search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore district"

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 9-ந்தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 681 ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கிறது.
    வேலூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 2019 ஜனவரியில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, பெயர் நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இதில், பெயர் சேர்த்தலுக்காக 3 லட்சம் விண்ணப்பங்கள் (படிவம் 6) பெயர் நீக்கம் செய்ய 56 ஆயிரம் விண்ணப்பங்கள் (படிவம்7), திருத்தம் செய்ய 3 லட்சம் விண்ணப்பங்கள் (படிவம்8ஏ) ஆயிரத்து 500 என்ற எண்ணிக்கையில் வந்துள்ளது.

    அத்துடன், ஒவ்வொரு விண்ணப்ப படிவத்தில் இருந்தும், எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை கணக்கீடு செய்வதற்கான அப்ஸ்ட்ராக்ட் படிவங்களையும் சேர்த்து மொத்தம் 11 லட்சத்து 47 ஆயிரத்து 500 படிவங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் வரும் 9-ந்தேதி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 681 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடக்கிறது.

    இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. ஒவ்வொரு தாலுகாவுக்கும் தலா 20 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை உரிய ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து கலர் போட்டோவுடன் அங்கேயே வழங்கலாம்.

    எந்த ஓட்டுச்சாவடி மையத்திலாவது படிவங்கள் இல்லை என்றால், அங்கிருக்கும் ஓட்டுச்சாவடி அதிகாரி, மண்டல அதிகாரியை தொடர்பு கொண்டால் உடனடியாக படிவங்கள் கொண்டு வந்து தரப்படும்.

    இவ்வாறுஅவர் கூறினார்.
    வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 86 ஆயிரத்து 758 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 37 ஆயிரத்து 103 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 118 பேரும் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

    வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக 1,681 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். பொதுமக்கள் அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று சரிபார்க்கலாம்.

    பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் மேற்கொள்ள படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ ஆகிய விண்ணப்பங்களை பெற்று திருத்தங்களை சரி செய்து கொள்ளலாம்.

    இந்த விண்ணப்பங்களை பெறும் வாக்காளர்கள் சமீபத்தில் எடுத்த வண்ண புகைப்படத்தை மட்டுமே ஒட்ட வேண்டும். கருப்பு- வெள்ளை புகைப்படம் ஏற்று கொள்ளப்படாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற 9-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 7-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம்.

    அதேபோல் வேலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி வாக்காளர் பட்டியலை வாசித்து காண்பிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, அனைத்து கிராமங்களிலும் வருகிற 8-ந் தேதி, 22-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய நாளில் சுருக்க திருத்தம்-2019 வரைவு வாக்காளர் பட்டியலை பார்வைக்கு வைத்தல் என்ற பொருளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.

    கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் 30 லட்சத்து 51 ஆயிரத்து 171 பேர் இடம் பிடித்திருந்தனர். அதையடுத்து நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 10 ஆயிரத்து 883 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். 38 ஆயிரத்து 75 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தேர்தல் தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    வேலூர் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து 1 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்து 192 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. 12 ஆயிரத்து 676 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 8 போலீஸ் உட்கோட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துப் போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல், ஜூலை மாதம் வரை 7 மாதங்களில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2,119 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 35 ஆயிரத்து 665 பேர் மீதும், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டிய 725 பேர் மீதும், ‘ஷீட் பெல்ட்’ அணியாமல் கார் ஓட்டிய 8 ஆயிரத்து 324 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டிய 14 ஆயிரத்து 310 பேர் மீதும், அதிகபாரம் ஏற்றிய 1,109 வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள், சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள், அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்கள் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 834 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 1 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்து 192 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

    மேலும் கடந்த 7 மாதங்களில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றது, சாலையில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 16 ஆயிரத்து 760 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

    அதன்பேரில் 12 ஆயிரத்து 676 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    வேலூர் மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்ய பட்டியல்கள் தயாரிக்கும் பணியில் போலீசார் வேகம் காட்டி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சமீப காலமாக ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் தலைத் தூக்கியுள்ளது.

    தாதாக்கள் போல் செயல்படும் ரவுடிகளை தவிர அவர்களிடம் அடியாட்களாக இருந்த முதல் கட்ட ரவுடிகளும் ஏராளமானோர் உள்ளனர். வேலூரை போலவே காட்பாடியிலும் ரவுடிகள் பட்டியல் நீள்கிறது.

    இந்நிலையில், சென்னையில் பிரபல ரவுடியான பினு என்பவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் பிறந்த நாளை கொண்டாட முயன்றான். இதையறிந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அன்று முதல், சென்னை மாநகரம் முழுவதும் ரவுடிகளை கைது செய்யும் படலம் தொடர்ந்தது.

    அத்துடன், ரவுடிகளை என்கவுன்டரில் போட்டுத் தள்ளவும் போலீசார் திட்டமிட்டனர். இதனால் அதிர்ந்து போன ரவுடிகள் தாமாக முன்வந்து போலீஸ் நிலையங்களிலும், கோர்ட்டுகளிலும் சரணடைந்து வருகின்றனர்.

    அதே நேரம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியல் தயார் செய்து கைது செய்யும் படலம் தொடர்ந்தது.

    இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் ரவுடிகள் பட்டியல்கள் தயாரிக்கும் பணியில் போலீசார் வேகம் காட்டி வருகின்றனர்.

    ×