search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL Cricket"

    • மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது.
    • மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.

    டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மதுரை அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

    முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன. ஸ்ரீ அபிஷேக் மட்டும் இரட்டை இலக்கை ரன்னை (21) எட்டினார்.

    நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    இதேபோல் சரவணன் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். இதனால் மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபராஜித், சிலம்பரசன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக பாபா அப்பரஜித் 32 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து, ஜகதீசன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். சந்தோஷ் ஷிவ் 28 ரன்களும், சஞ்சய் யாதவ் 9 ரன்களும், சசிதேவ் 6 ரன்களும், பிரதோஷ் பவுல் 3 ரன்களும் எடுத்தனர்.

    18-வது ஓவரில் பாபா அப்பரஜித் மற்றும் ஹரிஷ் குமார் களத்தில் இருந்தனர். இருவரும் 12 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடினர். இதில், அப்பரஜித் 33 ரன்களுடனும், 6 ரன்களிலும் அவுட்டாகினர்.

    தொடர்ந்து, ஹரிஷ் குமார் 3 ரன்களிலும், மதன் குமார் மற்றும் ராமலிங்கம் ரோஹித் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக விளையாடிய ராஹில் ஷா 2 ரன்களும், சிலம்பரசன் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 129 ரன்களை எடுத்து இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.

    • அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார்.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபராஜித், சிலம்பரசன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    சேலம்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய மதுரை அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன. ஸ்ரீ அபிஷேக் மட்டும் இரட்டை இலக்கை ரன்னை (21) எட்டினார்.

    நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதேபோல் சரவணன் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்து சேர்த்தார். இதனால் மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபராஜித், சிலம்பரசன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
    • மதுரை பாந்தர்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டிகளில் வென்றுள்ளது.

    சேலம்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இரு அணி வீரர்கள் விவரம்:

    சேப்பாக்: பாபா அபராஜித் (கேப்டன்), ஹரிஷ் குமார், ஜெகதீசன், மதன் குமார், பிரதோஷ் ரஞ்சன் பால், ராகுல் ஷா, ரோகித், சஞ்சய் யாதவ், ராக்கி, சசிதேவ், சிலம்பரசன்.

    மதுரை: ஹரி நிஷாந்த் (கேப்டன்), ஆதித்யா, கவுசிக், ஸ்வப்னில் சிங், வாஷிங்டன் சுந்தர், லோகேஷ்வர், ஸ்ரீ அபிஷேக், தீபன் லிங்கேஷ், சரவணன், குர்ஜாப்னீத் சிங், அஜய் கிருஷ்ணன்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அடுத்து 3 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கி உள்ளது.

    மறுமுனையில் மதுரை பாந்தர்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டிகளில் வென்று, 2 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் தோல்வி அடைந்து 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
    • மதுரை பேந்தர்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி 1-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் அடைந்து 2 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் தோல்வி அடைந்து 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. மதுரை பேந்தர்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி 1-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் அடைந்து 2 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி ஜெயித்தது. ஆனால், அடுத்தடுத்த 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. நெல்லை, திண்டுக்கல், லைக்கா கோவை ஆகிய அணிகளுடன் அந்த அணி தோல்வி கண்டது.

    தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்னும், 2 ஆட்டங்கள் மட்டுமே சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இருக்கிறது. இன்றைய ஆட்டமும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் திருச்சிக்கு எதிரான ஆட்டமும் தான் உள்ளது.

    மதுரை பேந்தர்ஸ் அணியை பொறுத்தவரை ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே ஜெயித்திருக்கிறது. நெல்லை, திண்டுக்கல் ஆகிய அணிகளிடம் மதுரை அணி தோல்வி கண்டுள்ளது.

    சேலத்தை மட்டும் மதுரை வீழ்த்தியிருக்கிறது. இன்னும் 4 ஆட்டங்கள் மதுரைக்கு காத்திருக்கிறது. 

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அபராஜித் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும் லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகிறது.இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதோஷ் பால் - ஜெகதீசன் களமிறங்கினர். பிரதோஷ் பால் 2-வது ஓவரிலேயே போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபா அபராஜித் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 7-வது ஓவரில் சிஎஸ்ஜி அணி தனது 2 விக்கெட்டை பறிகொடுத்தது. ஜெகதீசன் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 15 ரன்னிலும் லோகேஷ் ராஜ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்ஜி அணி 74 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அபராஜித்துடன் ஹரிஸ் குமார் ஜோடி சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 101 ரன் இருந்தபோது ஹரிஸ் குமார் 20 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபா அபராஜித் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 79 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும் லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    • திண்டுக்கல்லில் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் இன்று முதல் சேலத்தில் லீக் ஆட்டங்கள் தொடங்குகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    சேலம்:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் நடந்து வருகிறது. இப்போட்டிகள் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    திண்டுக்கல்லில் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் இன்று முதல் சேலத்தில் லீக் ஆட்டங்கள் தொடங்குகிறது.

    இந்நிலையில் இன்று மாலை நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    • இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் நடந்து வருகிறது. இப்போட்டிகள் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    இதில் கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கல்லில் 7 ஆட்டங்களும் நடந்தன. நேற்றுடன் திண்டுக்கல்லில் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இன்று முதல் சேலத்தில் லீக் ஆட்டங்கள் தொடங்குகிறது. இங்கு 8 ஆட்டங்கள் நடக்கிறது.

    இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கில் பாபா அபராஜித், ஜெகதீசன், பிரதேஷ் ரஞ்சன் பால் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் சஞ்சய் யாதவ், ஹரீஸ் குமார் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகிறார்கள்.

    பந்து வீச்சில் ரஹில்ஷா, ராமலிங்கம் ரோகித், சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    நெல்லை அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் கேப்டன் அருண் காார்த்திக், அஜிதேஷ், சூர்யபிரகாஷ், சோனு யாதவ் ஆகியோர் உள்ளனர்.

    பந்து வீச்சில் பொய்யாமொழி, மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்சய் ஜெயின், ஹரீஸ், விக்னேஷ் ஆகியோர் உள்ளனர். அந்த அணி 4-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. 2 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை அணி 2 ஆட்டத்தில் விளையாடி இரண்டிலும் தோற்றது. அந்த அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. நாளைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நெல்லை அணி மதுரையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், கோவையை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
    • சேலம் அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 52 ரன்னில் தோற்றது

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. திண்டுக்கல் டிராகன்ஸ் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. கோவை கிங்ஸ் 3 வெற்றி, 1 தோல்வி யுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ரன்ரேட் அடிப்படையில் திண்டுக்கல் முன்னிலையில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும், நெல்லை ராயல் கிங்ஸ் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன. சேலம் ஸ்பார் டன்ஸ் 1 வெற்றி, 1 தோல்வி யுடனும், திருப்பூர் தமிழன்ஸ் 1 வெற்றி, 2 தோல்வியுடனும் தலா 2 புள்ளிகள் பெற்று உள்ளன.

    பால்சி திருச்சி 3 ஆட்டத்திலும், மதுரை பாந்தர்ஸ் 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை. டி.என்.பி.எல். போட்டியின் 13-வது `லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி மதுரையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், கோவையை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. திருப்பூர் அணியுடன் 7 விக்கெட்டில் தோற்றது. அந்த அணி சேலத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    சேலம் அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 52 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் திருச்சியை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • நெல்லை அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது.
    • திருப்பூர் தமிழன்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி கோவை அணி 2- வது வெற்றியை பெற்றது.

    திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கோவை கிங்சுக்கு 127 ரன் இலக்காக இருந்தது.

    ஹரீஷ் குமார் அதிகபட்சமாக 20 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), சசி தேவ் 23 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். யுதீஷ்வரன் 3 விக்கெட்டும், சித்தார்த் , ஷாரூக்கான், எம்.முகமது, சுப்பிரமணியன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய கோவை கிங்ஸ் 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சாய்சுதர்ஷன் தொடர்ந்து 3- வது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 43 பந்தில் 64 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), சுரேஷ்குமார் 34 பந்தில் 47 ரன்னும் (8 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்தனர்.

    கோவை அணி 2-வது வெற்றியை பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு முதல் தோல்வி ஏற்பட்டது.

    டி.என்.பி.எல். போட்டியின் 10-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் கோவை கிங்சை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

    இன்றைய ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் 'ஹாட்ரிக்' வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    திருப்பூர் தமிழன்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. கோவை அணியுடன் 70 ரன்னிலும், சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து அந்த அணி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படு கிறது.

    • ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    • 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

    'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும். கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.

    நேற்றைய ஓய்வுக்கு பிறகு டி.என்.பி.எல். போட்டிகள் இன்று முதல் திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சேலம் அணி திருச்சியை வீழ்த்தியது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    இதனால் மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக களமிறங்கிய எஸ்.கார்த்திக் மற்றும் ஹரி நிஷாந்த் ஆட்டத்தை தொடங்கினர்.

    எஸ்.கார்த்திக் 4 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்வர்ப்நில் சிங் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டத்தை இழந்தார்.

    தொடர்ந்து, தீபன் லிங்கேஷ் 9 ரன்களும், சுதன் கந்தீபன் பூஜ்ஜியம் ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களும், ஸ்ரீ அபிஷேக் ஒரு ரன்னும், முருகன் அஷ்வின் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    19 ஓவர்களில் தேவ் ராகுல் 14 ரன்களில் எடுத்திருந்தார். குரஜ்ப்நீத் சிங் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் ஒரு ரன்னிலேயே ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது.

    இதன்மூலம், 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.

    • கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார்.
    • 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர்.

    இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார். இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்கின.

    முதலில் பேட்டிங் செய்த ஆகாஷ் சும்ரா 10 ரன்கள் மற்றும் அமித் சத்விக் 22 ரன்களும் எடுத்தனர்.

    தொடர்ந்து, மான் பாஃனா 16 ரன்களும், மோகித் ஹரிஹரன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அபிஷேக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதி வரை விளையாடிய கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார். கடைசி பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து சேலம் அணியின் வெற்றி வாகையை சூடினார்.

    முகமது அத்னான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில், 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

    • மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார்.
    • இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

    அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர். இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்க உள்ளது.

    ×