search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "training camp"

    • டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து விளக்கம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    மாநில விரிவாக்க சீரமைப்பு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அருகில் உள்ள காட்டாம்பூண்டியில் ஆள் இல்லா விமான மூலம் மருந்து தெளிப்பு (டிரோன் டெக்னாலஜி) என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் மேற்பார்வையில் ஆள் இல்லா விமானம் மூலம் மருந்து தெளிப்பது குறித்து பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நடைபெற்றது.

    இதில் வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையத்தை சேர்ந்த சரவணன் கலந்து கொண்டு ஆள் இல்லா விமான தெளிப்பு பற்றிய விளக்கம், அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    அதோடு இப்கோ நிறுவன அலுவலர் அருண்குமார் ஆள்இல்லா விமான தெளிப்பு மருந்து கலக்கும் முறை மற்றும் நீரின் அளவு, வயலில் தெளிக்கும் நேரம், நிலத்தின் அளவு எந்திரத்தில் பதிவு செய்யும் முறை மற்றும் அமைப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உழவன் நண்பன் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா நன்றி கூறினார்.

    • பெரணமல்லூரில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர், வட்டார வள மையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட, தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடந்தது. முகாமை வட்டார வள மேற்பார்வை யாளர் ராஜா, தொடங்கி வைத்தார்.

    கருத்தாளர்களாக மருத்துவர், வழக்கறிஞர், திறன் மேம்பாட்டு துறை அலுவலர், தொழில் முனைவோர், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வில் திறன் குறித்து பயிற்சி அளித்தனர்.

    இதில் பெரணமல்லூர் வட்டாரத்தில் உள்ள 64 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு வருகிற மார்ச் 19ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார வளாக மையத்தில் அரசு மேல்நிலை நடுநிலை உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 9-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேன் சிட்டு, இதழ் மூலம் வினாடி, வினா, போட்டிகள் நடைபெற்றது.

    இதில் பெரணமல்லூர் வட்டாரத்தில் உள்ள 18 பள்ளியிலிருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் சின்னராசு வரவேற்றார்.
    • கியாசை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் விநியோகஸ்தர் செல்வி கியாஸ் ஏஜென்சீஸ் சார்பாக சமையல் எரிவாயு பாதுகாப்பு மற்றும் செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமை வகித்தார். செல்வி கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் அய்யப்பன், பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் சின்னராசு வரவேற்றார்.

    எரிவாயுவை கவனமாக கையாளுவது, எரிவாயு பாதுகாப்பு சிக்கனம் குறித்து செல்வி கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் அய்யப்பன் விளக்கி பேசினார். தொடர்ந்து கியாசை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. சமையல் எரிவாயு குறித்த கேள்விகளுக்கு சரியான முறையில் விடை அளித்த மாணவிகளுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேல் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். இந்த முகாமானது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர்(எல்.பி.ஜி.) பிரகாஷ் மீனா மற்றும் துணை மேலாளர் (எல்.பி.ஜி) அபிஜித் பி. விஜய் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது.

    • வட்டார வள மையத்திற்கு உட்பட்ட தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 7-ம் கட்ட பயிற்சி முகாம், அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது.
    • இப்பயிற்சியினை பரமத்தி வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சுபா தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 7-ம் கட்ட பயிற்சி முகாம், பரமத்தி வட்டார வளமையம், பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, வில்லிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது.

    இப்பயிற்சியினை பரமத்தி வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சுபா தொடங்கி வைத்தார். பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வ ராணி எடுத்துரைத்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் அனிதாகுமாரி, பார்வதி, ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் கணக்கு பாடத்தில் அடிப்படை திறன்களை கற்பிப்பதற்கான கற்பித்தல் உத்திகளை செயல்பாடுகள் மூலம் கற்றுக் கொண்ட னர். பயிற்சியின் கருத்தாளு னர்களாக பள்ளி ஆசிரி யர்கள் நிர்மலா, தர்மராஜன், ஷைலாபீபி, பிரபு, கோபி, ரகுபதி, ரதி, லோகேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர்.

    இப்பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் பார்த்தசாரதி செய்திருந்தார்.

