search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் ஸ்பார்டன்ஸ்"

    • முதலில் ஆடிய கோவை அணி 199 ரன்கள் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கோவை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. ராம் அரவிந்த் அதிரடியாக ஆடி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும், ஆதீக் ரஹ்மான் 31 ரன்களும் எடுத்தனர்.

    சேலம் அணியின் சார்பில் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. கோவை அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சேலம் அணி வீரர்கள் சிக்கினர். இதனால் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. சன்னி சந்து அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் நீடிக்கிறது.

    கோவை அணி சார்பில் தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டும், ஷாருக் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சேலம் அணியின் பந்துவீச்சாளர் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
    • சுஜய் - சாய் சுதர்சன் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

    சேலம்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சேலத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    லைக்கா கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் சுரேஷ் குமார் 4 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், சுஜய் - சாய் சுதர்சன் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும் எடுத்தனர். ஆதீக் ரஹ்மான் 31 ரன்களும், ராம் அரவிந்த் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் அடிக்க, கோவை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. சேலம் அணியின் பந்துவீச்சாளர் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

    • நெல்லை அணி மதுரையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், கோவையை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
    • சேலம் அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 52 ரன்னில் தோற்றது

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. திண்டுக்கல் டிராகன்ஸ் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. கோவை கிங்ஸ் 3 வெற்றி, 1 தோல்வி யுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ரன்ரேட் அடிப்படையில் திண்டுக்கல் முன்னிலையில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும், நெல்லை ராயல் கிங்ஸ் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன. சேலம் ஸ்பார் டன்ஸ் 1 வெற்றி, 1 தோல்வி யுடனும், திருப்பூர் தமிழன்ஸ் 1 வெற்றி, 2 தோல்வியுடனும் தலா 2 புள்ளிகள் பெற்று உள்ளன.

    பால்சி திருச்சி 3 ஆட்டத்திலும், மதுரை பாந்தர்ஸ் 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை. டி.என்.பி.எல். போட்டியின் 13-வது `லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி மதுரையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், கோவையை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. திருப்பூர் அணியுடன் 7 விக்கெட்டில் தோற்றது. அந்த அணி சேலத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    சேலம் அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 52 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் திருச்சியை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது.
    • அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய சேலம் அணியில் கவின் 48 ரன்களும், டேரில் பெராரியா 60 ரன்களும் விளாச, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.

    துவக்க வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் சூரியபிரகாஷ்- பாபா அபராஜித் இருவரும் பொறுப்புடன் விளையாடி, ஸ்கோரை உயர்த்தினர். சூரிய பிரகாஷ் 35 ரன்களும், அபராஜித் 32 ரன்களும் அடித்தனர். பாபா இந்திரஜித் 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் அஜிதேஷ் அதிரடியாக ஆடி பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். ஜிதேந்திர குமார் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் சேர்த்தார்.

    இதனால் நெல்லை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் நெல்லை அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

    • ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார்.
    • நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்கள் ஜமால் (11), கோபிநாத் (10) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவின் 37 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசினார். அதன்பின், டேரில் பெராரியோ, நெல்லை பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தார்.

    மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார். அவர் 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார்.

    இதனால் சேலம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. பெராரியோ 60 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஆர்யா யோகன் மேனன், சஞ்சய் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

    ×