search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் சாமி தரிசனம்"

    • அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
    • அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நாமக்கல்:

    அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று (வியாழக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

    • செம்பனார்கோயில் அருகே பழைமையான காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
    • புனித நீர் குடங்களை கொண்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் மேற்கு தெருவில் மிக பழைமையான காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    இக்கோயில் கும்பாபி சேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.

    யாகசாலையில் பூர்னா குதி நடைபெற்று, மேள தாளங்கள் முழங்க, சுந்தர் சிவாச்சாரியார் புனித நீர் கடங்களை தலையில் சுமந்து விமான கோபுரங்களை சென்றடைந்தனர்.

    பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, வானவேடிக்கை நடைபெற, புனித நீர் குடங்களை கொண்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து கருவரையில் சுவாமிக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.

    விழாவில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், கிராமவாசிகள்,விழா குழுவினர்கள், மற்றும் நாட்டான்மைகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • முருக பெருமானுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சென்னிமலை முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

    சென்னிமலை:

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிரு த்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆடி கிருத்திகையையொட்டி சென்னி மலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து முருக பெருமானுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சென்னிமலை முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம் அடுத்த பவள மலை முத்துகுமாரசாமி கோவிலில் ஆடி கிருத்திகை யை யொட்டி இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது.

    இதையொட்டி கோவிலில் திருப்படி பூஜை நடந்தது. இதில் படியில் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில், கோபி அருள்மலை முருகன், மூல வாய்க்கால் முருகன், அம்மா பேட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில் களிலும் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஆடி மாதத்தையொட்டி மாரியம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடந்து வருகின்றன. 2-வது வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்து காய்கறி அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து காய்கறி மற்றும் பழங்கள் அலங்காரத்திலும், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் நடந்தன.

    அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×