search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vastu"

    • பணமே இந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளது.
    • பணப்பெட்டியை எப்போதும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மற்ற எல்லாவற்றையும் விட நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடம் பணப்பெட்டி வைக்கும் அறைக்கு... ஏனென்றால் பணமே இந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளது.

    வடக்கு திசை குபேரன் திசையாகும். குபேரன் செல்வத்துக்கு அதிபதி. எனவே பணப்பெட்டி வடக்கு திசையை நோக்கி பணப்பெட்டியை வைக்கலாம். இது தவிர தென் மேற்கு மூலையிலும் பணப்பெட்டி இடம்பெறலாம். தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்தப்படி பணப்பெட்டியை வைப்பதே மிக சிறந்தது. இவ்வாறு அமைக்கும் பெட்டியில் வைக்கும் பணம் அள்ள, அள்ள குறையாமல் இருக்கும். செல்வம் வேகமாக சேரும்.

    பணப்பெட்டியை எப்போதும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள பணம் முழுவதையும் எடுத்து விடாமல் அதில் ஒரு ரூபாயாவது போட்டு வைக்க வேண்டும்.பணப்பெட்டி இருக்கும் அறையின் கதவு ஒற்றையாக இருக்க வேண்டும். அந்த அறையின் நுழைவு வாயில் வடக்கு திசையிலோ, கிழக்கு திசையிலோ இருக்க வேண்டும். இதனால் செல்வ செழிப்பு கூடும். நுழைவுவாயில் வட மேற்கிலோ, தென்மேற்கிலோ அல்லது தென் கிழக்கு திசையிலோ இருக்க கூடாது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

    வீட்டில் பணத்தை அலமாரியில் வைப்பதாக இருந்தால் அதிகமான எடையை ஏற்றக்கூடாது. அலமாரியின் மேல் தட்டிலோ அல்லது நடுத்தட்டிலோதான் பணத்தை வைக்க வேண்டும். பணம் இருக்கும் தட்டில் துணிமணிகளை வைக்கக்கூடாது. இது செல்வம் கரைந்து போக வழி வகுக்கும். பணம் இருக்கும் இடத்தில் வாசனை திரவியங்களை போட்டு வைக்க கூடாது. பணம் இருக்கும் பெட்டியின் கால் ஆடக்கூடாது. பணப்பெட்டியை சுவருக்கும் புதைத்து வைப்பதாக இருந்தால், அந்த பெட்டியின் கீழ் தட்டில் தான் பணத்தை வைக்க வேண்டும். மேல்தட்டில் வைக்கக்கூடாது.

    • குழந்தைகளுக்கான அறை வடமேற்கில் அமைக்கலாம்.
    • குளியலறை வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் அமைக்கலாம்.

    வீட்டின் படுக்கையறை சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்கலாம் வீட்டின் உரிமையாளர் குடும்பத் தலைவர் படுக்கையறை தென்மேற்கு திசையில் அமைவது நலம். படுக்கை தெற்கு பக்கம் அல்லது கிழக்குப் பக்கம் தலை வைத்து படுப்பது போல் இருந்தால் சிறப்பு. நாம் படுத்து உறங்கும்போது நம் தலைக்கு நேராக மேலே பீம் போன்றவை இல்லாமல் இருத்தல் நல்லது.

    *குழந்தைகளுக்கான அறை வடமேற்கில் அமைக்கலாம். போதுமான சூரிய ஒளியும் காற்றோட்டம் நிறைந்ததாக அறை அமைய வேண்டும். மனதிற்கு இதமான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய வண்ணங்களில் சுவர்கள் இருப்பின் குழந்தைகளை மகிழ்ச்சியில் வைத்திருக்கும். அவர்கள் படிக்கும் பகுதி சுத்தமாக புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் சரியாக அடுக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

    *குளியலறை வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் அமைக்கலாம். போதுமான சூரிய வலியும் காற்றோட்டமும் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே வீட்டில் எப்பொழுதும் குளியல் அறையில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் உடனுக்குடன் சீர் செய்ய வேண்டும். குளியலறைக்கும் பூஜை அறைக்கும் இடைவெளி சற்று அதிகமாக இருக்க வேண்டும் பக்கத்து பக்கத்தில் இருக்கக் கூடாது.

    *அனைவரும் புழங்கக்கூடிய அறை அல்லது கூடம் வட திசையில் இருக்க வேண்டும். வீட்டின் தலைவர் வடக்கு நோக்கியோ கிழக்கு நோக்கியோ அமரும் வண்ணம் அவரது இருக்கை அமைய வேண்டும்.

