search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசமரம்"

    • பள்ளிக்கு அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் நின்றது.
    • குழந்தைகள் யாரும் வெளியில் இல்லாததால் அங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த ஹைஸ்கூல்புதூர், கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் நின்றது.

    இந்த நிலையில் அங்கு நேற்று மதியம் பலத்த காற்று வீசியது. இதில் அரசமரம் வேரோடு சாய்ந்தது. இதனை தற்செயலாக பார்த்த பொதுமக்கள் விலகி ஓடினார்கள். இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.

    இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஹைஸ்கூல்புதூர் கூத்தாண்டவர் கோவில் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மரம் முறிந்து விழுந்தபோது, குழந்தைகள் யாரும் வெளியில் இல்லை. எனவே அங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    • மரத்தை உடனடியாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை.
    • மரம் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்த பின்னர் நினைவு சின்னம் வைப்போம்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ராதா நகர் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை ஜி.எஸ்.டி. மெயின் ரோட்டில் இணையும் இடத்தில் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய அரச மரம் இருந்தது.

    சுரங்கப்பாதை பணிக்காக ஜி.எஸ்.டி. சாலையில் இருந்த அரசமரம் நெடுஞ்சாலைத் துறையினரால் வெட்டி அகற்றப்பட்டது. இதுநாள் வரை பல லட்சம் பேருக்கும் நிழலாக இருந்த அரச மரம் வெட்டப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த மரத்தை வெட்டாமல் பணியை தொடர்ந்து இருக்கலாம் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அரச மரம் வெட்டப்பட்டதற்கு சமூகநல ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே அரச மரம் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் அமைப்பு சார்பில் இன்று காலை மரம் இருந்த இடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த மரத்தை உடனடியாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பசுமைத்தாயகம் மாநில துணை பொது செயலாளர் ஐநா கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சுரங்கப்பாதை பணிக்காக அரசமரம் வெட்டி அகற்றப்பட்டது. இதனை வேராடு பிடுங்கி வேறு இடத்தில் நடமுடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வனத்துறையினர் மூலம் மரக்கன்று நடப்படும். இதுவரை சுரங்கப்பாதை பணிகள் 70 சதவீதம் முடிந்து உள்ளது. ரெயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப்பாதையை இணைக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற மே மாதத்தில் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இப்போது இந்த அரச மரத்தை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் மரம் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்த பின்னர் நினைவு சின்னம் வைப்போம் என்றனர்.

    ×