search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டர் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    டிராக்டர் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

    • கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த ஓச்சலம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் மோகன் (வயது 24), டிராக்டர் டிரைவர். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மோகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு மோகன் குடிபோதையில் வீட்டுக் குவந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மோகன் சம்பவதன்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார்.

    அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×