search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் நேரு ஆய்வு"

    • தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • புல்வெட்டிக்குளம் தூர்வாரப்படாமல் இருந்ததை பார்வையிட்டு உடனே தூர்வார அமைச்சர் உத்தர விட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சித்துறை இயக்குநர் கிரண்குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தமிழ்நாடு கூட்டுகுடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தக்ஷணாமூர்த்தி மற்றும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.13.31 கோடி மதிப்பீட்டில் வட்டக்கரடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, போடிநாயக்கனூர் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பரமசிவன் கோவில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.76.15 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடிவுற்று சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டப்பணிகளை ஆய்வு செய்து பின்னர் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    தேவாரம் பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்(2021-2022) கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் மேம்பாடு செய்தல் கட்டுமான பணி, கம்பம் நகராட்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி பங்களிப்புடன் ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 262 திறந்த வெளி கடைகள் மற்றும் 23 முன்புற கடைகள் ஏ.டி.எம். எந்திரம், கேண்டீன் மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    லோயார்கேம்ப் பகுதியில் மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1295 கோடி தலைமை நீரேற்றும் நிலையம் அமைத்தல் மற்றும் தலைமை நீரேற்று நிலையம் முதல் பண்ணைப்பட்டி நீர் சுத்திகரிப்பு நிலையம் வரை பிரதான குடிநீர் குழாய் அமைத்தல் பணிக்காக கீழ் ரூ.357.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    வைகை அணையிலிருந்து கடமலைக்குண்டு மயிலாடும்பாறை பகுதியில் உள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.141.13 கோடியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 21.3 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆண்டிபட்டி அருகில் உள்ள குருவியம்மாள்புரத்தில் ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டனர்.

    இதில் மாவட்ட எஸ்.பி. பிர வீன்உ மேஷ்டோ ங்கரே, எம்.எல்.ஏ.க்கள் ராமகிரு ஷ்ணன், மகாராஜன், சரவணக்கு மார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செ ல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆண்டி பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் அமைச்சர் இ.பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொ ண்டார். வளர்ச்சி திட்டங்கள், பயனாளி களுக்கு செல்ல வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கொத்த ப்பட்டி புல்வெ ட்டி க்குளம் தூ ர்வார ப்படா மல் இருந்ததை பார்வையிட்டு உடனே தூ ர்வார உத்தர விட்டார்.

    • ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீரை தங்கு தடையின்றி வழங்க முடியும்.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டி பெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது.

    3-வது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில், 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து உள்ளது. இதர பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில், தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட தொடர்பு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலெக்டர் சமீரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு மேட்டுப்பாளையத்தில் நடந்துவரும் பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார்.

    பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் ரூ 49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சங்கனூர் பள்ளத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ×