search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
    X

    டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

    • அடிக்கடி மனைவியுடன் தகராறு
    • போலீஸ் விசாரணை

    நெமிலி:

    நெமிலி அடுத்த பனப்பாக்கம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 47). இவர் சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் மோகன் கடந்த சில வருடங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தன் மனைவியிடம் தகாராறு ஏற்படுதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மீண்டும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மோகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து பார்த்த மனைவிஅதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×