என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்வி"
- உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பனியன் நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது.
- குழந்தைகளை வேலைக்கு பணியமர்த்துவதை தடுக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பாக உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பனியன் நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக தொழில் அதிபர் மெஜஸ்டிக் கந்தசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில், குழந்தைகள் நமக்கு தெய்வம் தந்த வரம், அவர்கள் எதிர்காலம் சிறக்க நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டும். குழந்தைகளை வேலைக்கு பணியமர்த்துவதை தடுக்க வேண்டும்.அவர்களுக்கு நல்ல கல்வியை தரவேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு செல்ல ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
மேலும் ஒவ்வொரு குழந்தை தொழிலாளி உருவாகும் போது எண்ணற்ற சாதனையாளர்களை இழக்கிறோம்.நாட்டின் எதிர்காலம் இருண்டு விடும் என்றார். பிறகு மாணவ செயலர்கள் விஜய், ராஜபிரபு, பூபதிராஜா ஆகியோர் தலைமையில் பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் அனைவருக்கும் சமூகநீதி, குழந்தை தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுங்கள் என்ற மைய கருத்தை வலியுறுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- நீலகிரியில் 10ம் வகுப்பு முடிக்கும் மாணவ - மாணவிகள் பலர் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூருக்கும் சென்று தங்கி விடுகின்றனர்.
- ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
திருப்பூர்:
நீலகிரி உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் மேல்நிலைக் கல்வி பயில்வோர் எண்ணிக்கை குறைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதியோர் எண்ணிக்கையில் நீலகிரி மாவட்டம் தான் கடைசி இடத்தில் உள்ளது. 10-ம் வகுப்பில் 7,090 பேர் தேர்வெழுதியதில் 6,297 பேர், பிளஸ் 1ல் 6,199 பேர் தேர்வெழுதியதில் 5,588 பேர், பிளஸ் 2ல் 7,989 பேர் தேர்வெழுதியதில் 6,559 பேர் தேர்ச்சி பெற்றனர்.
திருப்பூர் மாவட்ட ஜே.இ.இ., மற்றும் ஐ.ஐ.டி., தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:-
நீலகிரியில் 10ம் வகுப்பு முடிக்கும் மாணவ - மாணவிகள் பலர் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூருக்கும் சென்று தங்கி விடுகின்றனர். பலர் 10ம் வகுப்பு முடித்த நிலையில் சுய தொழில் மீது ஆர்வம் கொண்டு மேல் கல்வியை தொடராமல் இருக்கின்றனர்.பள்ளி இடைநிற்றல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களது குழந்தைகள் பள்ளிக்கல்வியை தொடர்கின்றனரா என்பதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். பலர் வேலை தேடி கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு குடும்பத்துடன் வந்துவிடுகின்றனர்.நீலகிரி மட்டுமின்றி மலை மாவட்டங்கள், சுற்றுலா தலங்களில் மாணவ - மாணவிகளின் மேல்நிலை மற்றும் உயர்கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு நடத்தப்படுவது சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்