    • வடக்கு திசையில் சமையல் அறை அமைக்கக் கூடாது.
    • வடக்கும் மேற்கும் சேரும் மூலை வாயவியம் எனப்படும்.

    வடக்கு பாகத்தின் பலன்கள் பெண்கள் மற்றும் செல்வத்திற்கு உரியது. வடக்கு பாகம் பொதுவாக பள்ளமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அந்த வீட்டு பெண்கள் இன்பமாக இருப்பார்கள் மேலும் செல்வம் பெருகும். வடக்கில் காலியிடம் இருக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் ஈசான்யம் வழியாக வெளியேறினால் அந்த வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். வடக்கு திசையில் சமையல் அறை அமைக்கக் கூடாது. வீட்டில் உள்ள எல்லா அறைகளிலும் வடக்கு பகுதி தூய்மையாக இருக்க வேண்டும்; குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * வடக்கும் மேற்கும் சேரும் மூலை வாயவியம் எனப்படும். வாயவியம் மூளை நன்றாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் மிகப் பெரிய செல்வந்தர் ஆவார். அது தவறாக இருந்தால் அவர் ஆண்டியாவர். வாயவியத்தில் கழிப்பறைகள் அமைக்கலாம். வாயவியம் பாகத்தில் கிணறு இருந்தால் வழக்குகளாலும் நோயாலும் துன்பம் வரும். கனமான பொருட்கள் இந்த மூலையில் வைக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் வாயவியம் மூலை வழியாக வெளியில் செல்லக் கூடாது.

    • சீன வாஸ்து பரிகார முறையாக விண்ட் சைம்கள் கருதப்படுகிறது.
    • விண்ட் சைம்களை வீட்டின் தலைவாசலுக்கு மேலாக தொங்கவிடுவது நல்லது.

    நமக்கு தொடர்ந்து அதிர்ஷ்டங்கள் உண்டாகவும், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் "விண்ட் சைம்கள்" உபயோகிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட இந்த விண்ட் சைம்கள் இப்போது நம் நாட்டிலும் பரவலாக விற்கப்படுகிறது. மக்களில் பலரும் விண்ட் சைம்களை வாங்கி தங்கள் வீடுகளில் தொங்க விட்டுக்கொள்கின்றனர். சீன வாஸ்து பரிகார முறையாக இந்த விண்ட் சைம்கள் கருதப்பட்டாலும் பழங்கால இந்தியாவில் சிறு, சிறு மணிகள் கோர்த்து கோவில்களில் காற்று வீசும் போது ஒலி எழுப்பும் வகையில், இதை உபயோகப்படுத்தியிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

    உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட விண்ட் சைம்கள் காற்றில் அசையும் போது, தொங்கிக்கொண்டிருக்கும் உலோக குழாய்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒரு விதமான ஆன்மீக சக்தி கொண்ட ஒலியை எழுப்புகிறது. இந்த ஒலிக்கு, நமது வீட்டை சுற்றிலும் இருக்கும் பகுதிகளில் நேர்மறை அதிர்வுகளை அதிகம் பரப்பும் தன்மை கொண்டது. மேலும் இந்த ஒலிக்கு மனிதர்களின் மனதில் தீய எண்ணங்கள், சிந்தனைகள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி கொண்டதாகும். வீட்டினுள் வெளிப்புற சூழல்கள் மற்றும் நபர்களால் அனுப்பப்படும் எதிர்மறை அதிர்வுகளை வீட்டிற்குள் வர விடாமல் விரட்டும் தன்மை அதிகம் உண்டு.

    விண்ட் சைம்கள் தொங்க விடப்பட்டிருக்கும் வீடுகளில் துஷ்ட சக்திகள் நுழைய முடியாது. அந்த விண்ட் சைம்கள் அடிக்கடி எழுப்பும் ஒலியை கேட்பவர்களுக்கு உடல் மற்றும் மனநிலை நன்றாக இருக்கும். தொடர்ந்து பல அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். செல்வ நிலை உயரும். அனைத்திலும் வெற்றி பெறும் நிலையையும் உண்டாக்கும். இந்த விண்ட் சைம்களை வீட்டின் தலைவாசலுக்கு மேலாக தொங்கவிடுவது நல்லது.

    • ஒரு இடமானது சதுரமான அளவுகளில் அமைந்திருப்பது வாஸ்துவில் முதல் தரமானதாகக் கருதப்படும்.
    • வீடு கட்டுவதற்கு எப்போதுமே வட்ட வடிவமான இட அமைப்பு நிச்சயம் ஒத்து வராது.

