search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirumalai Nambi Temple"

    • திருக்குறுங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
    • திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல நேற்று வனத்துறையினர் தடை விதித்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலைநம்பி கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்ய ப்பட்ட சிறப்புமிக்க தாகும்.

    பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம். மேலும் தமிழ் மாத முதல் சனிக்கிழமை மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது. எனவே மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டப்படி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    இதையடுத்து திருக்குறு ங்குடி மலையில் உள்ள திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நேற்று வனத்துறையினர் தடை விதித்தனர். இதுபோல ஆற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே இன்று மழை இல்லாததால் ஆற்றில் கரை புரண்ட வெள்ளம் தணிந்தது.

    இதையடுத்து திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்க ப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மழை மீண்டும் பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    • திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இதையொட்டி வருகிற 10, 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலைநம்பி கோவில் உள்ளது.

    2 நாட்கள் தடை

    இக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலில் தமிழ்மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 10-ந்தேதி (வியாழக்கிழமை), 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மட்டும் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள்

    ஆனால் திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், 12-ந் தேதி (சனிக்கிழமை) முதல் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் திருக்குறுங்குடி வனசரகர் யோ கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • சபாநாயகர் அப்பாவு கோவிலின் சிறப்புகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
    • கொடை விழா கலை நிகழ்ச்சிகளை 12 மணி நேரமும் நடத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளார் என்றார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமலைநம்பி கோவில் உள்ளது.

    அன்னதானம்

    இந்த கோவிலில் தமிழ் மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் பக்தர்க ளுக்கு காலை, மதியம் வழங்கப்பட்டு வந்த அன்ன தானம் களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்ததால் நிறுத்தப்பட்டது.

    இதனால் பாதிப்படைந்த பக்தர்கள் கோவிலில் அன்னதானம் வழங்க வனத்துறையினர் விதித்துள்ள தடையை அகற்ற வேண்டும் என்று கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்தனர்.

    சபாநாயகர் தொடங்கி வைத்தார்

    இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அன்னதானம் வழங்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் அன்னதானம் வழங்க வனத்துறையினர் விதித்த தடை அகற்றப்பட்டது. சித்திரை மாத கடைசி சனிக்கிழமையான நேற்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

    கோவிலின் சிறப்பு

    முன்னதாக அவர் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோவிலின் சிறப்புகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    அதன் பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக, தொன்று தொட்டு நடந்து வரும், எந்த மத வழிபாடாக இருந்தாலும், அதற்கு தடையோ, இடையூறோ ஏற்படுத்தக் கூடாது என்பதிலும், வழிபாட்டிற்கு பாதுகாப்பாக அரசும், அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணமாகும்.

    12 மணி நேரம்

    கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கோவில் கொடை, திருவிழாக்களின் போது தான் மக்கள் மகிழ்ச்சியுடனும், உற்சா கத்துடனும் இருப்பார்கள். விழாக்களில் கிராமிய கலை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இவ்வாறு கோவில் விழாக்கள் கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளாக மட்டுமின்றி கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொடை விழாக்களுக்கு கோர்ட்டு வரை சென்று தான் அனுமதி பெற முடிந்தது. ஆனால் தி.மு.க. அரசு அமைந்ததும், முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடை விழாக்களுக்கும், ஆடல் பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் கொடை விழா கலை நிகழ்ச்சிகளை 12 மணி நேரமும் நடத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருக்குறுங்குடி வன சரகர் யோகேஸ்வரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான ராஜன், திருக்குறுங்குடி சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் மாடசாமி, நகர செயலாளர் கசமுத்து, ஸ்ரீதர், ராஜேந்திரன், ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×