search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அன்பில் மகேஷ்"

    • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.
    • தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    கற்பித்தலில் புதுமையை புகுத்தியும் மற்றும் தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி கற்பித்தலை செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விருது வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் 380 பேருக்கும் விருதுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி விழா பேருரையாற்றுகிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.

    பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசுகிறார். பள்ளி கல்வி துறை அரசு செயலாளர் குமரகுருபரன் திட்ட விளக்க உரையாற்றுகிறார். மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை உரையாற்றுகிறார். எம்.பி.க்கள் ராஜேஷ்குமார் சின்ராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றுகிறார்கள். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் நன்றி கூறுகிறார்.

    இந்த விழாவில் விருது பெறுபவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் வகையில் தங்கும் இடம், உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது.
    • சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ப்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

    அதிகாரிகளுடன் இன்று ஆன்லைனில் ஆய்வுக் கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    • மாணவர்களிடம் இயற்கையின் அவசியம் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.
    • இடைநிற்றல் கல்வியை போக்க உருவாக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் மாபெரும் வெற்றியை அளித்துள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் குமரன்குன்று ஈஸ்வரியம்மாள் பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் டபிள்யூ.டபிள்யூ. எப் இயற்கை தொண்டு நிறுவனம் சார்பில் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பு குறித்த கல்வியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடம் இயற்கையின் அவசியம் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைநிற்றல் கல்வியை போக்க உருவாக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் மாபெரும் வெற்றியை அளித்துள்ளது. மேலும் தமிழக முதல்-அமைச்சரின் கனவு வகுப்பறையில் மாணவர்கள் பாடம் கற்றால் மட்டும் போதாது சுற்றுச்சூழல் தொடர்பாகவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும். நீரியியல் மேலாண்மையில் உலகத்திற்கு தமிழகம் முன்னிலையாக உள்ளது.

    ஏரி குளங்கள் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தமிழகத்தின் உயிர் ஆதாரமாக உள்ளது. இதனை பாதுகாக்க பள்ளியிலிருந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    இதற்கு முன்னதாக இயற்கைக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் நீர் மேலாண்மை குறித்து மாணவர்களிடையே எடுத்துப் பேச வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் பிரஸ்குமார் (எ) சிவகுமார் நன்றி கூறினார். 

      கன்னியாகுமரி:

      அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சிகளில் பஙகேற்ப தற்காக குமி மாவட்டம் வந்தார். அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேயர் மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

      இதையடுத்து இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் பாறைக்குச் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு வந்தார். அவரை கப்பல் போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகர் ஆகியோர் வரவேற்றனர்.

      பின்னர் அவர் அங்கு இருந்து தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றார். அங்கு விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் தாணு, மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்றனர்.

      விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து அவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு விளக்கினார்கள். அப்போது விவேகானந்தர் மண்டபம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் செல்பி எடுத்துக் கொண்ட னர்.

      தொடர்ந்து 133 அடி உயர திருவள்ளுவர்சிலையை பார்வையிட சென்றார். அங்கு வந்து அவரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவள்ளுவர்சிலையை பார்வையிட்டார். அங்கு நடை பெற்று வரும் ரசா யன கலவை பூசும் பணியை அவர் ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

      குமரி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஆரோக்கிய சஞ்சனாவை மணக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

      மாணவிக்கு திருவள்ளுவர் சிலை ஒன்றையும் பரிசாக வழங்கினார். மேலும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

      அவரிடம் மேல்படிப்பு என்ன படிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கேட்டார். அப்போது கலெ க்டர் ஆக ஆசைப்படுவதாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர், மாணவியிடம் அவரது படிப்புக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

      இதைத் தொடர்ந்து சேனவிளையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பங்கேற்றார். நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் தொடக்கக் கல்வி துறையை தனித்துறையாக நிர்வாக ரீதியில் பிரித்து ஆணையிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

      • நாளை முதல் 9, 10, 11, 12 வகுப்புகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படும்.
      • ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு, நேரடி பாடம் நடத்த ஏற்பாடு.

      பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

      முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்றும் விதமாக நாளை( புதன்கிழமை) முதல் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்கின்ற முடிவை எடுத்து இருக்கிறோம். அந்த வகையில் 9, 10, 11, 12 வகுப்புகள் மிக மிக முக்கியமான வகுப்புகள்.

      உடனடியாக Board Exam-க்கு அவர்கள் தயார் செய்ய வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அவர்களுக்கு ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு, நேரடியாக பாடம் நடத்துவதற்கு தேவைப்படுகின்ற வகுப்பறைகளை தயார் செய்திட முடிவெடுத்திருக்கின்றோம்.

      கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுடைய சான்றிதழ்கள் எரிந்து போய்விட்டது. மெட்ரிக் பொறுத்தவரை, எல்லா சான்றிதழ்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.

      இருந்தாலும், அந்தந்த மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் தனியாக ஒரு Special DEO போட்டிருக்கிறோம். இவர்களெல்லாம் அமர்ந்து, யார், யாருக்கெல்லாம் duplicate copy இல்லையோ, அவர்களையெல்லாம் வரவழைத்து, யார், யாருக்கெல்லாம் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றதோ, அவர்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

      ×