search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamadhenu"

    • ராதாகிருஷ்ணர் அங்கு கோக்களுடனும், கோபிகைகளுடனும் ஆனந்தமாக வசிக்கின்றார்.
    • பகவானுடைய அபிஷேகத்திற்கு பால் முதலியவைகளும், பசுக்களிடமிருந்து கிடைக்கின்றன.

    பாற்கடலில் காமதேனு தோன்றினாள்.

    அவளுடைய சந்ததி இருக்கும் லோகம் கோ லோகம் எனப்படும்.

    ராதாகிருஷ்ணர் அங்கு கோக்களுடனும், கோபிகைகளுடனும் ஆனந்தமாக வசிக்கின்றார்.

    அந்த கோக்களின் பாலினாலும், நெய்யினாலும் வேத மந்திரத்தை கூறி யாகம் செய்கின்றனர்.

    யாகத்தினால் மழையும், மழையால் உலக சேமமும் உண்டாகிறது.

    பசு காமதேனு அம்சமானதால் அதன் ஒவ்வொரு உறுப்பும் மானிடர்களுக்குப் பேருபகாரம் செய்வது மிகவும் சிறப்புடையது.

    பகவானுடைய அபிஷேகத்திற்கு பால் முதலியவைகளும், பசுக்களிடமிருந்து கிடைக்கின்றன.

    சகல தேவர்களும் பசுவின் உடலில் வந்து தங்கியுள்ளனர்.

    ஸ்ரீதேவி, பசுவின் ப்ருஷ்ட பாகத்தில் வசிப்பதால் காலையில் எழுந்தவுடன் கோவின் பின்புறத்தை தரிசிக்க வேண்டும்.

    விருந்தாளி யாரும் அகப்படாத நாளில் கோவை அதிதியாக பாவித்து அன்னமளிக்கலாம்.

    பொங்கல் தினத்தன்று மாடுகளை வில்வ இலை, வெட்டி வேர், சிவப்பு பூசணி (பறங்கி)ப்பூ, முதல் நாள் சூரிய பூஜை செய்த புஷ்பம் ஆகியவை சேர்ந்த, சிறிது பன்னீர் விட்ட நீரில் மாடு கன்றுகளைக் குளிப்பாட்ட வேண்டும்.

    கொம்புகளுக்கு வர்ணம் பூசி, குப்பி அணிவித்து, துண்டையும் கட்டி, கழுத்திலும், கால்களிலும் சலங்கை அணிவித்து, நெற்றியிலும், உடம்பிலும் சந்தனம், மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, உடம்பில் கோடி வஸ்திரம் போட்டு, கோவை பூஜை செய்ய வேண்டும்.

    மேலும் பசுமாடு வைத்திருப்பவர்கள் மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து கோலமிட்டு காவி பூசி சாணத்தால் பிள்ளையார் பிடித்து கணபதியையும் தேவேந்திரனையும், சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து பூஜை செய்ய வேண்டும்.

    பசு மாடுகளை புஷ்பம் போட்டு நமஸ்கரித்து பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

    பசு மாட்டுக்கு புல் கொடுக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

    ஸெளரபேய: ஸர்வ ஹிதா: ஸர்வ பாப ப்ரணாஸிந:

    ப்ரதிக்ருஹ்ணந்து மே க்ராஸம் காவ: த்ரைலோக்ய மாதர:

    தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றுதான் காமதேனு என்னும் பசு.
    தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றுதான் காமதேனு என்னும் பசு. இது தேவலோகத்தில் உள்ள பசுவாகும். கற்பக விருட்சத்தைப் போல, கேட்டதைக் கொடுக்கும் சக்தி படைத்தது இந்த காமதேனு.

    இதனை ‘சுரபி’ என்று அழைப்பார்கள். பசுக்கள் அனைத்துக்கும் முன்னோடியாக இந்த காம தேனுவே விளங்குகிறது. இந்த பசுவானது, சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட முனிவருக்கு உதவிகரமாக இருந்தது. கவுசிகன் என்ற மன்னன், தன் நாட்டினை வளப்படுத்துவதற்காக காமதேனுவை வசிஷ்டரிடம் கேட்டான். அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக காமதேனுவை இழுத்துச் செல்ல முயன்றான்.

    ஆனால் காமதேனுவிடம் இருந்து வெளிப்பட்ட போர்வீரர்கள், கவுசிகனையும் அவனது படைகளையும் விரட்டியடித்தனர். இதையடுத்து கவுசிகன், தானும் தவம் செய்து மிகப்பெரிய ரிஷியாவதாக சபதம் செய்தார். அவரே பின்னாளில் விஸ்வாமித்திரர் என்ற மாபெரும் முனிவராக மாறினார்.
    காமதேனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை கூறி கோபூஜை, பிரதட்சிணம் செய்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
    ஓம் சுபகாயை வித்மஹே
    காமதாத்ரியை சதீமஹி தந்தோ
    தேனு: ப்ரசோதயாத்.

    பசு காயத்ரி மந்திரம்:-

    ஓம் பசுபதயேச வித்மஹே
    மகா தேவாய தீமஹி
    தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

    பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது.

    பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை.
    பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். அப்படிப்பட்ட கோ மாதா பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
    பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். பசுவை தெய்வமாக வழிபடும் முறை நம்மிடையே இருக்கிறது. பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட கோ மாதா பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    * கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது பசுதான். எனவேதான் அவரை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கிறோம்.

    * கோ பூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின்போது, பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் சேரும்.

    * ஒரு பசு தன்னுடைய முதன் கன்றை பிரசவிக்கும் போது அதனை ‘தேனு’ என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்ததும் அந்த பசுவை ‘கோ’ என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்த பசுவைத் தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.

    * பசுவின் வாய் பகுதியில் கலி தேவதை இருக்கிறது. அதனால் தான் பசு பின் பகுதியை தொட்டு வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது.

    * காமதேனு பசு, மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.

    * பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.

    * பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால், பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால். வாழைப்பழம் கொடுக்கலாம்.

    * உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.

    * பசு தானம் வாங்குபவர்கள், லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் கடன் சுமை குறையும்.
    ×