search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The old man died"

    • கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் சாலையில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் சாலையில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் அவர் சுருண்டு விழுந்து இறந்தது தெரியவந்தது. அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியகளம் என்ற பகுதியில் சாலையைக் கடக்க முற்படும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பொன்னமலை மீது மோதியது.
    • இதில் படுகாயம் அடைந்த பொன்னமலையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி அடுத்த இளங்கோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னமலை ( வயது 80). இவர் கடந்த 4-ம் தேதி பெரியகளம் என்ற பகுதியில் சாலையைக் கடக்க முற்படும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பொன்னமலை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பொன்னமலையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற அந்த மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கடந்த 13-ம் தேதி வீடு திரும்பிய பொன்னமலை இன்று காலை வீட்டில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பட்டாசு மூட்டையை தூக்கி வீசியபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் கடந்த 14-ந் தேதி ஜானகி என்பவர் உடல்நலக்கு றைவால் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வ லத்தின் போது உறவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது பெரிய சாக்கு மூட்டையில் இருந்த பட்டாசில் தீப்பொறி விழுந்துள்ளது.

    இதனால், சாக்கு மூட்டை வைத்திருந்தவர்கள் அதனை தூக்கி வீசியுள்ளனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த அதே கிராமத்தை சேர்ந்த முனுசாமி(60), சிவாஜி(60) மீது பட்டாசு மூட்டை விழுந்துள்ளது.

    இதில், பட்டாசு வெடித்ததில் 2 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த வர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிவாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, முனுசாமியின் மனைவி முனியம்மாள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிகொண்டா ரோடு காமாட்சி அம்மன் கார்டன் அருகே மதுவிலக்கு அமலாக்க போலீஸ் நிலையம் அருகே வசிப்பவர் ஆறுமுகம் (வயது 85) முன்னாள் ராணுவ வீரர் நேற்று காலையில் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது குடியாத்தம் நகரில் இருந்து குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் தேர்வு எழுத ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக முதியவர் ஆறுமுகம் மீது பைக் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆறுமுகத்தை குடியாத்த அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்ததில் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    பலத்த காயமடைந்த மாணவர் தினேஷ் பாபு வேலூர் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு ள்ளார் இந்த விபத்து குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த கோணமலை பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி(வயது 60). இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று மதியம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரே மாசிலாமணி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர் பாராதவிதமாக மாசிலாமணியின் பைக் மீது மோதியது.

    இதில், தூக்கி வீசப்பட்ட மாசிலாமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாசிலாமணியின் உடல மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைவீதி சென்று விட்டு தனது வீட்டுக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
    • காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம் :

    நத்தக்காடையூர் அருகே உள்ள எழுமாத்தூர் தோட்டத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 73). விவசாயி. முதியவரான இவர் நத்தக்காடையூர் கடைவீதி சென்று விட்டு தனது வீட்டுக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவர் நத்தக்காடையூர் - முத்தூர் சாலை முதிபாறை என்ற இடத்தின் அருகே வந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.

    இந்த விபத்தில் அடிபட்டு பலத்த காயம் அடைந்த நாச்சிமுத்துவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாச்சிமுத்து வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 73). அதே பகுதியை சேர்ந்தவர் பாலு. நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் வள்ளிமலை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    பள்ளிக்குப்பம் ரெயில்வே கேட் அருகே வந்தனர். அப்போது அங்கிருந்த வேகத்தடையில் பைக் வேகமாக ஏறி இறங்கியது. இதில் பைக் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை என்று லோகநாதன் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார் லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பூட்டு தாக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தரம் (வயது 65) மற்றும் ரவி (45). ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் ஜதர்புரத்தில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது க கிருஷ்ணகிரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கிச் சென்ற கார் இருசக்கர வாகனம் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.

    இதில் பைக்கில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுந்தரம் பரிதாபமாக இறந்தார். ரவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசில் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 87), விவசாயி. இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

    பச்சையப்பன் மூட்டு வலியால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனடியாக அவரது மகன் ஏகாம்பரம் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குலதெய்வம் கோவிலுக்கு வந்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 60) இன்று அவரது குடும்பத்திருடன் சேர்ந்து வேலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு பஸ்சில் அவர்கள் வந்தனர்.

    முருகன் குடும்பத்தினர் அனைவருக்கும் டிக்கெட் எடுத்தார். பஸ் வேலூர் வந்ததும் அவரது குடும்பத்தினர் முருகனை இறங்குமாறு கூறினர. அப்போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகனை பரிசோதனை செய்தனர். இதில் அவர் பஸ்சில் திடீரென இறந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து முருகன் உடலை அவரது உறவினர்கள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முருகன் இயற்கையாக இறந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள செம்மாம்பாடி, கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ணு (வயது 65). கூலித் தொழிலாளி. இவர் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காததால் விரக்தி அடைந்த மண்ணு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மண்ணு, இறந்து விட்டார். இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய பஸ் நிலையத்தில் முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.

    அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பலியானார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×