    நாம் ஒரு இடத்தை அல்லது மனையைத் தேர்வு செய்யும்போது, அந்த இடத்தின் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், சீரற்ற நீள, அகலங்கள் கொண்ட இடங்களை நாம் வாங்கி, வாஸ்து சாஸ்திரப்படி இடத்தை சீரமைத்து, கட்டிடத்தைக் கட்டும்போது நிறைய இடத்தைப் பயன்படுத்த முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. பயன்படுத்த இயலாத இடங்களையும் எப்படியாவது சரி செய்து பயன்படுத்த இயன்றவரையில் வாஸ்து விதிகள் உதவி செய்கின்றன. ஆனால், கட்டிடத்தின் மொத்தமான பயன்பாட்டிற்கு அது சேராமல் தனியாக நிற்கும் நிலை ஏற்படும். அதிக பண மதிப்புள்ள இடத்திற்குத்தான், இந்தப் பிரச்சினை அதிகமாக வருகிறது. அதனால் முன்கூட்டியே இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுப்பது அவசியம்.

    ஒரு இடமானது சதுரமான அளவுகளில் அமைந்திருப்பது வாஸ்துவில் முதல் தரமானதாகக் கருதப்படும். அதாவது நான்கு புறங்களிலும் சரியான அளவுகள் கொண்டவை, இந்த வகையைச் சார்ந்தவையாகும். சதுரமான மனைகளில் வடக்கு அல்லது தெற்குப் பார்த்து அமைந்த இடங்கள் பெண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது அதில் வசிப்பவர்கள் மென்மையான போக்கு கொண்டவர்களாக இருப்பர். பொதுவாக இவர்கள் கலை அல்லது அழகியல் சம்பந்தமான தொழிலில் முன்னுக்கு வருபவர்கள் ஆவார்கள். சதுரமான மனைகளில் கிழக்கு அல்லது மேற்குப் பார்த்த இடங்கள் ஆண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது, அதில் வசிப்பவர்கள் தமது முடிவுகளில் தீர்க்கமாகவும், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நிலைப்பாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக இவர்கள் அரசுத் துறையிலோ அல்லது ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியிலோ அல்லது சமூகத்தின் முக்கியப் புள்ளியாகவோ இருப்பார்கள்.

    இரண்டாவது நல்ல தரமாகக் கருதப்படுவது செவ்வக வடிவமான இடமாகும். அதாவது இருமடங்கு நீளமும், ஒரு மடங்கு அகலமும் கொண்டவையாகும். அல்லது இருமடங்கு அகலமும் ஒரு மடங்கு நீளமும் கொண்டவையாகும். இதிலும் கிழக்கு, மேற்கு நீளம் கொண்ட மனைகள் மற்றும் தெற்கு, வடக்கு நீளம் கொண்ட மனைகள் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் கிழக்கு, மேற்கு நீளம் கொண்ட மனைகள் சிவத் தத்துவம் பொருந்திய ஆண் மனையாகக் கருதப்படும். அந்த இடமானது ஆண்களது சகல முயற்சிகளையும் வெற்றியை நோக்கிச் செலுத்தக்கூடியது. தெற்கு, வடக்கு நீளம் கொண்ட மனைகள் சக்தியின் அம்சம் கொண்ட பெண் மனையாகக் கருதப்படும். அந்த இடமானது அங்குள்ள பெண்கள் முன்னின்று செய்யும் சகலவிதமான காரியங்களுக்கும் நல்ல வெற்றி வாய்ப்புகளைத் தரக்கூடியது.

    வீடு கட்டுவதற்கு எப்போதுமே வட்ட வடிவமான இட அமைப்பு நிச்சயம் ஒத்து வராது. காரணம் அதில் இரு திசை சக்திகள் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இல்லாததாகும். அதாவது ஈசானியம், அக்னி, வாயு, நிருதி ஆகிய மூலைகள் வடிவமைப்பில் வராமல் வளைவில் ஒடுங்கி நிற்கும். அதனால் பஞ்சபூத சக்திகள் சமஅளவில் பரவி, குடியிருக்கும் வீட்டில் சாதகமான அலை இயக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது. ஆனால், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், கோவில்கள், பொதுக்கட்டிடங்கள் ஆகியவற்றை வட்ட வடிவ மனைகளில் அமைக்கலாம்.

