search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gomatha Puja"

    • பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும்.
    • பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம்.

    இந்த நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும். பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள்.

    மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில், மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். அவற்றை கொடுமைப்படுத்தினால், பெரும் பாபத்தை அடைந்து, பிறவிகளில் பெருந்துயரை அனுபவிக்க நேரிடும்.

    பஞ்சகவ்யம் (பால்,தயிர், நெய்,சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து, வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளையாக `முகூர்த்த சாஸ்திரம்' சொல்கிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, `கோ' தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

    • பொதுமக்கள் ஒன்று கூடி தலைவாசல் அமைக்கும் பணியை தொடங் கினார்கள்.
    • விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னவாளவாடி கிராமத்தில் நாககாமாட்சியம்மன் கோவில் உள்ளது.கோவில் வளாகத்தில் விநாயகர், கன்னிமார்கள், பதினெட்டாம்படி கருப்பராயன் ஆகிய கடவுள்கள் என தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தலைவாசல் அமைக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் பொதுமக்கள் ஒன்று கூடி தலைவாசல் அமைக்கும் பணியை தொடங்கினார்கள். பணி நிறைவடைந்த நிலையில் தலைவாசல் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து சின்ன வாளவாடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உலக நலன் வேண்டியும், விவசாயம் செழித்திடவும், உலக மக்கள் நோய் நொடி இன்றி வாழ்ந்திடவும் 108 கோமாதா பூஜையும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மாடுகளை கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டனர். அக்னி குண்டத்தின் முன்பாக கூடியிருந்த மாடுகளுக்கு தனித்தனியாக மந்திரங்கள் ஓதி பூஜை நடத்தப்பட்டது. இந்த விழாவில் சின்னவாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×