search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லை சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில் தீர்த்தவாரி தாமிரபரணி ஆற்றில் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    நெல்லை சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில் தீர்த்தவாரி தாமிரபரணி ஆற்றில் நடந்தபோது எடுத்தபடம்.

    வரதராஜ பெருமாள்-வேதவல்லி தாயாருக்கு தாமிரபரணியில் தீர்த்தவாரி

    கணு உற்சவத்திருவிழாவையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் வரதராஜபெருமாள், வேதவல்லி தாயாருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தமாடினர்.
    நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 10-ந்தேதி கணு உற்சவத்திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினமும் பெருமாளுக்கும், வேதவல்லி தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் வேதவல்லி தாயாருக்கு சிறப்பு தைலகாப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடந்தது.

    கணுஉற்சவத்தையொட்டி நேற்று காலையில் கோவிலில் இருந்து வரதராஜபெருமாளும், வேதவல்லிதாயாரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தாமிரபரணி ஆற்றிற்கு எழுந்தருளினர். அங்கு வரதராஜபெருமாளுக்கும், வேதவல்லிதாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க பெருமாளுக்கும், தாயாருக்கும் தாமிரபரணிஆற்றில் தீர்த்தவாரி அபிஷேகம் நடந்தது. அப்போது திரளான பக்தர்களும் ஆற்றில் தீர்த்தமாடி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் கணு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

    இதேபோல் சன்னியாசி கிராமம் நெல்லை திருப்பதி, வெங்கடாலபதி கோவிலிலும் கடந்த 10-ந்தேதி கணு உற்சவ திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினமும் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. நேற்று மதியம் கோவிலில் இருந்து பெருமாளும், தாயாரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தாமிரபரணி ஆற்றிற்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீர்த்தவாரி நடந்தது.
    Next Story
    ×