search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை  38-வது வார்டில் பொதுமக்களுடன் இணைந்து பூங்காவை சீரமைத்த அ.தி.மு.க. கவுன்சிலர்
    X

    கோவை 38-வது வார்டில் பொதுமக்களுடன் இணைந்து பூங்காவை சீரமைத்த அ.தி.மு.க. கவுன்சிலர்

    • 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை.
    • பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரை பாராட்டி உள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி 38-வது வார்டு குருசாமி நகரில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பயன்பெரும் வகையில் நவீன பூங்கா அமைக்கப்பட்டது.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் பயன்பெற்று வந்தனர்.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. மேலும் பூங்கா முழுவதும் புதர்மண்டி மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரிடம் புகார் அளித்தனர். உடனடியாக அவர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இது குறித்து மாமன்ற கூட்டத்தில் எடுத்து கூறியும், மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. மாறாக தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள். பூங்காக்களை பொருத்தவரை தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பாக பராமரிக்க முடியும். இருந்த போதிலும் மாநகராட்சி டெண்டர் மூலம் பணிகளை மேற்கொள்ளும் என்று காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த அவலம் என்பது அ.தி.மு.க. கவுன்சிலர் வார்டில் மட்டுமல்ல தி.மு.க. கவுன்சிலர் இருக்கக்கூடிய பகுதிகளிலும் இதே நிலை தான்.

    எனவே மாநகராட்சி நிர்வாகத்தை நம்பி பயனில்லை என்பதால் தானாக முன்வந்து பணிகளை சொந்த செலவில் பொதுமக்களின் ஆதரவோடு முன்னெடுத்துள்ளோம். மேலும் இன்று குருசாமி நகர் பகுதியில் உள்ள இந்த பூங்காவில் பணிகளை தொடங்கி உள்ளோம். அடுத்தடுத்து அனைத்து பூங்காக்களையும் தூய்மைப்படுத்தி புத்துயிர் அளிக்கும் பணிகளில் மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. கவுன்சிலரின் இந்த முயற்சிக்கு பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரை பாராட்டி உள்ளனர்.

    Next Story
    ×