என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
வாஸ்து பரிகாரம்: பணப்பெட்டியை எங்கு வைக்கலாம்?
- பணமே இந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளது.
- பணப்பெட்டியை எப்போதும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மற்ற எல்லாவற்றையும் விட நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடம் பணப்பெட்டி வைக்கும் அறைக்கு... ஏனென்றால் பணமே இந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளது.
வடக்கு திசை குபேரன் திசையாகும். குபேரன் செல்வத்துக்கு அதிபதி. எனவே பணப்பெட்டி வடக்கு திசையை நோக்கி பணப்பெட்டியை வைக்கலாம். இது தவிர தென் மேற்கு மூலையிலும் பணப்பெட்டி இடம்பெறலாம். தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்தப்படி பணப்பெட்டியை வைப்பதே மிக சிறந்தது. இவ்வாறு அமைக்கும் பெட்டியில் வைக்கும் பணம் அள்ள, அள்ள குறையாமல் இருக்கும். செல்வம் வேகமாக சேரும்.
பணப்பெட்டியை எப்போதும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள பணம் முழுவதையும் எடுத்து விடாமல் அதில் ஒரு ரூபாயாவது போட்டு வைக்க வேண்டும்.பணப்பெட்டி இருக்கும் அறையின் கதவு ஒற்றையாக இருக்க வேண்டும். அந்த அறையின் நுழைவு வாயில் வடக்கு திசையிலோ, கிழக்கு திசையிலோ இருக்க வேண்டும். இதனால் செல்வ செழிப்பு கூடும். நுழைவுவாயில் வட மேற்கிலோ, தென்மேற்கிலோ அல்லது தென் கிழக்கு திசையிலோ இருக்க கூடாது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
வீட்டில் பணத்தை அலமாரியில் வைப்பதாக இருந்தால் அதிகமான எடையை ஏற்றக்கூடாது. அலமாரியின் மேல் தட்டிலோ அல்லது நடுத்தட்டிலோதான் பணத்தை வைக்க வேண்டும். பணம் இருக்கும் தட்டில் துணிமணிகளை வைக்கக்கூடாது. இது செல்வம் கரைந்து போக வழி வகுக்கும். பணம் இருக்கும் இடத்தில் வாசனை திரவியங்களை போட்டு வைக்க கூடாது. பணம் இருக்கும் பெட்டியின் கால் ஆடக்கூடாது. பணப்பெட்டியை சுவருக்கும் புதைத்து வைப்பதாக இருந்தால், அந்த பெட்டியின் கீழ் தட்டில் தான் பணத்தை வைக்க வேண்டும். மேல்தட்டில் வைக்கக்கூடாது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்