படிப்ப டியாக தமிழக கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் ஆமை முட்டையிடும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொரிப் பகங்களில் அடைகாத்து, குஞ்சுகள் வெளியே வந்த பிறகு, கடலில் விடப்பட்டு வருகிறது.

    இப்பணிகள் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறை வடைந்துள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாகு, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு 35 ஆமைக் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. அங்கு குஞ்சு பொரிக்கப்பட்ட 1 லட்சத்து 83 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

    கடந்த 7 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும். இதற்காகப் பணியாற்றிய தன்னார்வலர்கள் மற்றும் வன களப்பணியாளர்களின் அளப்பரிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், ஆமைக் குஞ்சு பொரிப்பில் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டு வந்தனர்.
    • 2நாட்களாக வனத்துறை யினர் அலட்சியத்தால் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது.

    கடலூர்:

    ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் கடற்கரையோரம் முட்டையிட்டு செல்வது வழக்கம். முட்டைகளை கால்ந டைகள் மற்றும் பறவை இனங்கள் இறையாக சாப்பிடு வதால் வனத்துறையினர் உதவியுடன் கடலூர் சமூக வன ஆர்வலர் செல்லா அதிகாலையில் கடற்கரையோரம் பயணித்து ஆமைகள் விட்டுச்செல்லும் முட்டைகளை சேகரித்து அதனை பராமரித்து குஞ்சுகளை பொறித்த பின்னர் பாதுகாப்பாக கடலில் விட்டு வரும் பணியை கடந்த சில ஆண்டுகளாக சரியான முறையில் செய்து வந்ததால் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். இந்த ஆண்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் கடலூர் கடற்கரையோரம் ஆமைகள் விட்டு சென்ற நிலையில் அதனை பாதுகாப்பாக மீட்டு வனத்துறை அதிகாரி களுடன் வன ஆர்வலர் செல்லா பாதுகாத்து கடந்த ஒரு மாதமாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2நாட்களுக்கு முன்வனத்துறையினர் சமூக வன ஆர்வலரான செல்லாவை பணியில் ஈடுபடக்கூடாது என கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் 2நாட்களாக வனத்துறை யினர் அலட்சியத்தால் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இன்று காலை சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆமைக்கு ஞ்சுகள் வெளியே உயிரிழந்து காணப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, சோகத்துடன் உயிரிழந்த ஆமைக்குஞ்சுகளை சேகரித்து வைத்தனர். இதில் உயிருடன் இருந்த ஆமை குஞ்சுகளை தண்ணீரில் விட்டு பின்னர் கடலில் பாதுகாப்பாக விட்டனர். அரிய வகை ஆமைக்கு ஞ்சுகள் அதனுடைய செயல்பா டுகள் என்னென்ன? என்பதனை வன ஆர்வலர் செல்லா அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை முழுமையாக பாதுகாப்பு படுத்தி வந்த நிலையில், வனத்துறையின் அலட்சியத்தால் 200-க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி அரியவகை ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக மீட்டு அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு வன ஆர்வலர் செல்லாவிற்கு வனத்துறை அதிகாரிகள் எந்தவித காரணமும் இன்றி பணி செய்ய விடாமல் ஏற்படுத்தியதை விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×