search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banana Cultivation"

    • இப்பகுதி விவசாயிகள் வாழை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
    • வாழை சாகுபடியில் களை மேலாண்மைக்கு புதிய முயற்சியாக எந்திரம் மூலம் களை எடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    முத்தூர்:

    முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம் வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் வருவாய் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் வழியாக கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக திறந்துவிடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இதன்படி இப்பகுதிகளில் 10 மாதங்களில் நன்கு வளர்ந்து கூடுதல் பலன் அளிக்கும் வாழை சாகுபடி கடந்த ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்டது. இதன்படி இப்பகுதி விவசாயிகள் வாழை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை முதலீடு செய்து உள்ளனர்.

    இதன்படி வாழை சாகுபடியில் களை மேலாண்மைக்கு புதிய முயற்சியாக எந்திரம் மூலம் களை எடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி மோட்டார் என்ஜின் மூலம் இயங்கும் களை எந்திரம் வாழை சாகுபடியில் வேர்ப்பகுதி, நடுப்பகுதி, இலை பகுதிகளில் எந்த சேதமும் விளைவிக்காமல் முற்றிலும் வளர்ந்துள்ள புல், செடி களைகளை அகற்றி வயலில் உள்ள மண்களில் மேலே தோண்டி கொண்டு வந்து அதே வாழை கன்றுகளை சுற்றிலும் மண்களால் சமன் செய்து விடுகின்றன.

    இதன்படி இப்பகுதிகளில் வாழை சாகுபடி மேலாண்மையில் களை எடுக்கும் பணிக்கு எந்திரம் பயன்படுத்தப்படுவது வாழை சாகுபடி விவசாயிகளின் நேரம் மேலாண்மையும், பொருளாதாரம் மேலாண்மையும், கூலியாட்கள் பற்றாக்குறையும் நிறைவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கன்று நேர்த்தி மற்றும் தண்டு கூன் வண்டு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
    • மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளங்கலை இறுதியாண்டு வேளாண்மை மாணவர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேளாண் வணிக வளர்ச்சி இயக்குநர் சிவசுப்ரமணியன்,வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பயிர் பாதுகாப்பு வல்லுநர் ஜானகி ராணி ஆகியோரின் முன்னிலையில் வாழை சாகுபடியில் கன்று நேர்த்தி மற்றும் தண்டு கூன் வண்டு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

    இந்த செயல்விளக்கத்தில் விவசாயிகளுக்கு கன்றுகளை தேர்வு செய்தல் குறித்தும், ஈட்டி இலைக்கன்றுகளின் முக்கியத்துவம், பயன்கள், கன்றுகளை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்தும் விளக்கினர். கன்றுகளை நேர்த்தி செய்யும் பொழுது நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தவும், வாடல் நோய் தாக்கத்தைக் குறைக்கவும் உரிய கட்டுப்பாட்டு முறைகளில் பெசிலியோமைசிஸ் லிலாசினஸ் என்னும் பூஞ்சையை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் அதிகம் பயிரிடப்படும் நேந்திரன் ரக வாழையை அதிகம் தாக்கும் தண்டு கூன் வண்டுகளை கட்டுபடுத்தவும் உகந்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்தும், வாழை மட்டைகளை பயன்படுத்தி பொறி அமைத்து தண்டு கூன் வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    • ஆடி மாத காற்று துவங்கியுள்ளதால் வாழை மரங்களை பாதுகாப்பதற்கான பணிகளையும் விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
    • வாழை சாகுபடியில் கன்று நடவு செய்ததும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் அதிக நீர்வளம் மிகுந்த பகுதிகளில் மட்டும் வாழை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இச்சாகுபடியில்வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நேரடி பாசன முறையில் அதிக தண்ணீர் தேவைப்படும்.

    இதனால் தோட்டக்கலைத்துறை வழிகாட்டுதல்படி, சொட்டு நீர் பாசனம் அமைத்து வாழை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது பரவலாக நேந்திரன் ரக வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.ஆடி மாத காற்று துவங்கியுள்ளதால் வாழை மரங்களை பாதுகாப்பதற்கான பணிகளையும் விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வாழை சாகுபடியில் கன்று நடவு செய்ததும், உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் வாரம் ஒரு முறை கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.தண்ணீர் பாய்ச்ச தொழிலாளர்கள் தேவையும் அதிகம் இருந்தது. ஆனால் சொட்டு நீர் பாசன முறையில், வாழைக்கன்றுகளுக்கு அருகிலேயே தண்ணீரை நேரடியாக பாய்ச்ச முடியும்.இதனால் 40 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

    சொட்டு நீர் பாசனத்தில் தினமும் 2 மணி நேரம் பாசனம் செய்தால் போதும். தொழிலாளர் தேவையும் இல்லை.உரங்களை தண்ணீரில் கரைத்தும் வாழை மரங்களுக்கு வழங்கலாம். போதிய இடைவெளி விட்டு, வாழைக்கன்றுகளை நடவு செய்வதால் களைகளை அகற்றுவதும் எளிதாக மாறியுள்ளது.சொட்டு நீர் பாசனத்துக்கு தோட்டக்கலைத்துறை வாயிலாக முழு மானியம் வழங்க வேண்டும். மேலும், திசு வாழை ரக கன்றுகளை தோட்டக்கலை பண்ணை வாயிலாக உற்பத்தி செய்து வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • உழவன் மொபைல் செயலி வாயிலாக வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • பருவமழை பொழிவு துவங்குவதை உறுதிப்படுத்தும் வகை.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்மேற்கு பருவமழை பொழிவு துவங்காமல் தாமதித்து வருகிறது. வழக்கமாக, ஏப்ரல், மே மாதத்தில் இருக்கும் பலத்த காற்றும், கோடை கால மழையால் வீசவில்லை.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பருவமழை பொழிவு துவங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

    உடுமலை வட்டாரத்தில் இவ்வாரத்தில் 7.2 முதல் 10.7, குடிமங்கலம் வட்டாரத்தில் 8.4 முதல் 10.6 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என உழவன் மொபைல் செயலி வாயிலாக வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.எனவே அறுவடைக்கு தயாராகி வரும் வாழை மற்றும் இதர சாகுபடிகளில், பலத்த காற்றினால், ஏற்படும் சேதத்தை தவிர்க்கும் வகையில், தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறுவேளாண், தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ×