search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு
    X

    வேலூர் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு

    வேலூர் மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்ய பட்டியல்கள் தயாரிக்கும் பணியில் போலீசார் வேகம் காட்டி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சமீப காலமாக ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் தலைத் தூக்கியுள்ளது.

    தாதாக்கள் போல் செயல்படும் ரவுடிகளை தவிர அவர்களிடம் அடியாட்களாக இருந்த முதல் கட்ட ரவுடிகளும் ஏராளமானோர் உள்ளனர். வேலூரை போலவே காட்பாடியிலும் ரவுடிகள் பட்டியல் நீள்கிறது.

    இந்நிலையில், சென்னையில் பிரபல ரவுடியான பினு என்பவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் பிறந்த நாளை கொண்டாட முயன்றான். இதையறிந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அன்று முதல், சென்னை மாநகரம் முழுவதும் ரவுடிகளை கைது செய்யும் படலம் தொடர்ந்தது.

    அத்துடன், ரவுடிகளை என்கவுன்டரில் போட்டுத் தள்ளவும் போலீசார் திட்டமிட்டனர். இதனால் அதிர்ந்து போன ரவுடிகள் தாமாக முன்வந்து போலீஸ் நிலையங்களிலும், கோர்ட்டுகளிலும் சரணடைந்து வருகின்றனர்.

    அதே நேரம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியல் தயார் செய்து கைது செய்யும் படலம் தொடர்ந்தது.

    இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் ரவுடிகள் பட்டியல்கள் தயாரிக்கும் பணியில் போலீசார் வேகம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×