search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?
    X

    பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?

    • அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
    • நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

    * பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா? என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.

    * 90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷம் கலந்த தாவரத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.

    * விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை..

    * சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சரியம் அடைந்தார்கள்.

    * ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதுதான் வரலாறு.

    * அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம். அதனால் தான் பழங்காலம் தொட்டு பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கிறோம்.

    அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

    பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்

    * பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்.,

    * முதலில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

    * கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

    * நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

    * பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

    Next Story
    ×