search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி 2-வது வெள்ளியை முன்னிட்டு  கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    ஆடி 2-வது வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    • அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஆடி மாதத்தையொட்டி மாரியம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடந்து வருகின்றன. 2-வது வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்து காய்கறி அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து காய்கறி மற்றும் பழங்கள் அலங்காரத்திலும், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் நடந்தன.

    அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×