என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gomatha"

    • 33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது.
    • பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும்.

    இந்தியாவில் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. பசுவினை கோமாதா என்றே அழைக்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, க்ரீஸ், பண்டைய இஸ்ரேல் மற்றும் ரோம் நகரிலும் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. இந்து மரபின் படி, கோமாதா கொண்டிருக்கும் விஷேச சக்திகள் பின்வருமாறு.

    33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினுள் குடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஓர் இல்லத்தில் உள்ள பசுவினுடைய இருப்பு பலத்தரப்பட்ட நோய்களுக்கும் நிவராணமாக உள்ளது.

    எப்போது ஒரு பசுவானது நிறைவடைகிறதோ அப்போது அப்பசுவை கவனித்து கொண்டவர் நிறைந்த அரோக்கியம் செல்வம் வளம் அனைத்தையும் பெறுவதாக நம்பப்படுகிறது. மேலும் வாஸ்து தோஷம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதனை பசுவின் சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை கொண்டு அதற்கான நிவாரணத்தை காண முடியும். காலம் காலமாக முனிவர்கள், ரிஷிகள், அறிஞர்கள் புத்திவான்கள் அனைவரும் பசுவினை வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஒரு வார்த்தையில் சொல்வதனால், பசு என்பது நேர்மறை ஆற்றலின் பிறப்பிடமாகும். மேலும் பசுவிற்கு செய்யும் பணிவிடைகளின் மூலமும் நம் பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.


    ஒவ்வொறு நாளும் பசுவிற்கு உணவினை அளிப்பது ஒருவருக்கு நல்வாழ்வை வழங்கும் என சொல்லப்படுகிறது. கோவில்களில் இருக்கும் கோசாலைகளில் பலர் பசுவிற்கு கீரைகளை அர்ப்பணம் செய்வதை நாம் பார்க்கக்கூடும். ஜாதகங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு பரிகாரமாக இவை செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். மேலும், நீங்கள் எங்காவது ஒரு நல்ல காரியமாக செல்கிற போது பசுவினுடைய சப்தத்தை கேட்டால் அது அக்காரியம் வெற்றி என்பதை குறிப்பதாக கருதப்படுகிறது.

    மேலும் ஏதேனும் கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பின் புனித பசுவின் வால் பகுதியில் அமைந்துள்ள ஜடையை கொண்டு ஏழு முறை மந்திரிப்பதை போன்ற செயலை செய்கிற போது திருஷ்டிகளை களைய முடியும். பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும். பசுவினுடைய நெய்யினால் தீபம் ஏற்றப்பட்டால் அது பல நல்ல அதிருவ்களை ஈர்ப்பதாக அமையும். வீட்டின் பூஜையறையில் கிருஷ்ணர் பசுவினுடன் இருப்பதை திருவுருவ படத்தை வைத்து வழிபட்டால் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை. நலம், வளம், செல்வம் என அனைத்து செளபாக்கியங்களையும் பசுவினை வழிபடுவது நம் நல்வாழ்விற்கு பெரும் உதவியாக அமையும். மகிழ்வான வாழ்விற்கு கோமாதாவின் ஆசிகளை பெறுவது அவசியமாகும்.

    • பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும்.
    • பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம்.

    இந்த நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும். பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள்.

    மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில், மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். அவற்றை கொடுமைப்படுத்தினால், பெரும் பாபத்தை அடைந்து, பிறவிகளில் பெருந்துயரை அனுபவிக்க நேரிடும்.

    பஞ்சகவ்யம் (பால்,தயிர், நெய்,சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து, வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளையாக `முகூர்த்த சாஸ்திரம்' சொல்கிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, `கோ' தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

    • எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள்.
    • ‘கோவிந்தா’ என்று சொன்னால் ‘போனது வராது’ என்று பொருள்படும்.

    'கோவிந்தா' என்று சொன்னால் 'போனது வராது' என்று பொருள்படும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், 'பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

    கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை 'கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது 'கோ' என்றால் 'பசு' 'இந்தா' என்றால் 'வாங்கிக்கொள்' என்று பொருள் வரும்.

    கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள்.

    பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

    • அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
    • நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

    * பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா? என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.

    * 90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷம் கலந்த தாவரத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.

    * விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை..

    * சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சரியம் அடைந்தார்கள்.

    * ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதுதான் வரலாறு.

    * அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம். அதனால் தான் பழங்காலம் தொட்டு பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கிறோம்.

    அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

    பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்

    * பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்.,

    * முதலில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

    * கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

    * நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

    * பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

    ''கோ பூஜை'' செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு. வழிபாடு அர்ச்சனைக்கு உகந்த கோமாதா 108 தமிழ்ப் போற்றி பார்க்கலாம்.
    1. ஓம் காமதேனுவே போற்றி
    2. ஓம் திருமகள் வடிவேபோற்றி
    3. ஓம் தேவருலகப் பசுவேபோற்றி
    4. ஓம் பால் சுரப்பவளேபோற்றி
    5. ஓம் பயம் போக்குபவளேபோற்றி
    6. ஓம் அமிர்தவாணியேபோற்றி
    7. ஓம் உயிர்காப்பவளேபோற்றி
    8. ஓம் உத்தமியேபோற்றி
    9. ஓம் காளையன் மனைவியேபோற்றி
    10. ஓம் மாய உருவினளேபோற்றி
    11. ஓம் மகா சக்தி வடிவினளேபோற்றி
    12. ஓம் அழகின் பிறப்பிடமேபோற்றி
    13. ஓம் தெய்வங்களை உடற் கொண்டோய்போற்றி
    14. ஓம் முக்கண்ணியேபோற்றி
    15. ஓம் பாலூட்டும் தாய் உருவேபோற்றி
    16. ஓம் பாவங்கள் போக்குவாய்போற்றி
    17. ஓம் சாபங்கள் விரட்டுவாய்போற்றி
    18. ஓம் ஐம்பொருள் ஈவாய்போற்றி
    19. ஓம் அறத்தின் வடிவமேபோற்றி
    20. ஓம் ஆக்கும் சக்தியேபோற்றி
    21. ஓம் அபயம் அளிப்பவளேபோற்றி
    22. ஓம் இறைவர் வாகனமேபோற்றி
    23. ஓம் ஏற்றம் தருவாய்போற்றி
    24. ஓம் கார்த்தனை பணிய வைத்தாய்போற்றி
    25. ஓம் ஜமதக்ணியின் தொகுவமேபோற்றி
    26. ஓம் யோக முகத்தாய்போற்றி
    27. ஓம் கன்று ஈயும் கருணையேபோற்றி
    28. ஓம் அன்பானவளேபோற்றி
    29. ஓம் அடக்கத்தின் இலக்கணமேபோற்றி
    30. ஓம் இடர்களைக் களைவாய்போற்றி
    31. ஓம் இனிமை தருவாய் போற்றி
    32. ஓம் அம்மா பாசபிரதிபலிப்பை போற்றி
    33. ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
    34. ஓம் வாழ்வாய் உயர்த்துவாய் போற்றி
    35. ஓம் வளம் பெருக்குபவளே     போற்றி
    36. ஓம் ஈன்றதாய் ஒப்பாய்போற்றி
    37. ஓம் இரக்க குணத்தவனேபோற்றி
    38. ஓம் சோலையில் உலவுவாய்போற்றி
    39. ஓம் சுவர்க்க வழிகாட்டுவாய்போற்றி
    40. ஓம் சுதந்திர நாயகியேபோற்றி
    41. ஓம் ஆபரணம் தரித்தாய்போற்றி
    42. ஓம் புல்விரும்பும் புலனமாதுபோற்றி
    43. ஓம் தருமத்தின் உருவமேபோற்றி
    44. ஓம் எதிர்சக்தி விரட்டுவாய்போற்றி
    45. ஓம் இல்லம் காக்கும் நல்லவளேபோற்றி
    46. ஓம் வரம் தரும் வள்ளளேபோற்றி
    47. ஓம் கோவென்று பெயர் கொண்டாய்போற்றி
    48. ஓம் கும்பிட்டோர்க்கு குலவிளக்கேபோற்றி
    49. ஓம் எளியோரைக் காத்தருள்வாய்போற்றி
    50. ஓம் அகந்தையை அழிப்பாய்போற்றி
    51. ஓம் அல்லலுக்கு விடை தருவாய்போற்றி
    52. ஓம் உயிர் கொடுக்கும் உத்தமியேபோற்றி
    53. ஓம் உதிரத்தைப் பாலாய் தருபவளேபோற்றி
    54. ஓம் தியாகத்தின் வடிவினளேபோற்றி
    55. ஓம் அன்புக்கு இலக்கணமேபோற்றி
    56. ஓம் வேதங்கக் காலாய் கொண்டாய்போற்றி
    57. ஓம் கொம்புடைய குணவதிபோற்றி
    58. ஓம் மடியுடை மாதரசியேபோற்றி
    59. ஓம் ஆற்றல் உடைய அன்னையேபோற்றி
    60. ஓம் அஷ்ட லட்சுமியை அடக்கிக் கொண்டாய்போற்றி
    61. ஓம் வீரசக்தி வடிவினாய்போற்றி
    62. ஓம் விந்தியத்திருந்து வந்தாய்போற்றி
    63. லோகப் பசுவடிவேபோற்றி
    64. ஓம் பார்வதி வடிவினளேபோற்றி
    65. ஓம் அழகான அம்மாவேபோற்றி
    66. பதினான்கு உலகும் செல்வாய்போற்றி
    67. பரமனுக்கு பால் சொரிந்தாய்போற்றி
    68. பால் முகத் தேவியேபோற்றி
    69. மூவர் போற்றும் முத்தேபோற்றி
    70. முனிவர் வாக்கில் வியப்பைபோற்றி
    71. முன்னேற்றத்தை முன் சொல்வாய்போற்றி
    72. தீண்டவை களைவாய்போற்றி
    73. சுத்தப் பொருள் தருபவளேபோற்றி
    74. ஆதார சக்தியேபோற்றி
    75. ஆனந்தப் பசு முகமேபோற்றி
    76. உண்மையான உயிர் சக்தியேபோற்றி
    77. நேரில் உதிக்கும் தெய்வ உருவேபோற்றி
    78. தோஷங்கள் போக்கும் துரந்தரீபோற்றி
    79. ஓம் கார வடிவினாய்போற்றி
    80. கலைகளின் இருப்பிடமேபோற்றி
    81. காட்சிக்கு இனியவளேபோற்றி
    82. தயை உடைய தாயன்பைபோற்றி
    83. நான்மறை போற்றும் நல்மகளேபோற்றி
    84. துதிக்கப்படுபவளேபோற்றி
    85. நித்தமும் நினைக்கப் படுவாய்போற்றி
    86. தினமும் பூசனை ஏற்பாய்போற்றி
    87. பூரண உருவமேபோற்றி
    88. சிவன் தலங்கள் ஆக்கினாய்போற்றி
    89. மந்திரப் பொருள் உடையவளேபோற்றி
    90. முக்காலமும் உணர்ந்தவளேபோற்றி
    91. முக்திக்கு வழி காட்டுவாய்போற்றி
    92. வேற்றுமை களைந்திடுவாய்போற்றி
    93. எல்லா நோய்களும் விரட்டுவாய்போற்றி
    94. செல்வங்கள் அருளிடும் மாதேபோற்றி
    95. மங்களங்களின் பிறப்பிடமேபோற்றி
    96. புண்ணியத்தின் ஊற்றேபோற்றி
    97. புகழான புவன மாதேபோற்றி
    98. புத்தொளி தரும் தாயேபோற்றி
    99. நான் முகன் அவதாரமேபோற்றி
    100. சிவபக்திப் பிரியவளேபோற்றி
    101. வினைகளை வேரறுப்பாய்போற்றி
    102. கொம்புடைய தாயேபோற்றி
    103. ஆலயக் கோமுகமேபோற்றி
    104. அறங்காத்தோர்க்கு அரமேபோற்றி
    105. விடந்தீர் விந்தையனேபோற்றி
    106. வலம் வந்தார்க்கு வரம் அருள்வாய் போற்றி
    107. கிரகலட்சுமி வடிவினாளேபோற்றி
    108. ஒம் கோமாதா தாயேபோற்றி! போற்றி!!
    கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடிப்புண்ணியம் கிடைக்கும்.
    கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். அது மட்டுமல்ல அது தரக்கூடிய மூன்றுவிதப் பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பொருளாக அமைகின்றன என்று மருத்துவம் கூறுகிறது. எனவே, வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது.

    பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்து தயாரிக்கப்படும் “பஞ்சகவ்யம்” சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன. பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மைகளைப் பெறலாம்.

    பசுவின் உடல் பலவிதமான தெய்வங்கள் வசிப்பதாக ஐதீகம். காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்தது. கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடிப்புண்ணியம் கிடைக்கும்.
    பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். அப்படிப்பட்ட கோ மாதா பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
    பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். பசுவை தெய்வமாக வழிபடும் முறை நம்மிடையே இருக்கிறது. பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட கோ மாதா பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    * கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது பசுதான். எனவேதான் அவரை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கிறோம்.

    * கோ பூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின்போது, பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் சேரும்.

    * ஒரு பசு தன்னுடைய முதன் கன்றை பிரசவிக்கும் போது அதனை ‘தேனு’ என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்ததும் அந்த பசுவை ‘கோ’ என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்த பசுவைத் தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.

    * பசுவின் வாய் பகுதியில் கலி தேவதை இருக்கிறது. அதனால் தான் பசு பின் பகுதியை தொட்டு வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது.

    * காமதேனு பசு, மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.

    * பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.

    * பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால், பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால். வாழைப்பழம் கொடுக்கலாம்.

    * உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.

    * பசு தானம் வாங்குபவர்கள், லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் கடன் சுமை குறையும்.
    ×