search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat Kolhi"

    • இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை.
    • ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது.

    இணைய தளத்தில் மிகப்பெரிய தேடும் மையமாக கூகுள் அமைந்துள்ளது. கூகுள் பக்கத்தில் தேடினால், கிடைக்காதது ஏதும் கிடையாது எனலாம். இணைய தளம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சந்தேகம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதாக கூகுள்தான்.

    இவ்வளவு புகழ் வாய்ந்த கூகுள் நிறுவனம், தங்களது தேடும் பக்கத்தில் கடந்த 25 வருடத்தில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர், விளையாட்டு வீரர் யார் என்பதை தெரிவித்துள்ளத.

    இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களை பட்டியல் இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சர்வதேச சதங்கள் (50) அடித்த விராட் கோலிதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.

    விராட் கோலி இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார். கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை. இருந்த போதிலும் கூகுளில் தேடும் நபர்களில் நம்பர் ஒன்னாக திகழ்கிறார். இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பத்திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    ஆனால் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நகர் கிளப்பில் விளையாடி வருகிறார். 38 வயது ஆனாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.

    ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. ரொனல்டோ ரியால் மாட்ரிக் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய காலம் கால்பந்து விளையாட்டின் பொற்காலம் எனலாம்.

    ரொனால்டோ மாஸ்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிக் அணிகளுக்காக விளையாடிய 15 வருட காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.

    • சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ளார்.
    • ரோகித் சர்மா 31 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு முன் இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்தார்.

    இன்று நடைபெற்று வரும் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கெதிராக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    • ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை.
    • ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து சாதனை.

    உலகக் கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.

    இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி 50 ரன்களை கடப்பது இது 8-வது முறையாகும். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 2003-ல் 7 முறை அடித்திருந்தது இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி அதை முறியடித்துள்ளார்.

    ஷாகில் அல் ஹசன் 2019-ல் 7 முறையும், ரோகிர் சர்மா மற்றும டேவிட் வார்னர் ஆகியோர் 2019-ல் தலா 6 முறையும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

    மேலும், 80 ரன்களை தொட்டபோது இந்த தொடரில் 674 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் இதற்கு முன் 2003-ல் 673 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்திருந்தார். தற்போது சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

    ஹெய்டன் 2007-ல் 659 ரன்களும், ரோகித் சர்மா 2019-ல் 648 ரன்களும், டேவிட் வார்னர் 2019-ல் 647 ரன்களும் எடுத்துள்ளனர்.

    ×