என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "athi varadar"

    • அத்திவரதரை தரிசனம் செய்தால் சகல தோஷங்கள், முன்ஜென்ம பாவங்கள் நீங்கும் என்றும், நினைத்த காரியம் கைகூடும் என்றும் ஐதீகம்.
    • விழா நாட்களில் தைலக்காப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளது. இக்கோவில்கள் கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சுமார் 180 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.

    இக்கோவிலில் கடந்த 1915-ம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின்னர், சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த அத்திவரதரை தரிசனம் செய்தால் சகல தோஷங்கள், முன்ஜென்ம பாவங்கள் நீங்கும் என்றும், நினைத்த காரியம் கைகூடும் என்றும் ஐதீகம்.

    இந்த நிலையில், சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 10-ந்தேதி வரை அத்திவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதற்காக ஆகம பூஜைகளுடன் நேற்று (சனிக்கிழமை) மாலை அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்தார்.

    தொடா்ந்து, அத்திவரதர் பிரம்மன் கோவிலுக்கு வீதியுலாவாக புறப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர், அத்திவரதர்- தாயாருக்கு தைலகாப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தைலக்காப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெறுகிறது. தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் அத்திவரதரை தாிசனம் செய்யலாம். 

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் குளத்தில் உள்ள அத்திவரதர் சிலையை வெளியே கொண்டு வருவதற்காக குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா வருகிற ஜூலை 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்பு கடந்த 1979-ம் ஆண்டு இந்த விழா நடந்தது.

    இப்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா நடைபெற உள்ளது. விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும், 24 நாட்கள் படுத்த கோலத்திலும், பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளையும், குடிநீர், கழிவறைகள், சுகாதார வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் பொன்னையா முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கான ஆலோசனை கூட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கூட்டினார். இதில் தமிழக அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்தரரெட்டி, மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ந.தனபால், காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் க.ரமணி, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் விழா ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் கோபுரம் உள்ளது. அந்த கோபுரத்தின் கீழே தான் அத்திவரதர் சிலை உள்ளது. அந்த குளத்தில் இருந்து அத்தி மரத்தால் ஆன அத்திவரதரை வெளியே எடுக்க உள்ளனர்.

    அதற்கு முன்பாக குளத்தில் உள்ள நீரை வெளியேற்ற உள்ளனர். இதற்காக மின் மோட்டார் எந்திரங்கள், குழாய்கள் கோவிலுக்கு வந்துள்ளன. விரைவில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீர் இதன்மூலம் வெளியேற்றப்படும். அதன்பின்னர் சிலை வெளியே கொண்டு வரப்படும்.
    ×