search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிக்கடி தகராறு"

    • கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த ஓச்சலம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் மோகன் (வயது 24), டிராக்டர் டிரைவர். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மோகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு மோகன் குடிபோதையில் வீட்டுக் குவந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மோகன் சம்பவதன்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார்.

    அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ராம் சேட் நகரை சேர்ந்தவர் நியாஸ் (வயது 26) பிரியாணி மாஸ்டர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 11-ந் தேதி நியாஸ் மது அருந்தி விட்டு வந்து மனைவிடம் தகராறில் ஈடுபட்டார்.

    பின்னர் வீட்டின் அறையில் தூங்க சென்றார். மறுநாள் அதிகாலையில் அவரது மனைவி கதவை திறந்து பார்த்தார். அப்போது நியாஸ் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரம் வட்டம் மூங்கில்து றைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு பகுதி யைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன். இவரது மனைவி சஞ்சீவி (வயது 21). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொ ன்பரப்பி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சஞ்சீவியின் தந்தை தர்மலிங்கம், தனது மகளை சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், தற்கொலைக்கு தூண்டி யதாகவும் மருமகன் ராமகிருஷ்ணன், அவரது தந்தை ராமசாமி, தாய் ஜெயக்கொடி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் ெசய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சஞ்சீவிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.

    • பொதுமக்கள் சாலை மறியல்
    • போலீசார் வலிசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 38). அப்பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவில் அருகில் 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது கோயில் அருகே ஏன் மது குடிக்கிறீர்கள் என நாகராஜ் கேட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த கும்பல் பீர் பாட்டிலை உடைத்து நாகராஜை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் நாகராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் அப்பகுதி மக்கள் இதுபோன்று அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே அவர்களை கைது செய்யக்கோரி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம்- காஞ்சிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் மர்ம கும்பலை கைது செய்ய‌ கோரி கோஷங்களை எழுப்பினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அடிக்கடி மனைவியுடன் தகராறு
    • போலீஸ் விசாரணை

    நெமிலி:

    நெமிலி அடுத்த பனப்பாக்கம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 47). இவர் சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் மோகன் கடந்த சில வருடங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தன் மனைவியிடம் தகாராறு ஏற்படுதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மீண்டும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மோகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து பார்த்த மனைவிஅதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×