search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் பாலமுருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா
    X

    பெரம்பலூர் பாலமுருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா

    • எல்லா மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், தை, கிருத்திகை மற்றும் ஆடிக் கிருத்திகை தனிச்சிறப்பு வாய்ந்தது.
    • பெரம்பலூர் பாலமுருகன் கோயில் ஆடி கிருத்திகையை யொட்டி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு பாலமுருகன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

    ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த மிக மிக விசேஷமான தினமாகும். எல்லா மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், தை, கிருத்திகை மற்றும் ஆடிக் கிருத்திகை தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் நேற்று ஆடி கிருத்திகை விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் தமிழ் கடவுளான முருகனின் நட்சத்திரமாகும். ஜோதிட அடிப்படையில், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபடுவது மேன்மையைத் தரும். கிருத்திகை பெண்களை போற்றும் வகையில், "கிருத்திகை" விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    இதன்படி பெரம்பலூர் பாலமுருகன் கோயில் ஆடி கிருத்திகையை யொட்டி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அர்ச்சகர் ரமேஷ் தலைமையிலான அய்யர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். இதே போல் செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    Next Story
    ×