search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. கவுன்சிலர்"

    • 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை.
    • பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரை பாராட்டி உள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி 38-வது வார்டு குருசாமி நகரில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பயன்பெரும் வகையில் நவீன பூங்கா அமைக்கப்பட்டது.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் பயன்பெற்று வந்தனர்.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. மேலும் பூங்கா முழுவதும் புதர்மண்டி மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரிடம் புகார் அளித்தனர். உடனடியாக அவர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இது குறித்து மாமன்ற கூட்டத்தில் எடுத்து கூறியும், மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. மாறாக தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள். பூங்காக்களை பொருத்தவரை தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பாக பராமரிக்க முடியும். இருந்த போதிலும் மாநகராட்சி டெண்டர் மூலம் பணிகளை மேற்கொள்ளும் என்று காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த அவலம் என்பது அ.தி.மு.க. கவுன்சிலர் வார்டில் மட்டுமல்ல தி.மு.க. கவுன்சிலர் இருக்கக்கூடிய பகுதிகளிலும் இதே நிலை தான்.

    எனவே மாநகராட்சி நிர்வாகத்தை நம்பி பயனில்லை என்பதால் தானாக முன்வந்து பணிகளை சொந்த செலவில் பொதுமக்களின் ஆதரவோடு முன்னெடுத்துள்ளோம். மேலும் இன்று குருசாமி நகர் பகுதியில் உள்ள இந்த பூங்காவில் பணிகளை தொடங்கி உள்ளோம். அடுத்தடுத்து அனைத்து பூங்காக்களையும் தூய்மைப்படுத்தி புத்துயிர் அளிக்கும் பணிகளில் மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. கவுன்சிலரின் இந்த முயற்சிக்கு பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரை பாராட்டி உள்ளனர்.

    • பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
    • பெற்றோர் கோரிக்கைகள் படிப்படியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆட்டோ கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் லயன்ஸ் சுரேஷ், தலைமை ஆசிரியை அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. 42வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாரப்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோர் ஒரு சில கோரிக்கைகள் வைத்து உள்ளீர்கள் .அதனை படிப்படியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாரப்பாளையம் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களின் தனி திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பரீட்சையில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலோ அல்லது தனித்திறமையில் வெற்றி பெற வில்லை என்றாலோ அந்த குழந்தையை உதாசீனப்படுத்தாமல் ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள். பாரப்பாளையம் பள்ளியில் மார்ச் மாதம் நடைபெறும் ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் ,பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சுனில் குருசாமி, திருநகர் பாலு, சக்திவேல், முரளிதரன், சதீஷ்குமார் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை தேவகி நன்றி கூறினார்.

    ×