search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி கிருத்திகை விழா"

    • ஆடி கிருத்திகை விழாவை யொட்டி இன்று ஒரு நாள் விடுமுறை
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழாவை யொட்டி மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவில் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவில் மற்றும் இதர பகுதியில் உள்ள முருகன் கோவில்களுக்கு பக்தர்கள், பொதுமக்கள் அதிகளவில் காவடி எடுத்து பஸ்களில் சென்று வருவார்கள்.

    இதனால் பஸ்களை பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • முருக பெருமானுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சென்னிமலை முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

    சென்னிமலை:

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிரு த்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆடி கிருத்திகையையொட்டி சென்னி மலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து முருக பெருமானுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சென்னிமலை முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம் அடுத்த பவள மலை முத்துகுமாரசாமி கோவிலில் ஆடி கிருத்திகை யை யொட்டி இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது.

    இதையொட்டி கோவிலில் திருப்படி பூஜை நடந்தது. இதில் படியில் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில், கோபி அருள்மலை முருகன், மூல வாய்க்கால் முருகன், அம்மா பேட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில் களிலும் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • எல்லா மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், தை, கிருத்திகை மற்றும் ஆடிக் கிருத்திகை தனிச்சிறப்பு வாய்ந்தது.
    • பெரம்பலூர் பாலமுருகன் கோயில் ஆடி கிருத்திகையை யொட்டி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு பாலமுருகன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

    ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த மிக மிக விசேஷமான தினமாகும். எல்லா மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், தை, கிருத்திகை மற்றும் ஆடிக் கிருத்திகை தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் நேற்று ஆடி கிருத்திகை விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் தமிழ் கடவுளான முருகனின் நட்சத்திரமாகும். ஜோதிட அடிப்படையில், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபடுவது மேன்மையைத் தரும். கிருத்திகை பெண்களை போற்றும் வகையில், "கிருத்திகை" விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    இதன்படி பெரம்பலூர் பாலமுருகன் கோயில் ஆடி கிருத்திகையை யொட்டி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அர்ச்சகர் ரமேஷ் தலைமையிலான அய்யர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். இதே போல் செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    ×