search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமன் குரங்கு"

    • குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
    • தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் கான்பூரில் இருந்து 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டது. அவற்றை ஊழியர்கள் தனியாக கூண்டில் வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் கூண்டில் இருந்த 2 அனுமன் குரங்குகள் திடீரென பூங்காவில் இருந்து தப்பி சென்றுவிட்டது. அவை ஊரப்பாக்கம் மற்றும் மண்ணிவாக்கம் பகுதியில் சுற்றி வந்தது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அனுமன் குரங்குகளை கூண்டில் உணவு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் மண்ணிவாக்கம் பகுதியில் கூண்டில் உள்ள உணவை சாப்பிட வந்த ஒரு அனுமன் குரங்கை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மற்றொரு குரங்கு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதனை தொடர்ந்து தேடி வந்தனர்.

    இதற்கிடையே இன்று காலை அய்யஞ்சேரி பகுதியில் கூண்டில் வைக்கப்பட்டு இருந்த பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிடுவதற்காக தப்பி சென்ற மற்றொரு அனுமன் குரங்கு வந்தது. கூண்டுக்குள் நுழைந்ததும் அதன் கதவுகள் மூடியதால் அந்த குரங்கும் சிக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட அனுமன் குரங்கை வனத்துறையினர் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    வெளியில் தப்பி மீண்டும் பிடிபட்ட 2 அனுமன் குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • பூங்காவுக்கு வாரவிடுமுறை என்பதால் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது.
    • இன்று 2-வது நாளாக அனுமன் குரங்குகளை தேடும் பணி நடைபெற்றது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி இமாலயன் கிரிக்போன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கொண்டு வரப்பட்டது. அதனை பரிசோதனை செய்து தனியாக அடைத்து வைத்து பூங்கா ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். விரைவில் பயணிகள் பார்வைக்கு அவற்றை திறந்து விட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பூங்காவுக்கு வாரவிடுமுறை என்பதால் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது. அனுமன் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த கூண்டை ஊழியர்கள் சுத்தம் செய்த போது 2 அனுமன் குரங்குகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டன. அதனை பிடிக்க முயன்றபோது மரங்களில் தாவி சென்று விட்டன. இரவு வரை தேடியும் அந்த அனுமன் குரங்குகளை பிடிக்க முடியவில்லை.

    வண்டலூர் பூங்காவில் உள்ள சூழ்நிலைக்கு அனுமன் குரங்குகள் இன்னும் பழக்கப்படாததால் அதனை பிடிக்க முடியாமல் ஊழியர்கள் திணறிவருகிறார்கள். இன்று 2-வது நாளாக அனுமன் குரங்குகளை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் ஊழியர்களின் பார்வையில் சிக்காமல் பூங்காவில் உள்ள மரங்களில் பதுங்கிக்கொண்டது. அதனை தேடும் பணி நடந்து வருகிறது.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, வண்டலூர் பூங்காவை சுற்றி பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அதனை ஆய்வு செய்து வருகிறோம் விரைவில் தப்பி சென்ற 2 அனுமன் குரங்குகளையும் பிடித்து விடுவோம். அவை பூங்காவை விட்டு தப்பி செல்ல வாய்ப்ப்பு இல்லை என்றார்.

    • பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகள் பரிமாற்றத்தின் படி நாட்டில் உள்ள மற்ற பூங்காவிற்கு தேவையான விலங்குகள், பறவைகளை கொடுத்து அங்கிருந்து விலங்குகளை பெறுவது வழக்கம்.

    அதன்படி உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள், பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள். ஒரு ஜோடி இமாலயன் கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.


    இந்த அனுமன் குரங்குள் மற்ற குரங்குகளை விட வித்தியாசமான முக அமைப்பை கொண்டது. அதன் வாய் பகுதி சற்று சிகப்பு நிறமாக இருக்கும். புதிதாக வந்து உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் உடல்நிலையை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து தனிமைப்படுத்தி தனித்தனியாக அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும் பூங்காவில் பொது மக்களின் பார்வைக்கு விடப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே விலங்குகள் பரிமாற்றத்தின் படி வண்டலூர் பூங்காவில் இருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி கட்ட உடல் மலைப் பாம்புகள், இரண்டு ஜோடி சருகு மான்கள், 3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வனவிலங்கு பூங்கா உள்ளது.
    • குரங்கு பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று வனவிலங்கு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வனவிலங்கு பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகள் மற்றும் பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இதில் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அனுமன் குரங்கை இன்னொரு கூண்டிற்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு குரங்கு கூண்டில் இருந்து தப்பி விட்டது. உடனே அதை பிடிக்க ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

    ஆனால் அந்த குரங்கு வனவிலங்கு பூங்காவின் மதில் மேல் ஏறி சாலைக்கு சென்றுவிட்டது. அதனை ஊழியர்கள் துரத்தி சென்றனர். ஆனால் குரங்கு ஊழியர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி விட்டது.

    இந்த குரங்கு பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று வனவிலங்கு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×