என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மீது கார் மோதி முதியவர் பலி
- வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த கோணமலை பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி(வயது 60). இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று மதியம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரே மாசிலாமணி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர் பாராதவிதமாக மாசிலாமணியின் பைக் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட மாசிலாமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாசிலாமணியின் உடல மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