    வீடுகள் கட்ட சதுரம் அல்லது செவ்வகம் தவிர நீள்சதுரம், அகலத்தைப்போல மூன்றுக்கும் மேற்பட்ட மடங்கு நீளம் கொண்ட இடங்கள், வட்டம், அரைவட்டம், நான்கிற்கும் மேற்பட்ட கோணங்கள் உள்ளவை, ஓவல் வடிவங்கள், நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகள் கொண்டவை, இன்னும் பிற வித்தியாசமான வடிவங்கள் ஆகியவற்றை நாம் தேர்வு செய்வதில் மிக்க கவனத்துடன் செயல்பட வேண்டும். சில தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில், கட்டாயமாக அந்த இடத்தை வாங்கித்தான் ஆக வேண்டும் என்றால் மட்டுமே, வாஸ்துப்படி அதில் சீர்திருத்தங்கள் செய்ய இயலுமா? என்று ஆராய வேண்டும். அதன்பிறகு நமக்கு சாதகமான அம்சங்கள் அதில் இருந்தால், அதில் ஈடுபட்டு வெற்றி காணலாம்.

    • 33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது.
    • பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும்.

    இந்தியாவில் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. பசுவினை கோமாதா என்றே அழைக்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, க்ரீஸ், பண்டைய இஸ்ரேல் மற்றும் ரோம் நகரிலும் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. இந்து மரபின் படி, கோமாதா கொண்டிருக்கும் விஷேச சக்திகள் பின்வருமாறு.

    33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினுள் குடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஓர் இல்லத்தில் உள்ள பசுவினுடைய இருப்பு பலத்தரப்பட்ட நோய்களுக்கும் நிவராணமாக உள்ளது.

    எப்போது ஒரு பசுவானது நிறைவடைகிறதோ அப்போது அப்பசுவை கவனித்து கொண்டவர் நிறைந்த அரோக்கியம் செல்வம் வளம் அனைத்தையும் பெறுவதாக நம்பப்படுகிறது. மேலும் வாஸ்து தோஷம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதனை பசுவின் சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை கொண்டு அதற்கான நிவாரணத்தை காண முடியும். காலம் காலமாக முனிவர்கள், ரிஷிகள், அறிஞர்கள் புத்திவான்கள் அனைவரும் பசுவினை வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஒரு வார்த்தையில் சொல்வதனால், பசு என்பது நேர்மறை ஆற்றலின் பிறப்பிடமாகும். மேலும் பசுவிற்கு செய்யும் பணிவிடைகளின் மூலமும் நம் பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.


    ஒவ்வொறு நாளும் பசுவிற்கு உணவினை அளிப்பது ஒருவருக்கு நல்வாழ்வை வழங்கும் என சொல்லப்படுகிறது. கோவில்களில் இருக்கும் கோசாலைகளில் பலர் பசுவிற்கு கீரைகளை அர்ப்பணம் செய்வதை நாம் பார்க்கக்கூடும். ஜாதகங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு பரிகாரமாக இவை செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். மேலும், நீங்கள் எங்காவது ஒரு நல்ல காரியமாக செல்கிற போது பசுவினுடைய சப்தத்தை கேட்டால் அது அக்காரியம் வெற்றி என்பதை குறிப்பதாக கருதப்படுகிறது.

    மேலும் ஏதேனும் கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பின் புனித பசுவின் வால் பகுதியில் அமைந்துள்ள ஜடையை கொண்டு ஏழு முறை மந்திரிப்பதை போன்ற செயலை செய்கிற போது திருஷ்டிகளை களைய முடியும். பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும். பசுவினுடைய நெய்யினால் தீபம் ஏற்றப்பட்டால் அது பல நல்ல அதிருவ்களை ஈர்ப்பதாக அமையும். வீட்டின் பூஜையறையில் கிருஷ்ணர் பசுவினுடன் இருப்பதை திருவுருவ படத்தை வைத்து வழிபட்டால் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை. நலம், வளம், செல்வம் என அனைத்து செளபாக்கியங்களையும் பசுவினை வழிபடுவது நம் நல்வாழ்விற்கு பெரும் உதவியாக அமையும். மகிழ்வான வாழ்விற்கு கோமாதாவின் ஆசிகளை பெறுவது அவசியமாகும்.

    • இப்போதுள்ள நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எந்த விதமான மண்ணிலும் கட்டிடம் அமைக்க இயலும்.
    • மனைப்பகுதியில் தாமரைக்குளத்தின் வாசனை, மாட்டுத் தொழுவ வாசனை போன்றவை இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

    வீட்டு மனை அல்லது வயல், தோட்டம் வாங்கும்போது முதலில் கவனிக்க வேண்டியது, மனையில் மண்ணின் தன்மை என்ன என்பதுதான். மண் என்ன நிறத்தில் உள்ளது. என்ன மணம் வீசுகிறது. பாறைகளுடன் கூடியதா, சிறுசிறு கூழாங்கற்கள் உள்ள இடமா, சாதாரண மண் அமைப்பா, சதுப்பு நிலமா அல்லது பெரிய மரங்கள் இருக்கும் காட்டுப் பகுதியா என்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மனைப்பகுதியில் தாமரைக்குளத்தின் வாசனை, மாட்டுத் தொழுவ வாசனை போன்றவை இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

