search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்"

    • அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டியில் தாய்லாந்தை எதிர் கொண்டது.
    • ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில், தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா தங்க பதக்கத்தை வென்றது.

    ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில், தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா தங்க பதக்கத்தை வென்றது. இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்றது.

    மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா, தென் கொரியா, சீனா, மலேசியா என்று மொத்தம் 7 அணிகள் இடம் பெற்று விளையாடின.

    இதில், அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டியில் தாய்லாந்தை எதிர் கொண்டது.

    இறுதி போட்டியில், பிவி சிந்து உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள சுபனிடா கேத்தோங்கை 21-12 21-12 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார். அதன் மூலம் இறுதிச் சுற்றில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

    தரவரிசையில் 23வது இடத்தில் இருக்கும் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஜோங்கோல்பன் கிடிதரகுல் மற்றும் ரவிந்தா பிர ஜோங்ஜாய் ஜோடியை 21-16 18-21 21-16 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

    இதையடுத்து நடந்த 2ஆவது ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானிடம் 11-21 14-21 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    தேசிய சாம்பியனான இளம் ஸ்ருதி மிஸ்ரா மற்றும் பிரியா கொன்ஜெங்பாம் ஜோடி, உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பென்யாபா ஐம்சார்ட் மற்றும் நுண்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியிடம் 11-21 9-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர். இதன் மூலமாக இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் 2-2 என்று சமநிலையில் இருந்தன.

    கடைசியாக வெற்றை தீர்மானிக்கும் 5ஆவது போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அன்மோல் கர்ப் 21-14 21-9 என்ற கணக்கில் தரவரிசையில் 45வது இடத்தில் இருக்கும் போர்ன்பிச்சா சோய்கிவோங்கை வீழ்த்தினார்.

    இதன் மூலமாக ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    • இன்று நடந்த அரையிறுதியில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிக்கு முன்னேறியது.
    • இந்திய பெண்கள் அணி வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறியது.

    சிலாங்கூர்:

    ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் வரலாற்றில் முதல்முறையாக ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்துள்ளது.

    இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் முதல் சுற்றிலும், இந்தியா 2, 3வது சுற்றிலும், ஜப்பான் 4வது சுற்றிலும் வென்றது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது சுற்றில் இந்தியாவின் அன்மோல் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். இதன்மூலம் அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

    இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதியாகிவிட்ட நிலையில் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொள்கிறது.

    • இன்று (பிப் 16) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • இதன் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்தது.

    ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று (பிப் 16) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இதன் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்தது.

    கடந்த செவ்வாயன்று (பிப் 13) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருந்தது.

    இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பிவி சிந்து 21-7, 16-21, 21-12 என்ற கணக்கில் லோ சின் யான் ஹேப்பியை தோற்கடித்தார்.

    இரட்டையர் பிரிவில் விளையாடிய தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் 21-10, 21-1 என்ற செட் கணக்கில் யுங் நகா டிங் & யுங் புய் லாம் ஆகியோரை தோற்கடித்தனர். அஷ்மிதா சாலிஹா 21-12, 21-13 என்ற செட் கணக்கில் யுங் சும் யீயை வென்றார்

    இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதியாகிவிட்ட நிலையில், முதலிடத்தில் உள்ள ஜப்பான் மற்றும் சீனா இடையிலான மற்றொரு காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை இந்தியா இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும். மேலும் இந்திய ஆடவர் அணி தனது காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

    • ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
    • இந்திய ஆண்கள் அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    சிலாங்கூர்:

    ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. முதலில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் யங் கா லாங் அங்குஸ் உடன் மோதினார். இதில் பிரனாய் 18-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் ஹாங்காங் முதலில் 1-0 என முன்னிலை பெற்றது.

    அடுத்து நடந்த இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி தங்களது போட்டியில் வெற்றி பெற்றனர்.

    தொடர்ந்து நடந்த ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலை பெற உதவினர்.

    இறுதியில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா காலிறுதியில் சீனாவுடன் மோதுகிறது.

    ×