என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "varadaraja perumal"
- சுவாமிகளுக்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
- விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமிக்கு திருமண மொய் எழுதினர்.
மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் வீரமலையின் அடிவாரத்தில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் செல்வவிநாயகர், வீரியாயி, கருப்பசாமி, கன்னிமார், ஆஞ்சநேயர், பட்டவன் ஆகிய சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இக்கோவிலில் புதிதாக உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை விழா மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யான உற்சவ விழா நேற்று நடைபெற்றது.
காலையில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து வீரமலைப்பாளைத்தில் உள்ள வீரியாயி கோவிலில் இருந்து அரிசி, பழம், லட்டு, ஜிலேபி, முறுக்கு, அதிரசம், தேங்காய், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் அடங்கிய 120 சீர்வரிசை தட்டுகளை பொதுமக்கள் சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமிக்கு திருமண மொய் எழுதினர். பக்தர்களுக்கு ஆன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் தொப்பம்பட்டி, வீரப்பூர், வீரமலைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இப்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா நடைபெற உள்ளது. விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும், 24 நாட்கள் படுத்த கோலத்திலும், பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளையும், குடிநீர், கழிவறைகள், சுகாதார வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் பொன்னையா முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கான ஆலோசனை கூட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கூட்டினார். இதில் தமிழக அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்தரரெட்டி, மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ந.தனபால், காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் க.ரமணி, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விழா ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் கோபுரம் உள்ளது. அந்த கோபுரத்தின் கீழே தான் அத்திவரதர் சிலை உள்ளது. அந்த குளத்தில் இருந்து அத்தி மரத்தால் ஆன அத்திவரதரை வெளியே எடுக்க உள்ளனர்.
அதற்கு முன்பாக குளத்தில் உள்ள நீரை வெளியேற்ற உள்ளனர். இதற்காக மின் மோட்டார் எந்திரங்கள், குழாய்கள் கோவிலுக்கு வந்துள்ளன. விரைவில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீர் இதன்மூலம் வெளியேற்றப்படும். அதன்பின்னர் சிலை வெளியே கொண்டு வரப்படும்.
14 நாட்கள் விழாவில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், தீபஆராதனை நடக்கின்றது. மாலை நிகழ்ச்சி யில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமி புறப் பாடு நடக்கின்றது.
முதல் நாளில் வாஸ்த்து, கடஸ்தாபனம், 2-ம் நாளில் காப்புக் கட்டி கொடியேற்றப்பட்டது. பின்னர்அன்னவாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. 3-ம் நாளில் சிம்மவாகனத்தில் சாமி புறப்பாடும், 4-ம் நாளில் ஆஞ்சநேயர் வாகனத்தில் சாமிபுறப்பாடும் 5-ம் நாளில் கருட சேவையும் 6-ம் நாளில் சேஷவாகனத்தில் சாமி புறப்பாடும் நடந்தது. 23.05.19 அன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. 27.05.19 அன்று மாலையில் ஊஞ்சல் சேவையும் நடை பெறுகின்றது.
விழா ஏற்பாடு களை திருக்கோவில் நிர்வாகிகள் ஆலய அர்ச்சகர் பாலாஜிபட்டாச்சாரியர் உட்பட பக்தர்கள் செய்கின்றனர், தினமும் நடக்கும் நிகழ்ச்சியில் சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கணுஉற்சவத்தையொட்டி நேற்று காலையில் கோவிலில் இருந்து வரதராஜபெருமாளும், வேதவல்லிதாயாரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தாமிரபரணி ஆற்றிற்கு எழுந்தருளினர். அங்கு வரதராஜபெருமாளுக்கும், வேதவல்லிதாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க பெருமாளுக்கும், தாயாருக்கும் தாமிரபரணிஆற்றில் தீர்த்தவாரி அபிஷேகம் நடந்தது. அப்போது திரளான பக்தர்களும் ஆற்றில் தீர்த்தமாடி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் கணு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இதேபோல் சன்னியாசி கிராமம் நெல்லை திருப்பதி, வெங்கடாலபதி கோவிலிலும் கடந்த 10-ந்தேதி கணு உற்சவ திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினமும் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. நேற்று மதியம் கோவிலில் இருந்து பெருமாளும், தாயாரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தாமிரபரணி ஆற்றிற்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீர்த்தவாரி நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்