    வெளிர் நிறமண், சற்றே இள மஞ்சள், செம்மண், சற்றே கருப்பாக உள்ள மண், பழுப்பு நிற மண், விவசாயம் செய்த மண், அதிகமாகக் கூழாங்கற்கள் இல்லாதது ஆகியவை வீடுகள் கட்ட உகந்தவை. இடத்தின் மண்ணை எடுத்துத் தண்ணீர் தெளித்துவிட்டு சில மணி நேரம் கழித்துப் பார்க்கும்போது நுரையாக இருந்தால் பொருளாதார வளம் கொண்ட மண் அமைப்பாகவும், தயிர் வாசனை வீசினால் சமமான வாழ்வு தரும் மண் அமைப்பாகவும், தேன் வாசனை வீசினால் முன்னேற்றமான வாழ்வு தரும் மண் அமைப்பாகவும் கருதலாம். நெய் வாசனை, மீன் வாசனை முதலியவை குறைந்த பலன்களைத் தரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

    இப்போதுள்ள நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எந்த விதமான மண்ணிலும் கட்டிடம் அமைக்க இயலும். இப்போது நடைமுறையில் உள்ள மண்ணின் பளு தாங்கும் திறன் சோதனை (LOAD BEARING CAPACITY TEST) மூலமாக நாம் அமைக்கும் கட்டிடத்தின் அளவுகளையும், உயரங்களையும் எளிதாக முடிவு செய்யலாம். பெரும் நீர்ப்பரப்பான கடலில் கூட உணவகங்கள், விமான ஓடுதளங்கள், தங்கும் விடுதிகள், போக்குவரத்திற்கான பாலங்கள் முதலியன தற்போது அமைக்கப்பட்டு உள்ளன.

    பழைய காலங்களில் நமது வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் மண்ணின் வலு மற்றும் அதன் சாதகமான அம்சங்களைத் தெரிந்துகொள்ள பல்வேறு வழிகளைக் கையாண்டுள்ளனர். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடத்தின் மையத்தில் ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழம் உடைய ஒரு குழி பறிக்க வேண்டும். வெளியே எடுக்கப்பட்ட மண்ணை மீண்டும் அந்தக் குழிக்குள் போட்டுக் குழியை மூடினால், மூடப்பட்டது போக மண் மீதியாக இருந்தால் அந்த நிலம் கட்டிடம் அமைக்க உத்தமமான இடமாகும். மீதம் எதுவும் இல்லாமல் மூடப்படுவதற்கு மட்டுமே மண் சரியாக உள்ள நிலம் மத்திமமான இடமாகும். வெட்டப்பட்ட குழியில் வெட்டிய மண்ணைப் போட்டு மூடிய பிறகும் குழியானது நிரம்பாமல் இருந்தால், அந்த நிலமானது அவ்வளவு சரியானதல்ல என்பது முன்னோர்களின் கணிப்பு.

    மேலும் இடத்தின் மையத்தில் ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் குழி எடுத்து, அதில் சுத்தமான நீரை நிரப்பி வைத்து விட்டு 12 மணி நேரம் கழித்து வந்து பார்க்கும்போது, குழியிலுள்ள நீர் பாதிக்கும் மேலாக இருந்தால் அது நல்ல நிலமாகவும், நீரானது பாதிக்கும் குறைவாக இருந்தால் மத்தியமான நிலமாகவும், சுத்தமாக நீரே இல்லாமல் இருந்தால் அது அவ்வளவு சரியாக வராது என்றும் முடிவு செய்தார்கள். அவ்வாறு வெட்டப்பட்ட குழியில் சுத்தமான நீரை, ஒரு சுப ஹோரையில் நிரப்பிய பின்பு அதில் மலர்களைப் போடவேண்டும். அவ்வாறு நாம் போட்ட மலர்கள் வலமாகச் சுற்றினால் அதாவது கடிகாரமுள் சுற்றுவது போலச் சுற்றினால், அம்மனையில் நல்ல சக்திகள் ஆட்சி செய்கின்றன என்றும், அவ்வாறு போடப்பட்ட மலர்கள் இடமாகச் சுற்றினால், அம்மனையில் சுபமான சக்திகள் அவ்வளவாகப் பலம் பெறவில்லை என்றும் பொருள்.

