என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு பள்ளி மாணவர்கள்"
- கையில் கயிறு, நெற்றியில் விபூதி பூசக்கூடாது என கூறுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
- மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் சின்னசாமியம்மாள் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி உள்ளது.இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் 2பேர் ஒருமையில் பேசுவதாகவும், கையில் கயிறு, நெற்றியில் விபூதி பூசக்கூடாது என கூறுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி தலைமையாசிரியரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் தலைமையாசிரியர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல்அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர்.
- 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.
- இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
நகரப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டு வருவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு சென்ற வண்ணம் உள்ளது.
இதற்கு பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமின்றி சிலருடைய குடும்ப சூழலும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதனை செயல்படுத்த அரசு தற்போது ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளிலும் தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 15 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதன்பிறகு படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 10 குழந்தைகள் முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினசரி தயாரிக்கப்பட வேண்டும்.
இதற்காக கிராம பஞ்சாயத்துகளில் கட்டமைப்புடன் கூடிய சமையல் கூடங்கள், கியாஸ் சிலிண்டர்கள், எரிவாயு அடுப்பு போன்றவை வழங்கப்படும்.
சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக்குழுவுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.
காலை 5.30 மணிக்கு சமையல் பணியை தொடங்கி காலை 7.45 மணிக்குள் முடிக்க வேண்டும். சமைத்த உணவை காலை 8.15 மணி முதல் 8.45 மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களை எம்.எல்.ஏ. பாராட்டினார்.
கள்ளக்குறிச்சி:
தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 10 மற்றும் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சமீர் என்ற மாணவர் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.
இதேபோல் பிளஸ்-2 பொதுத் தேர்வில் சாய் பிரசன்னா என்ற மாணவர் 600 க்கு 516 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி செந்தில்குமார் எம்.எல்.ஏ. பள்ளிக்கு நேரில் சென்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற சமீர் மற்றும் சாய் பிரசன்னா ஆகிய இரண்டு மாணவர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி, ரொக்கப் பரிசு வழங்கினார். அப்போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்