search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் கட்சி"

    • உகாயனூர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொடிக்க ம்பங்கள் உள்ளது.
    • அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் உகாயனூர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க.,அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொடிக்க ம்பங்கள் உள்ளது.இந்த கொடிக்கம்பங்க ளில் உள்ள கொடிகளை மர்மநபர்கள் இரவு நேரங்களில் மாற்றி கட்டும் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போன்று நடைபெற்றது.இது குறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க கொடியையும், தி.மு.க.வின் கொடிக்கம்ப த்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியையும் கட்டி சென்றுள்ளனர்.

    இரவு நேரங்களில் மர்ம நபர்கள் இது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறா ர்கள்.எனவே போலீசார் இந்த செயலில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்காணித்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்து ள்ளனர்.

    • அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் நிறுவனர் கவுதம் சாகர் மஹாயான் ஆவார்.
    • இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா (ஆம்ப்பீ) கட்சி தொடக்க விழா சென்னையில் நடந்தது.

    படித்த, திறமைமிகுந்த இளைஞர்களுக்கு அரசியலில் பங்கேற்கவும் நாட்டுக்கு உழைக்கவும் நல்லதோர் வாய்ப்பை இக்கட்சி வழங்க இருக்கிறது. சரியானவர்களுக்கு நல்ல தளத்தை இக்கட்சி ஏற்படுத்தித்தர உறுதி பூண்டுள்ளது.

    அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் நிறுவனர் கவுதம் சாகர் மஹாயான் ஆவார். நாட்டிலுள்ள இளைஞர்களை வலுப்படுத்துவதே தனது குறிக்கோள் என கூறியிருக்கிறார். 

    இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஆம்ப்பீ கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் கவுதம் சாகர் மஹாயான் பேசுகையில், "திறம் வாய்ந்த ஆற்றல் பயன்பாடு, எல்லாவற்றையும் உள்ளடக்கிய கல்வி, நீர் நிர்வாகம், நிலத்தடிநீர் சேமிப்பு, நிலத்தை அதிகபட்ச பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், சிறப்பான கழிவு மேலாண்மை, கூட்டுறவு இயக்கத்தை மீட்டுருவாக்கம் செய்தல் ஆகிய முக்கியக் கொள்கைகளை இக்கட்சி தன்னகத்தே கொண்டு உள்ளது" என்றார்.

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்திருந்தன.
    • செயல்படாத கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    இந்திய தேர்தல் கமிஷன் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்களை திரட்டியது. அதில், தேர்தலில் பங்கேற்காத கட்சிகள், கணக்குகளை உரிய வகையில் காட்டாத கட்சிகள் ஆகியவற்றின் பெயரை மாநில வாரியாக தேர்தல் கமிஷன் பட்டியலிட்டு வெளியிட்டது. இதில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 233 கட்சிகளில் செயல்பாடில்லாத பல கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    அந்த கட்சிகளுக்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்திருந்தன. தேர்தல் கமிஷன் அளித்த காலக்கெடு முடிந்ததைத் தொடர்ந்து, 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 23 கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரியவந்தது.

    உரிய கால அவகாசத்தில் விளக்கம் அளிக்காத நிலையில், அக்கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிய விளக்கம் மற்றும் கணக்குகளை அளிக்கும் பட்சத்தில் மீண்டும் பட்டியலில் அந்தக் கட்சிகளின் பெயர் இணைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன. அந்த விளக்கம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இவை தவிர, எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி உள்ளிட்ட கணக்குகளையும் காட்டாமல், கமிஷனிடம் அளித்த முகவரியில் செயல்படாமல், தொடர்பு கடிதங்கள் திரும்பி வந்த நிலையில் உள்ள 22 கட்சிகளை செயல்படாத கட்சிகளாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அந்தக் கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    • சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
    • அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதனை சம்பவத்தன்று சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர்.

    இதையடுத்து கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க பணிக்கம்பட்டி செயலாளர் ஈஸ்வரன், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார், உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா,உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் கடந்த தீபாவளியன்று இரவு பணிக்கம்பட்டியை சேர்ந்த மதன் (21),லோகநாதன் (20) ,சூர்யா (21) ,ராஜேஷ் (22), சஞ்சீவ் (19) ஆகிய 5 பேரும் குடிபோதையில் அங்கிருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்களின் மீது ஏறி சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×