search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
    • மதுரை பாந்தர்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டிகளில் வென்றுள்ளது.

    சேலம்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இரு அணி வீரர்கள் விவரம்:

    சேப்பாக்: பாபா அபராஜித் (கேப்டன்), ஹரிஷ் குமார், ஜெகதீசன், மதன் குமார், பிரதோஷ் ரஞ்சன் பால், ராகுல் ஷா, ரோகித், சஞ்சய் யாதவ், ராக்கி, சசிதேவ், சிலம்பரசன்.

    மதுரை: ஹரி நிஷாந்த் (கேப்டன்), ஆதித்யா, கவுசிக், ஸ்வப்னில் சிங், வாஷிங்டன் சுந்தர், லோகேஷ்வர், ஸ்ரீ அபிஷேக், தீபன் லிங்கேஷ், சரவணன், குர்ஜாப்னீத் சிங், அஜய் கிருஷ்ணன்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அடுத்து 3 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கி உள்ளது.

    மறுமுனையில் மதுரை பாந்தர்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டிகளில் வென்று, 2 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    Next Story
    ×