search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karaikal Mother"

    • காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, கடந்த ஜூலை 11-ந் தேதி தொடங்கியது.
    • பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது. அதேபோல், அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பிரகார வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காரைக்கால்: 

    காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, விடை யாற்றி உத்ஸவ நிகழ்ச்சி யுடன் நிறைவு பெற்றது. இறைவனின் திருவா யால் 'அம்மையே' என்ற ழைக்கப்பட்ட பெரு மைக்குரிய காரைக்கால் அம்மையார் கோவில், காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டு தோறும் நடைபெறும் காரைக்கால் அம்மையார் மாங்கனித்தி ருவிழா, கடந்த ஜூலை 11-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து, திருக்கல்யா ணம், பிச்சாண்டவர் வீதி யுலா, மாங்கனி இறைப்பு, அமுது படையல் மற்றும் புஷ்பபல்லாக்கு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மை யார் மணிமண்டபத்தில், தினந்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. நேற்று காலை 9 மணிக்கு விடையாற்றி உத்ஸவ நிகழ்ச்சி நடை பெற்றது.

    அதுசமயம், கைலாச நாதர் கோவிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆரா தனை செய்யப்பட்டு, பிரா காரப் புறப்பாடு நடை பெற்றது. அதேபோல், அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பிரகார வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன், அறங்காவல் வாரியத்தலைவர் வக்கில் வெற்றி செல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முக சுந்தரம், உறுப்பி னர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள், திரளான பக்கதர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×