என் மலர்
கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: சேலம் அணிக்கு எதிராக சேப்பாக் அணி பந்து வீச்சு தேர்வு
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
- சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 3 ஆட்டத்தில் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் தோல்வியும் அடைந்துள்ளது.
சேலம்:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 11-ந்தேதியுடன் அங்கு 7 போட்டிகள் முடிவடைந்தன. 13-ந்தேதி முதல் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 17- வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 3 ஆட்டத்தில் (மதுரை, திருச்சி, திருப்பூர்) வெற்றி பெற்றது. நெல்லையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
Next Story