    சரியான முடிவுகள் கிடைக்கப்பெறாத நிலங்களை ஆராய்ந்து பார்த்த அக்கால வாஸ்து சாஸ்த்திர நிபுணர்கள், அந்த நிலங்களின் பஞ்சபூத விகிதாச்சாரங்களில் ஏற்பட்ட குற்றம் குறைகளை, அதனதன் தன்மைக்கேற்ற விதங்களில் நிவர்த்தி செய்த பின்பே கட்டிட வேலைகளை தொடங்கி நல்ல விதமாகக் கட்டி முடித்தார்கள்.

    • தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும்.
    • கீழ்கண்ட வாஸ்து முறைகளை கடைபிடித்தால் வெற்றி பெறலாம்.

    வியாபாரம், தொழில் நிறுவனங்களில் கீழ்கண்ட வாஸ்து கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என்று ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அது பற்றி பார்ப்போம்:-

    பூஜை இடம்: கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத்தொடங்க வேண்டும்.

    வாசற்படி: கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கடைகளில் படிகளை வட மேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம். வடகிழக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரை வட்டம் வடிவமும் கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக் கூடாது.

    கதவுகள்: கடையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஷட்டர்கள் இருக்கும் போது கீழே கொடுக்கபட்ட விதிகளின் படி அவற்றைக்கையாள வேண்டும்கிழக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறாக அமைக்கக் கூடாது. இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.

    கிழக்கு பார்த்த கடை: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணபெட்டி காசாளரின் இடது பக்கம் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரண்டு திசைகளிலும் அமரக் கூடாது.

    மேற்கு பார்த்த கடை : வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கைபுறம் பணபெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணபெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக்கூடாது.

    வடக்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இந்த நியதிக்கு எதிர்மாறாகச் செய்யக் கூடாது. மேற்கு பார்த்தகடைகளில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது. வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது.

    • வாஸ்துவில் திசைகள் என்பது மிக மிக முக்கியமானது.
    • மீன் தொட்டியை எந்த திசையில் வைப்பது நல்லது என்று பார்க்கலாம்.

    வாஸ்து என்பது வேத கால அறிவியல். வாஸ்து முறைப்படி வீடு அமையாவிட்டால் ஏற்படும் துன்பங்களை சரி செய்வதற்கு பல வழிகள் உண்டு. அவற்றில் ஒன்று வீட்டில் மீன் வளர்ப்பது. மீன்கள் தீய அதிர்வுகளை தனக்குள் இழுத்து வெளியேற்றும் ஆற்றல் உண்டு. இனி வீட்டில் மீன் தொட்டியை எங்கு வைப்பது, அதில் என்னென்ன வாஸ்து மீன்கள் வளர்க்கலாம், அதனால் அடையும் பயன் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

    வீட்டின் வரவேற்பறையில் தென்மேற்கு மூலையில் மீன் தொட்டியை வைப்பது சிறப்பு . வாஸ்துவில் திசைகள் என்பது மிக மிக முக்கியமானது. மீன் தொட்டி வீட்டை அலங்கரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. விருந்தினர்களின் மகிழ்ச்சியை கூட்டுகிறது. மீன்களுக்கு உணவிடும் போது நம் கர்மாவை கழிப்பதோடு மன அமைதியை அளிக்கிறது. மீன்கள் வீட்டில் மட்டும் அல்ல பள்ளிகள், அலுவலகங்களிலும் வளர்க்கலாம்.

    வீட்டில் வளர்க்கும் வாஸ்து மீன்கள் பற்றி பாப்போம்.

    டிராகன் மீன் (Dragon Fish)

    டிராகன் மீன் வாஸ்து மீன்களில் முதன்மையானது மற்றும் வாஸ்து மீன் தொட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான மீனாகும். வாஸ்து மீன்களிலேயே மிகவும் விரும்பப்படும் மீனாகும். இதை வீட்டில் வளர்த்தால் அதிகாரம், வளமை, மகிழ்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் தருக் கூடிய ஆற்றல் உள்ளது. இது மற்ற மீன்களை விட விலை உயர்வானது.

    கோல்ட் மீன் (Gold Fish)

    கோல்ட் மீனும் டிராகன் மீனுக்கு இணையானது. இது விலையும் குறைவு; அதிக எண்ணிக்கையில் வளர்க்கப் படும் மீனாகும். இந்த வாஸ்து மீன் அழகு மற்றும் நல்லிணக்கத்தின் வடிவமாகும். இது வீட்டில் வளர்க்கும் போது குடும்பத்தில் நல்லிணக்கத்தை உண்டு பண்ணக்கூடியது. கோல்ட் மீன்களை பார்க்கும் போதே மனக் கவலைகள் பறந்து போகும்; மனதில் அமைதி பிறக்கும்.

