search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் குடிநீர், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் நேரு ஆய்வு
    X

    தேனி மாவட்டத்தில் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார். அருகில் அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் ஷஜீவனா மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் குடிநீர், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் நேரு ஆய்வு

    • தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • புல்வெட்டிக்குளம் தூர்வாரப்படாமல் இருந்ததை பார்வையிட்டு உடனே தூர்வார அமைச்சர் உத்தர விட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சித்துறை இயக்குநர் கிரண்குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தமிழ்நாடு கூட்டுகுடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தக்ஷணாமூர்த்தி மற்றும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.13.31 கோடி மதிப்பீட்டில் வட்டக்கரடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, போடிநாயக்கனூர் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பரமசிவன் கோவில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.76.15 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடிவுற்று சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டப்பணிகளை ஆய்வு செய்து பின்னர் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    தேவாரம் பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்(2021-2022) கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் மேம்பாடு செய்தல் கட்டுமான பணி, கம்பம் நகராட்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி பங்களிப்புடன் ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 262 திறந்த வெளி கடைகள் மற்றும் 23 முன்புற கடைகள் ஏ.டி.எம். எந்திரம், கேண்டீன் மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    லோயார்கேம்ப் பகுதியில் மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1295 கோடி தலைமை நீரேற்றும் நிலையம் அமைத்தல் மற்றும் தலைமை நீரேற்று நிலையம் முதல் பண்ணைப்பட்டி நீர் சுத்திகரிப்பு நிலையம் வரை பிரதான குடிநீர் குழாய் அமைத்தல் பணிக்காக கீழ் ரூ.357.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    வைகை அணையிலிருந்து கடமலைக்குண்டு மயிலாடும்பாறை பகுதியில் உள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.141.13 கோடியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 21.3 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆண்டிபட்டி அருகில் உள்ள குருவியம்மாள்புரத்தில் ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டனர்.

    இதில் மாவட்ட எஸ்.பி. பிர வீன்உ மேஷ்டோ ங்கரே, எம்.எல்.ஏ.க்கள் ராமகிரு ஷ்ணன், மகாராஜன், சரவணக்கு மார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செ ல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆண்டி பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் அமைச்சர் இ.பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொ ண்டார். வளர்ச்சி திட்டங்கள், பயனாளி களுக்கு செல்ல வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கொத்த ப்பட்டி புல்வெ ட்டி க்குளம் தூ ர்வார ப்படா மல் இருந்ததை பார்வையிட்டு உடனே தூ ர்வார உத்தர விட்டார்.

    Next Story
    ×