search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wind"

    • நான்கு பேர் அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகு மூலம் நாகைக்கு வந்துள்ளனர்.
    • விசைபடகு பழுதடைந்து காற்றின் வேகத்தால் திசை மாறி கடல் எல்லைக்கு சென்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25ம் தேதி பூம்புகாரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் (25), அஞ்சப்பன். (45), தமிழ்ச்செல்வன். (45), நிலவரசன். (25), கண்ணன். (40), மாசிலாமணி. (65), பிரகாஷ், மற்றும் மடத்து குப்பம், திருமுல்லைவாசல், தரங்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் என 16 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    நேற்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு எஞ்சின் பழுதடைந்துள்ளது.

    இதனை அடுத்து தகவல் தெரிவிப்பதற்காக அந்த படகில் இருந்து நான்கு பேர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகு மூலம் நாகைக்கு வந்துள்ளனர்.

    அவர்கள் அளித்த தகவலின் பேரில் பூம்புகார் கடற்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட கடல்சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு போலீசார் அளித்த தகவலின் பெயரில் கடலோர காவல் படையினர் பழுதடைந்த பூம்புகார் விசைப்படகு மற்றும் மீனவர்களை தேடினர்.

    குறிப்பிட்ட இடத்தில் படகு இல்லை.

    விசைப்படகு மற்றும் அதிலிருந்து மீனவர்கள் காற்றின் வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்துஇந்திய கடல் படை உதவியுடன் சர்வதேச எல்லையில் இலங்கை அருகே படகு இருப்பதை உறுதிப்ப டுத்தினர்.

    படகு பழுதாகி எல்லை தாண்டி வந்ததால் மீனவர்களையும் படகையும் மீட்டு செல்ல இலங்கை கடற்படை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து தமிழக கடலோர அமலாக்க பிரிவு போலிசாரின் அறிவுறுத்தல் பேரில் பூம்புகார் மீனவர்கள் 8 பேர் விசைப்படகில் சர்வதேச எல்லைக்கு புறப்பட்டனர்.

    அங்கு இந்திய கடற்படை உதவியுடன் பழுதான படகு மற்றும் 12 மீனவர்களையும் இன்று இரவு மீட்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சக்தி காற்றலை மின் உற்பத்தி குறித்த குறும் பாடம் காண்பிக்கபட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
    • மின்துறையில் 8 ஆண்டுகள் சாதனை குறித்து ஒலி, ஒளி காட்சி நடைபெற்றது.

    வேதாரண்யம் :

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமை வகித்தார். மாவட்ட மேற்பார்வை பொறியளார் சதீஷ்குமார் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் புகழேந்தி ,ஆத்மா குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் சோழன், உதவி செயற்பொறியாளர்கள் ரவிகுமார், மலர்வண்ணன், இளம் மின்பொறியாளர் அன்பரசன், உதவி மின்பொறியாளர்கள் மனோகரன், சுப்பிர–மணியன், பாரதிதாசன் கல்லூரி முதல்வர் முருகன், கல்லூரி நாட்டு நலதிட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட மின்துறை அலுவலர்கள் பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் மின்துறையில் 8ஆண்டுகள் சாதனை குறித்து ஒலி ஒளி காட்சி மின்சார விழிப்புணர்வு மின்சார சிக்கனம், குறித்தும் வருங்காலத்தில் மின் சேவையை நிவர்த்தி செய்யசூரிய சக்தி காற்றலை மின் உற்பத்தி குறித்த குறும் பாடம் காண்பிக்கபட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு வேதா–ரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பரிசுகள் வழங்கினார். முடிவில் நாகை கோட்டபொறியார் சேகர் நன்றி கூறினார்.

    • உழவன் மொபைல் செயலி வாயிலாக வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • பருவமழை பொழிவு துவங்குவதை உறுதிப்படுத்தும் வகை.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்மேற்கு பருவமழை பொழிவு துவங்காமல் தாமதித்து வருகிறது. வழக்கமாக, ஏப்ரல், மே மாதத்தில் இருக்கும் பலத்த காற்றும், கோடை கால மழையால் வீசவில்லை.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பருவமழை பொழிவு துவங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

    உடுமலை வட்டாரத்தில் இவ்வாரத்தில் 7.2 முதல் 10.7, குடிமங்கலம் வட்டாரத்தில் 8.4 முதல் 10.6 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என உழவன் மொபைல் செயலி வாயிலாக வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.எனவே அறுவடைக்கு தயாராகி வரும் வாழை மற்றும் இதர சாகுபடிகளில், பலத்த காற்றினால், ஏற்படும் சேதத்தை தவிர்க்கும் வகையில், தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறுவேளாண், தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியபோது, 6 மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சூறாவளி காற்றினால் பெண்ணாடம்-கொள்ளத்தன்குறிச்சி சாலையில் வள்ளலார் அறநிலையம் அருகே 100 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது.

    இதனால் அந்த பகுதியில் இருந்த 6 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    ×