    பிளாக் மூர் (Blackmoor)

    கட்டாயம் வாஸ்து மீன் தொட்டியில் இந்த பிளாக் மூர் இருப்பது மிகவும் முக்கியம். காரணம் வாஸ்து மீன்களை வளர்ப்பதே தீய சக்திகளை வெளியேற்றத் தான். பிளாக் மூர் தீய சக்திகளை இழுத்துக் கொண்டு நல்ல சக்திகளை வெளியிடக் கூடியது. இந்த மீன் வீட்டில் இருந்தால் நல்ல சக்திகள் வீடு முழுவதும் பரவி இருக்கும் என்பது உறுதி.

    பட்டர்ப்ளை கொய் (Butterfly Koi)

    பட்டர்ப்ளை கொய் கடுமையான நீரோட்டத்தை எதிர்த்து நீந்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இது வெற்றி மற்றும் சாதனைகளின் வடிவமாகும். உங்கள் வீட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருந்தால் நிச்சயம் இந்த மீன் வீட்டில் இருக்க வேண்டும். இம்மீனை அவர்கள் பார்க்கும் போதெல்லாம் தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணங்கள் உருவாகும் என்பதில் ஐயம் இல்லை. குடும்பத்தில் உள்ளளவர்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும் இந்த பட்டர்ப்ளை கொய் மீன்.

    பிலோவேர் ஹார்ன் மீன் (Flower Horn Fish)

    அழகு என்றால் அது பிலோவேர் ஹார்ன் மீன் தான்.இந்த மீன் அதிர்ஷ்டத்தையும் அன்பையும் ஒன்றாகத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதோடு ஆரோக்கியத்தையும் தரும். நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மை சந்திப்பவர்களுக்கும் அது தொற்றிக் கொள்ளும். எனவே வீடிற்கு வரும் விருந்தினர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள், இதனால் உறவுகள் மேம்படுவதோடு, கிளைத்து வளர்வதும் உறுதி.

    ஒரு வாஸ்து மீன் தொட்டியில் குறைந்தது 9 வாஸ்து மீன்களாவது இருக்க வேண்டும். அதில் 8 மீன்களில் மேலே சொன்ன 5 மீன்கள் இடம் பெற வேண்டும். இவற்றில் பிளாக் மீன் (Black Fish) இடம் பெறலாம், இடம் பெறாமலும் இருக்கலாம்.

    வாஸ்து மீன்கள் வளர்ப்பதால் பெரும் நன்மைகள்.

    மீன் தொட்டி தீய சக்திகளை இழுத்துக் கொண்டு நல்ல சக்திககளை உற்பத்தி செய்கிறது. மிகவும் உற்சாகமான ஆரோக்கியமான மீன்கள் அபரிமிதமான செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும் ஈர்க்க உதவும்.

    நீங்கள் பசியோடு உள்ள மீன்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் உங்களுக்கும் புண்ணியம் வந்து சேரும்.

    மீன் தொட்டியை வேடிக்கை பார்ப்பது, நண்பர்களோடு பழகுவது போன்றதாகும்; அவை உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள மிக மிக உறுதுணையாக இருக்கும்.

    உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் அது தொடர்பான திசையில் மீன் தொட்டி வைத்தால் அந்த பிரச்சனை விலகும்.

    இறுதியாக, மீன் தொட்டி உங்கள் வீட்டை அழகாகவும் அற்புதமாகவும் ஆக்கும் என்பது உறுதி.

    நாள் முழுவது உழைத்து களைப்போடு வீட்டில் நுழைந்ததும் ஓடி விளையாடும் குழந்தைகளைப் பார்ப்பது போல அங்கும் இங்கும் நீந்தும் இந்த மீன்களை பார்த்தால் உடல் மன களைப்பு பறந்து போவது உறுதி. இவ்வளவு நன்மைகளை அளிக்கும் வாஸ்து மீன்களை நம் வீட்டில் வளர்த்து நன்மையையும் மகிழ்ச்சியும் அடைவோம்.

    • சமையலறையில் வடகிழக்கில் அமையுமாறு பார்த்துக் கொள்ளவும்.
    • தென்கிழக்கில் வீட்டின் பெரிய படுக்கையறை வேண்டாம்.

    சமையலறையில் கட்டாயம் பாத்திரம் கழுவும் தொட்டி சிங் அமைக்க வேண்டும். இது சமையலறையில் வடகிழக்கில் அமையுமாறு பார்த்துக் கொள்ளவும்.

