search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மாட்டுப்பொங்கல்-இந்திரபூஜை-கோபூஜை
    X

    மாட்டுப்பொங்கல்-இந்திரபூஜை-கோபூஜை

    • ராதாகிருஷ்ணர் அங்கு கோக்களுடனும், கோபிகைகளுடனும் ஆனந்தமாக வசிக்கின்றார்.
    • பகவானுடைய அபிஷேகத்திற்கு பால் முதலியவைகளும், பசுக்களிடமிருந்து கிடைக்கின்றன.

    பாற்கடலில் காமதேனு தோன்றினாள்.

    அவளுடைய சந்ததி இருக்கும் லோகம் கோ லோகம் எனப்படும்.

    ராதாகிருஷ்ணர் அங்கு கோக்களுடனும், கோபிகைகளுடனும் ஆனந்தமாக வசிக்கின்றார்.

    அந்த கோக்களின் பாலினாலும், நெய்யினாலும் வேத மந்திரத்தை கூறி யாகம் செய்கின்றனர்.

    யாகத்தினால் மழையும், மழையால் உலக சேமமும் உண்டாகிறது.

    பசு காமதேனு அம்சமானதால் அதன் ஒவ்வொரு உறுப்பும் மானிடர்களுக்குப் பேருபகாரம் செய்வது மிகவும் சிறப்புடையது.

    பகவானுடைய அபிஷேகத்திற்கு பால் முதலியவைகளும், பசுக்களிடமிருந்து கிடைக்கின்றன.

    சகல தேவர்களும் பசுவின் உடலில் வந்து தங்கியுள்ளனர்.

    ஸ்ரீதேவி, பசுவின் ப்ருஷ்ட பாகத்தில் வசிப்பதால் காலையில் எழுந்தவுடன் கோவின் பின்புறத்தை தரிசிக்க வேண்டும்.

    விருந்தாளி யாரும் அகப்படாத நாளில் கோவை அதிதியாக பாவித்து அன்னமளிக்கலாம்.

    பொங்கல் தினத்தன்று மாடுகளை வில்வ இலை, வெட்டி வேர், சிவப்பு பூசணி (பறங்கி)ப்பூ, முதல் நாள் சூரிய பூஜை செய்த புஷ்பம் ஆகியவை சேர்ந்த, சிறிது பன்னீர் விட்ட நீரில் மாடு கன்றுகளைக் குளிப்பாட்ட வேண்டும்.

    கொம்புகளுக்கு வர்ணம் பூசி, குப்பி அணிவித்து, துண்டையும் கட்டி, கழுத்திலும், கால்களிலும் சலங்கை அணிவித்து, நெற்றியிலும், உடம்பிலும் சந்தனம், மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, உடம்பில் கோடி வஸ்திரம் போட்டு, கோவை பூஜை செய்ய வேண்டும்.

    மேலும் பசுமாடு வைத்திருப்பவர்கள் மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து கோலமிட்டு காவி பூசி சாணத்தால் பிள்ளையார் பிடித்து கணபதியையும் தேவேந்திரனையும், சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து பூஜை செய்ய வேண்டும்.

    பசு மாடுகளை புஷ்பம் போட்டு நமஸ்கரித்து பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

    பசு மாட்டுக்கு புல் கொடுக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

    ஸெளரபேய: ஸர்வ ஹிதா: ஸர்வ பாப ப்ரணாஸிந:

    ப்ரதிக்ருஹ்ணந்து மே க்ராஸம் காவ: த்ரைலோக்ய மாதர:

    Next Story
    ×