    • மாநில அளவிலான கூடோ தற்காப்பு கலை பயிற்சி முகாம் லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
    • முகாமில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு கூடோ தற்காப்பு கலை பற்றிய அறிமுக தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், குறித்து விளக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மாநில அளவிலான கூடோ தற்காப்பு கலை பயிற்சி முகாம் லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

    கடந்த 17-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடத்த இந்த பயிற்சி முகாமை, புதுவை மாநில கூடோ சங்கம் மற்றும் அகில இந்திய கூடோ சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியது.

    மாநில கூடோ சங்க தலைவர் வளவன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தோஷ்குமார், சேர்மன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனியர் பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி, ஆறுமுகம், செல்வம், சுரேஷ், அசோக், பாலச்சந்தர், செந்தில் வெங்கடேஷ், சுப்பிரமணி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    முகாமில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு கூடோ தற்காப்பு கலை பற்றிய அறிமுக தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், குறித்து விளக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    அகில இந்திய கூடோ சங்க பொருளாளர் ஜாஸ்மின் மக்வானா, சீனியர் பயிற்சியாளர் பிரியங் ராணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    முகாமில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் வருகிற மே மாதத்தில் நடக்க உள்ள அகில இந்திய கூடோ போட்டியில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் பிளாக் பெல்ட் ஆகியவற்றை அகில இந்திய கூடோ சங்கத்தின் பொருளாளர் ஜாஸ்மின் மக்வானா, புதுவை மாநில தலைவர் வளவன் ஆகியோர் வழங்கினார்.

    இணைச் செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.

    • புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் கீழ் கரிக்கலாம்பக்கம் உழவர் உதவியகத்தை சேர்ந்த காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
    • முகாமில் கரிக்க லாம்பாக்கம் மற்றும் ஏம்பலம், கோர்க்காடு ஆகிய பகுதிகள் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் கீழ் கரிக்கலாம்பக்கம் உழவர் உதவியகத்தை சேர்ந்த காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

    வேளாண் அலுவலர் தினகரன் காய்கறி சாகுபடி செய்யும் முறை, லாபம் அடைவது குறித்து விளக்கிப் பேசினார்.டாக்டர் செல்வமுத்து ஆத்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகள் எவ்வாறு பயன்பெறுகின்றனர் என்றும் இனி செயல்படு த்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

    முகாமில் கரிக்க லாம்பாக்கம் மற்றும் ஏம்பலம், கோர்க்காடு ஆகிய பகுதிகள் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    காய்கறி விதை மினி கிட் மற்றும் காய்கறி ஸ்பிரேயர் மற்றும் நுண்ணுட்டி சத்து ஆகியவை இலவசமாக விவசாயி களுக்கு வழங்க ப்பட்டது இறுதியில் கிராம விரிவாக்க பணியாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    விழாவின் ஏற்பாடுகளை தப்புசாமி செய்திருந்தார்.

    • நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பிறந்த நாளை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணியின் சார்பிலும் நகர பா.ஜ.க. சார்பிலும் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஓ.பி.சி. அணியின் நகர தலைவர் ஜி.கந்தன் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணியின் நகர பொதுச் செயலாளர் ஜி.முருகன், ஓ.பி.சி. அணியின் நகர பொருளாளர் எஸ்.வெங்கடேசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தீயணைப்பு துறை சார்பில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்து செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
    • இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திருமுகம் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்

    கடலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உத்தரவுபடி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்து செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக எவ்வாறு மீட்டு வருவது என்பது குறித்தும், தீப்பற்றிய கட்டிடங்களில் தீயை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திருமுகம் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் ஈரோடு வேளாளர் கல்வியியல் அறக்கட்டளை கலை மற்றும் அறிவியல் இருபால் கல்லூரியில் 8 நாட்கள் நடைபெற்று வருகிறது.
    • பயிற்சியில் சிறப்பாக பயிற்சி பெற்று தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற உள்ளார்கள்.

    சேலம்:

    15 ஆவது தமிழ்நாடு பாடாலியன் சார்பாக வருடாந்திர ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் ஈரோடு வேளாளர் கல்வியியல் அறக்கட்டளை கலை மற்றும் அறிவியல் இருபால் கல்லூரியில் 8 நாட்கள் நடைபெற்று வருகிறது.

