search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.சி.சி. பயிற்சி முகாம்
    X

    என்.சி.சி. பயிற்சி முகாமில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்.

    என்.சி.சி. பயிற்சி முகாம்

    • ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் ஈரோடு வேளாளர் கல்வியியல் அறக்கட்டளை கலை மற்றும் அறிவியல் இருபால் கல்லூரியில் 8 நாட்கள் நடைபெற்று வருகிறது.
    • பயிற்சியில் சிறப்பாக பயிற்சி பெற்று தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற உள்ளார்கள்.

    சேலம்:

    15 ஆவது தமிழ்நாடு பாடாலியன் சார்பாக வருடாந்திர ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் ஈரோடு வேளாளர் கல்வியியல் அறக்கட்டளை கலை மற்றும் அறிவியல் இருபால் கல்லூரியில் 8 நாட்கள் நடைபெற்று வருகிறது.

    3-ந் தேதி தொடங்கிய இந்த பயிற்சி முகாமில் ஈரோடு, கோவை,சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    இப்பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளுக்கு துப்பாக்கி சுடுதல், வரைபட பயிற்சி, தூரத்தை கணக்கிடுதல், உடற்பயிற்சிகள், யோகா பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், தலைமை பண்பு, ஆளுமை பயிற்சிகள் ஆகியவைகள் அளிக்கப்படுகின்றன.

    இந்த துப்பாக்கி பயிற்சியில் சிறப்பாக பயிற்சி பெற்று தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற உள்ளார்கள்.இப்பயிற்சி முகாம் ஈரோடு 15 -வது பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் ஜெய்தீப் மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேலம் 11-வது தமிழ்நாடு பட்டாலியனை சேர்ந்த கர்னல் சூரஜ் எஸ்.நாயர் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    மேலும் பயிற்சியை கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவராம் பார்வையிட்டார்.

    இதில் 10 தேசிய மாணவர் படை அலுவலர்கள் சுபேதார் மேஜர் உட்பட 15 ராணுவ பயிற்சியாளர்கள் மாணவ, மாணவிகளுக்கு தினசரி பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    Next Story
    ×