    மாவு அரைக்கும் கிரைண்டர் பிரிட்ஜ் போன்றவை தென்மேற்கில் வைக்கலாம். சமையலுக்கு தேவைப்படும் மசாலா மளிகை பொருட்களை அடுக்கி வைக்கும் மாடத்தை அறையில் தெற்கு மேற்கு பக்கம் அமைக்கலாம். சமையல் அரை மேடை மேல் கருப்பு வண்ணம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். தென்கிழக்கு பகுதி சுக்கிரன் ஆட்சி பெற்ற பகுதி என்பர். எனவே சுக்கிரனுக்கு உகந்த வெளிர்மஞ்சள் ஐஓரி வண்ணத்தை சமையலறை சுவர்களுக்கு தீட்டலாம்.

    சுக்கிரன் ஆட்சி உச்சம் ஜாதகத்தில் உடையவர்கள் வீட்டில் சமையலறையில் பூஜை அறையும் வைக்கலாம்.

    அக்னி மூலையில் பொதுவாக நீர் தொட்டி கழிப்பறை போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தென்கிழக்கில் வீட்டின் பெரிய படுக்கையறை வேண்டாம். அதற்கு பதில் விருந்தினர்கள் தங்குமரை வைக்கலாம்.

    • நிம்மதியான உறக்கத்தை பெற வாஸ்து படி படுக்கை அறை அமைக்க வேண்டும்.
    • மேற்கு திசையில் தலை வைத்து உறங்கினால் நல்ல உறக்கம் கிடைக்கும்.

    உடல் நன்றாக இயங்க நம்க்கு 6 மணி நேர உறக்கம் தேவை. நடு இரவு 12 மணிக்கு முன் 3 மணி நேரம், பின் 3 மணி நேரம் தான் அந்த 6 மணி நேர உறக்கம். ஒரு நாளில் விரையமாகும் நம் உடல், மன ஆற்றலை மீட்க இந்த 6 மணி நேர உறக்கம் மட்டுமே உதவும். மற்ற 6 மணி நேர உறக்கம் உதவாது. அது எவ்வாறு என்று பார்ப்போம்.

    நடு இரவு 12 மணிக்கு முன் 3 மணி நேர உறக்கம் அன்றைய நாளில் விரயமான ஆற்றலை மீட்க்கிறது;பின் 3 மணி நேர உறக்கம் அடுத்த நாளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்குகிறது. இப்படி உறங்கினால் உடல் உறுப்புகளும், மனமும் புத்துணர்வு பெருகிறது. தூங்கி எழுந்ததும் தலைவலி வராது. ஒவ்வொரு நாளும் பல் கசப்பான அனுபவங்களை மனம் எதிர் கொள்கிறது. அம் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது நம் கடமை இல்லையா? மனம் நன்றாக இயங்க வேண்டுமானால் நல்ல உறக்கம் வேண்டும். அத்தகைய உறக்கத்தை நாம் பெற வேண்டுமானால் வாஸ்து படி படுக்கை அறை அமைக்க வேண்டும். அது எவ்வாறு என்று பார்ப்போம்.

    வாஸ்து படி படுக்கை அறையை தென்மேற்கு கன்னி மூலையில் அமைக்க வேண்டும். வடகிழக்கு வழியாக நல்ல அதிர்வு அலைகள் வீட்டிற்குள் நிழையும்; அந்த அதிர்வலைகள் தென்மேற்கில் மின்காந்த சக்தியாக மாறி வீட்டில் உள்ளவர்களுக்கு உயிர் ஆற்றலை (ஜீவ சக்தி) கொடுக்கும். எனவே படுக்கை அறையை தென்மேற்கு முலையில் அமைக்க வேண்டும்.தெற்கு மற்றும் மேற்கு திசையில் தலை வைத்து உறங்கினால் நல்ல உறக்கம் கிடைக்கும்.

    கன்னி மூலையில் பழைய துணிகள் வைப்பதை தவிர்க்கவும், காரணம் அவை தீய ஆற்றலை உருவாக்கும்.நல்ல உறக்கம் அமையாது. தூங்கி எழுந்ததும் புத்துணர்வு இருக்காது. இவற்றை தவிர்க்க கன்னி மூலை தூய்மையாக இருப்பது அவசியம். படுக்கை அறை காற்றோட்டமாக இருக்க வேண்டும். பொழுது போக்கு கருவிகளை கிழக்கு-வடக்கு பகுதில் வைக்க வேண்டும். இந்த போட்டிகள் நிறைந்த உலகில் நீங்கள் வெற்றி பெற உற்சாகமான உடலும் மனமும் வேண்டும். அதை உறக்கம் தான் தரும். உறங்கும் இடமான படுக்கை அறையை வாஸ்து படி அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்..!!!

    ×