search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் பயணம்"

    • பல்வேறு ஆயத்த கூட்டங்களுக்கு முதல்வர் சர்மா தலைமை தாங்கினார்.
    • பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாநிலத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 3ம் தேதி செல்கிறார். அங்கு, 11 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    பிரதமரின் வருகைக்கு முன்னதாக பல்வேறு ஆயத்த கூட்டங்களுக்கு தலைமை தாங்கியதாக அம்மாநில முதல்வர் சர்மா கூறினார்.

    இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "அசாம் மக்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்ற எங்கள் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதில் பெரிய கவுரவமாக கருதி, மிகுந்த மகிழ்ச்சியுடன் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

    11,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்" என்றார்.

    மேலும், பிரதமரின் திட்டமிடப்பட்ட பயணத்தை கருத்தில் கொண்டு முதல்வர் சர்மா தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தியதாக முதல்வர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

    • அசாம் அரசு மே 25 அன்று வெற்றி பெற்ற 44,703 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கவுள்ளது.
    • கவுகாத்தியில் உள்ள கானாபராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை அசாமின் கவுகாத்திக்கு வருகை தர உள்ளதால், அம்மாநில தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், அங்கு அசாம் அரசு பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கிட்டத்தட்ட 45,000 பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கப்படுகிறது.

    ஒரு லட்சம் அரசு வேலைகளை வழங்குவதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், அசாம் அரசு மே 25 அன்று வெற்றி பெற்ற 44,703 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கவுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்க இருக்கும் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியை கவுகாத்தியில் உள்ள கானாபராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், "வெற்றி பெற்ற 44,703 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார். அதே நாளில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுவார்" என்றார்.

    மாநில அரசின் 22765 பதவிகளுக்கான கூடுதல் விளம்பரங்களை இந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில அரசு வெளியிடும் என்றும் அசாம் முதல்வர் கூறினார்.

    ×