search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Utsavam"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்தது.
    • 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை ஆகியவை நடக்கிறது.

    கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு கொலுச்சாவடிக்கு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்க விரும்புவோர், உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

    மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனுக்கு வருகிற 26-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடர்பாக புராணங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முன்னொரு காலத்தில் மஹிசாசூரன் என்பவன் பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளால் அவனுக்கு அழிவு ஏற்பட கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றான். அதன் பிறகு அவன் தேவர்களை துன்புறுத்தினான். இதுபற்றி தேவர்கள் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பார்வதி தேவி 9 நாட்கள் விரதம் இருந்து, அந்த அரக்கனை வதம் செய்தார். "மஹிஷம் என்பதற்கு அறியாமை அல்லது இருள் என்று பொருள். அதாவது இந்த உலகில் அறியாமை இருள்நீங்கி, அறிவு என்னும் ஒளி வீசி ஒளிமயமாக விளங்குவதை குறிப்பிடுவதே நவராத்திரியின் தத்துவம். அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி கலைவிழா வருகிற 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. 

    • காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, கடந்த ஜூலை 11-ந் தேதி தொடங்கியது.
    • பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது. அதேபோல், அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பிரகார வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காரைக்கால்: 

    காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, விடை யாற்றி உத்ஸவ நிகழ்ச்சி யுடன் நிறைவு பெற்றது. இறைவனின் திருவா யால் 'அம்மையே' என்ற ழைக்கப்பட்ட பெரு மைக்குரிய காரைக்கால் அம்மையார் கோவில், காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டு தோறும் நடைபெறும் காரைக்கால் அம்மையார் மாங்கனித்தி ருவிழா, கடந்த ஜூலை 11-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து, திருக்கல்யா ணம், பிச்சாண்டவர் வீதி யுலா, மாங்கனி இறைப்பு, அமுது படையல் மற்றும் புஷ்பபல்லாக்கு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மை யார் மணிமண்டபத்தில், தினந்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. நேற்று காலை 9 மணிக்கு விடையாற்றி உத்ஸவ நிகழ்ச்சி நடை பெற்றது.

    அதுசமயம், கைலாச நாதர் கோவிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆரா தனை செய்யப்பட்டு, பிரா காரப் புறப்பாடு நடை பெற்றது. அதேபோல், அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பிரகார வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன், அறங்காவல் வாரியத்தலைவர் வக்கில் வெற்றி செல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முக சுந்தரம், உறுப்பி னர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள், திரளான பக்கதர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×