என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரியாணி மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை
- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் தொரப்பாடி ராம் சேட் நகரை சேர்ந்தவர் நியாஸ் (வயது 26) பிரியாணி மாஸ்டர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 11-ந் தேதி நியாஸ் மது அருந்தி விட்டு வந்து மனைவிடம் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் வீட்டின் அறையில் தூங்க சென்றார். மறுநாள் அதிகாலையில் அவரது மனைவி கதவை திறந்து பார்த்தார். அப்போது நியாஸ் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