    3-ந் தேதி தொடங்கிய இந்த பயிற்சி முகாமில் ஈரோடு, கோவை,சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    இப்பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளுக்கு துப்பாக்கி சுடுதல், வரைபட பயிற்சி, தூரத்தை கணக்கிடுதல், உடற்பயிற்சிகள், யோகா பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், தலைமை பண்பு, ஆளுமை பயிற்சிகள் ஆகியவைகள் அளிக்கப்படுகின்றன.

    இந்த துப்பாக்கி பயிற்சியில் சிறப்பாக பயிற்சி பெற்று தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற உள்ளார்கள்.இப்பயிற்சி முகாம் ஈரோடு 15 -வது பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் ஜெய்தீப் மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேலம் 11-வது தமிழ்நாடு பட்டாலியனை சேர்ந்த கர்னல் சூரஜ் எஸ்.நாயர் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    மேலும் பயிற்சியை கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவராம் பார்வையிட்டார்.

    இதில் 10 தேசிய மாணவர் படை அலுவலர்கள் சுபேதார் மேஜர் உட்பட 15 ராணுவ பயிற்சியாளர்கள் மாணவ, மாணவிகளுக்கு தினசரி பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    • விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது
    • 80 பேர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் கொரால்பாக்கம், கிராமத்தில் சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையம், மற்றும் கீழாநெல்லி வேளாண்மை அறிவியல் மையம், சார்பில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, உளுந்து பயிறு தொகுப்பு நிலை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க முகாம் நடந்தது.

    முகாமில் வம்பன 8 ரக உளுந்து விதை பயன்படுத்துதல், விதை நேர்த்தி, உயிர் உரங்களின் பயன்பாடு, பேசில்லாஸ் பயன்படுத்தும் முறை, உர மேலாண்மை, ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் 80 விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    முகாமில் வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப விஞ்ஞானி சுரேஷ், தொழில்நுட்ப வல்லுநர் ஐஸ்வர்யா, உதவி வேளாண்மை அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப அட்மா மேலாளர் சேகர், நன்றி கூறினார்.

    • புதுவை வேளாண்துறை பாகூர் உழவர் உதவியகம் மற்றும் பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், மணிலா சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.
    • மணிலா சாகுபடியில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து, சிறப்புறையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை பாகூர் உழவர் உதவியகம் மற்றும் பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், மணிலா சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.

    முகாமிற்கு, ஆத்மா திட்ட வட்டார வளர்ச்சி மேலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.பாகூர் உழவர் உதவியக வேளாண் அலுவலர் பரமநாதன், மணிலா சாகுபடியில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து, சிறப்புறையாற்றினார்.

    புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் துறை வல்லுனர் ரவி, மணிலா உற்பத்தியில் நவீன உழவியல் தொழில் நுட்பங்கள் மற்றும் களை கட்டுப்பாடு என்ற தலைப்பிலும், பூச்சியியல் வல்லுனர் விஜயகுமார் மணிலா பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்'' என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தனர்.

    காரைக்கால் ஜவகாலால் நேரு வேளாண் கல்லூரியி லிருந்து கள பயிற்சி பெற்று வரும் அன்புவானன் தலைமையிலான பாகூர் பகுதி மாணவ குழுவினர் ''மணிலாவில் இனக்கவர்ச்சி பொறி பயன்பாடு மற்றும் ஒரு வரிசை மணிலா விதை விதைக்கும் இயந்திரத்தின் செயல் விளக்கம் அளித்தனர்.

    இம்முகாமில், பாகூர், இருளன்சந்தை, பரிக்கல்பட்டு, குருவிநத்தம், சோரியங்குப்பம், அரங்கனூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசா யிகள் கலந்துகொண்டனர். உதவி வேளாண் அலுவலர் முத்துகுமரன் நன்றி கூறினார்.

    • 2 நாட்கள் நடக்கிறது
    • பயிற்சி முகாமை அதிகாரிகள் ஆய்வு

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர், வட்டாரவள மையத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்ட‌ தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.

    முகாமை வட்டார வள மேற்பார்வையாளர் ராஜா, தொடங்கி வைத்தார். அனைவரையும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகவல்லி, வரவேற்றார்.

    முன்னதாக பயிற்சி முகாமை வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆசிரியர் பயிற்றுனர்கள். விஜயலட்சுமி, சுகந்தி, மொளூ கு, இசையருவி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வருகிற 21-ந்தேதி பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு குறித்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    ×